| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| இளையராஜா | எஸ். ஜானகி & மனோ | இளையராஜா | நாடோடித் தென்றல் |
Maniyae Manikuyilae Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : மணியே மணிக்குயிலே…
மாலை இளம் கதிரழகே…
கொடியே கொடிமலரே…
கொடி இடையின் நடையழகே…
ஆண் : தொட்ட இடம் பூமணக்கும்…
துளிர்க்கரமோ தொட இனிக்கும்…
ஆண் : பூமரப் பாவை நீயடி…
இங்கு நான் பாடும்…
பாமரப் பாடல் கேளடி…
பெண் : ஓஹோ ஹோ ஓஓஓ…
மணியே மணிக்குயிலே…
மாலை இளம் கதிரழகே…
ஆண் : கொடியே கொடிமலரே…
கொடி இடையின் நடையழகே…
—BGM—
ஆண் : பொன்னில் வடித்த சிலையே…
பிரம்மன் படைத்தான் உனையே…
வண்ணமயில் போல வந்த பாவையே…
பெண் : எண்ண இனிக்கும் நிலையே…
இன்பம் கொடுக்கும் கலையே…
உன்னை எண்ணி வாழும் எந்தன் ஆவியே…
ஆண் : கண்ணிமையில் தூண்டிலிட்டு…
காதல்தனை தூண்டிவிட்டு…
எண்ணி எண்ணி ஏங்கவைக்கும் ஏந்திழையே…
பெண் : பெண்ணிவளை ஆதரித்து…
பேசித்தொட்டுக் காதலித்து…
இன்பம்கண்ட காரணத்தால் தூங்கலையே…
ஆண் : சொல்லிச் சொல்லி ஆசை வைத்தேன்…
கொடி இடையில் பாசம் வைத்தேன்…
ஆண் : பூமரப் பாவை நீயடி…
இங்கு நான் பாடும்…
பாமரப் பாடல் கேளடி…
பெண் : ஓஹோ ஹோ ஓஓஓ…
மணியே மணிக்குயிலே…
மாலை இளம் கதிரழகே…
ஆண் : கொடியே கொடிமலரே…
கொடி இடையின் நடையழகே…
பெண் : தொட்ட இடம் பூமணக்கும்…
துளிர்க்கரமோ தொட இனிக்கும்…
ஆண் : பூமரப் பாவை நீயடி…
இங்கு நான் பாடும்…
பாமரப் பாடல் கேளடி…
—BGM—
பெண் : கண்ணிமைகளை வருத்தி…
கனவுகளைத் துரத்தி…
மென்மனதினால் முடித்த மூக்குத்தி…
ஆண் : என்னுயிரிலே ஒருத்தி…
கண்டபடி என்னை துரத்தி…
அம்மனவள் வாங்கி கொண்ட மூக்குத்தி…
பெண் : கோடிமணி ஓசைநெஞ்சில்…
கூடி வந்துதான் ஒலிக்க…
ஓடி வந்து கேட்கவரும் தேவதைகள்…
—BGM—
ஆண் : சூடமலர் மாலை கொண்டு…
தூபமிட்டு தூண்டிவிட்டு…
கூடவிட்டு வாழ்த்தவரும் வானவர்கள்…
பெண் : அந்தி வரும் நேரமம்மா…
ஆசை விளக்கேற்றுதம்மா…
ஆண் : பூமரப் பாவை நீயடி…
இங்கு நான் பாடும்…
பாமரப் பாடல் கேளடி…
பெண் : ஓஹோ ஹோ ஓஓஓ…
மணியே மணிக்குயிலே…
மாலை இளம் கதிரழகே…
மணியே மணிக்குயிலே…
மாலை இளம் கதிரழகே…
பெண் : தொட்ட இடம் பூமணக்கும்…
துளிர்க்கரமோ தொட இனிக்கும்…
ஆண் : பூமரப் பாவை நீயடி…
இங்கு நான் பாடும்…
பாமரப் பாடல் கேளடி…
பெண் : ஓஹோ ஹோ ஓஓஓ…
நானன நான நான நா…
ஓஹோ ஹோ ஓஓஓ…
நானன நான நான நா…
Notes : Maniyae Manikuyilae Song Lyrics in Tamil. This Song from Nadodi Thendral (1992). Song Lyrics penned by Ilaiyaraaja. மணியே மணிக்குயிலே பாடல் வரிகள்.
