பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
ஆத்மநாதன் | டி.எம்.சௌந்தரராஜன் & பி. சுசீலா | ஆர்.பார்த்தசாரதி | அவன் பித்தனா |
Iraivan Irukkindrana Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : இறைவன் இருக்கின்றானா… ஆ…
இறைவன் இருக்கின்றானா மனிதன் கேட்கிறான்…
அவன் இருந்தால் உலகத்திலே எங்கே வாழ்கிறான்…
எங்கே வாழ்கிறான்…
ஆண் : நான் ஆத்திகனானேன்…
அவன் அகப்படவில்லை…
நான் நாத்திகனானேன்…
அவன் பயப்படவில்லை…
—BGM—
பெண் : மனிதன் இருக்கிறானா… ஆஆ…
மனிதன் இருக்கிறானா… ஆ… இறைவன் கேட்கிறான்…
அவன் இருந்தால் உலகத்திலே எங்கே வாழ்கிறான்…
எங்கே வாழ்கிறான்…
பெண் : நான் அன்பு காட்டினேன்…
அவன் ஆட்கொள்ளவில்லை…
இந்தத் துன்பம் தீர்க்கவும்…
அவன் துணை வரவில்லை…
—BGM—
பெண் : கண்ணிலே உறுதி இல்லை…
காதலுக்கோர் நீதியில்லை…
ஒரு நாள் இருந்த மனம்…
மறு நாள் இருக்கவில்லை…
பெண் : குடிசையில் ஓர் மனது…
கோபுரத்தில் ஓர் மனது…
கூடாத சேர்க்கை எல்லாம்…
கூடினால் பல மனது…
பெண் : மனிதன் இருக்கிறானா… ஆ…
—BGM—
ஆண் : பார்ப்பவன் குருடனடி…
படிப்பவன் மூடனடி…
உள்ளதை சொல்பவனே…
உலகத்தில் பித்தனடி…
ஆண் : நீரோ கொதிக்குதடி…
நெருப்போ குளிருதடி…
வெண்மையைக் கருமை என்று…
கண்ணாடி காட்டுதடி…
ஆண் : இறைவன் இருக்கின்றானா… ஆ…
—BGM—
பெண் : ஒன்றையே நினைத்திருந்தும்…
ஒன்றாக வாழ்ந்திருந்தும்…
பெண்ணாகப் பிறந்தவரை…
கண்ணாக யார் நினைத்தார்…
பெண் : இருந்தால் இருந்த இடம்…
இல்லையேல் மறந்து விடும்…
இவர்தான் மனிதரென்றால்…
இயற்கையும் நின்று விடும்…
பெண் : மனிதன் இருக்கிறானா… ஆ…
—BGM—
ஆண் : சந்தேகம் பிறந்து விட்டால்…
சத்தியமும் பலிப்பதில்லை…
சத்தியத்தைக் காப்பவரும்…
சாட்சி சொல்ல வருவதில்லை…
ஆண் : வழக்கும் முடியவில்லை…
மனிதரின் தீர்ப்பும் இல்லை…
மனிதனை மறந்து விட்டு…
வாழ்பவன் இறைவன் இல்லை…
ஆண் : இறைவன் இருக்கின்றானா… ஆ…
பெண் : மனிதன் இருக்கிறானா… ஆ…
ஆண் : இறைவன் இருக்கின்றானா மனிதன் கேட்கிறான்…
பெண் : அவன் இருந்தால் உலகத்திலே எங்கே வாழ்கிறான்…
எங்கே வாழ்கிறான்…
Notes : Iraivan Irukkindrana Song Lyrics in Tamil. This Song from Avan Pithana? (1966). Song Lyrics penned by Athmanathan. இறைவன் இருக்கின்றானா பாடல் வரிகள்.