மாலை நேரம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
செல்வராகவன்ஆண்ட்ரியா ஜெரெமையா & ஜி. வி. பிரகாஷ் குமார்ஜி. வி. பிரகாஷ் குமார்ஆயிரத்தில் ஒருவன் (2010)

Maalai Neram Song Lyrics in Tamil


BGM

பெண் : மாலை நேரம் மழைத்தூரும் காலம்…
என் ஜன்னல் ஓரம் நிற்க்கிறேன்…
நீயும் நானும் ஒருப்போர்வைக்குள்ளே…
சிறு மேகம் போலே மிதக்கிறேன்…

பெண் : ஓடும் காலங்கள் உடன் ஓடும் நினைவுகள்…
வழிமாறும் பயணங்கள் தொடர்கிறதே…
இதுதான் வாழ்க்கையா ஒரு துணைதான் தேவையா…
மனம் ஏனோ என்னையே கேட்கிறதே…

பெண் : ஓ காதல் இங்கே ஓய்ந்தது…
கவிதை ஒன்று முடிந்தது…
தேடும் போதே தொலைந்தது அன்பே…

பெண் : இது சோகம் ஆனால் ஒரு சுகம்…
நெஞ்சின் உள்ளே பரவிடும்…
நாம் பழகிய காலம் பரவசம் அன்பே…
இதம் தருமே…

BGM

பெண் : உன் கரம் கோர்க்கையில் நினைவு ஓராயிரம்…
பின் இருகரம் பிரிகையில் நினைவு நூறாயிரம்…

பெண் : காதலில் விழுந்த இதயம் மீட்க முடியாதது…
கணவில் தொலைந்த நிஜங்கள் மீண்டும் கிடைக்காதது…

பெண் : ஒரு காலையில் நீயில்லை…
தேடவும் மனம் வரவில்லை…
பிரிந்ததும் புரிந்தது நான் என்னை இழந்தேன் என…

பெண் & ஆண் : ஓ காதல் இங்கே ஓய்ந்தது…
கவிதை ஒன்று முடிந்தது…
தேடும் போதே தொலைந்தது அன்பே…

பெண் & ஆண் : இது சோகம் ஆனால் ஒரு சுகம்…
நெஞ்சின் உள்ளே பரவிடும்…
நாம் பழகிய காலம் பரவசம் அன்பே…
பெண் : இதம் தருமே…

BGM

பெண் : ஒரு முறை வாசலில் நீயாய் வந்தால் என்ன…
நான் கேட்கவே துடித்திடும் வார்த்தை சொன்னால் என்ன…

பெண் : இரு மனம் சேர்கையில் பிழைகள்…
பொறுத்துக்கொண்டால் என்ன…
இரு திசைப்பறவைகள் இணைந்தே…
விண்ணில் சென்றால் என்ன…

பெண் : என் தேடல்கள் நீ இல்லை…
உன் கனவுகள் நான் இல்லை…
இருவிழிப் பார்வையில் நாம் உருகி நின்றால் என்ன…

BGM

பெண் : மாலை நேரம் மழைத்தூரும் காலம்…
என் ஜன்னல் ஓரம் நிற்க்கிறேன்…
நீயும் நானும் ஒருப்போர்வைக்குள்ளே…
சிறு மேகம் போலே மிதக்கிறேன்…

பெண் : ஓடும் காலங்கள் உடன் ஓடும் நினைவுகள்…
வழிமாறும் பயணங்கள் தொடர்கிறதே…
இதுதான் வாழ்க்கையா ஒரு துணைதான் தேவையா…
மனம் ஏனோ என்னையே கேட்கிறதே…

பெண் : ஓ காதல் இங்கே ஓய்ந்தது…
ஆண் : ஓய்ந்தது…
பெண் : கவிதை ஒன்று முடிந்தது…
ஆண் : முடிந்தது…

பெண் : தேடும் போதே தொலைந்தது அன்பே…
ஆண் : அன்பே… அன்பே…
பெண் : இது சோகம் ஆனால் ஒரு சுகம்…
ஆண் : ஒரு சுகம்…

பெண் : நெஞ்சின் உள்ளே பரவிடும்…
நாம் பழகிய காலம் பரவசம் அன்பே…
இதம் தருமே… இதம் தருமே…

BGM


Notes : Maalai Neram Song Lyrics in Tamil. This Song from Aayirathil Oruvan (2010). Song Lyrics penned by Selvaraghavan. மாலை நேரம் பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top