பாடலாசிரியர் | பாடகர் | இசையமைப்பாளர் | திரைப்படம் |
விக்னேஷ் ராமகிருஷ்ணா | ஆதித்யா ஆர் கே | சித்து குமார் | கண்ணை நம்பாதே |
Kuru Kuru Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : களவடிப்போன கண்ணுகுள்ள கத்தி வச்சாளே…
கலையாத தலைய பத்து வாட்டி சீவ வச்சாளே…
விடியாத போதும் விட்டு விட்டு முழிக்க வச்சாளே…
தொலையாதே போதும் என்ன தேடி அலைய வச்சாளே…
ஆண் : செலவெல்லாம் அவளா…
வரவெல்லாம் நானா…
கதையெல்லாம் அவளா…
படிச்சேன் நானா…
மழை எல்லாம் அவளா…
நனைஞ்சேனே நானா…
வாடி வாசல் தாண்டி…
ஆண் : ஏய்… குறு குறுன்னு கண் குறுவுது…
காரணம் இவளா…
ஏய்… விறு விறுன்னு பெண் இழுக்குது…
காயகம் இவளா…
—BGM—
ஆண் : கிட்ட இவ இருக்கும் ஒரு நொடி…
தொட்டா தெறி தெறிக்கும் மின்சார அடி அடி…
கட்டி இவ புடிக்கும் சுகமடி…
கொத்தா உசுருகுள்ள குத்தால குளுரடி…
ஆண் : என்ன பாத்தது போதும்…
வெட்டி சாச்சது போதும்…
கண்ணு பாத்தது போதும்…
கொஞ்சம் நான் வாழதான் வேணும்…
ஆண் : தள்ளி போட்டது போதும்…
முத்தம் கேட்டது போதும்…
மொத்தம் காத்தது போதும்…
எல்லாமே சொல்லாம வேணுமே…
—BGM—
ஆண் : களவாடிப்போன கண்ணுகுள்ள கத்தி வச்சாளே…
கலையாத தலைய பத்து வாட்டி சீவ வச்சாளே…
ஆண் : செலவெல்லாம் அவளா…
வரவெல்லாம் நானா…
கடையெல்லாம் அவளா…
படிச்சேனே நானா…
மழை எல்லாம் அவளா…
நனஞ்சேனே நானா…
வாடி வாசல் தாண்டி…
ஆண் : விழி எல்லாம் அவளா… ஹோ ஓ ஓ…
பகலாச்சே இரவா…
இனி எல்லாம் அவளா ஹோ ஓ ஓ…
வாடி வாசல் தாண்டி…
ஆண் : ஏய்… குறு குறுனு கண் குறுவுது…
காரணம் இவளா…
ஏய்… விறு விறுன்னு பெண் இழுக்குது…
காயகம் இவளா…
Notes : Kuru Kuru Song Lyrics in Tamil. This Song from Kannai Nambathey (2023). Song Lyrics penned by Vignesh Ramakrishna. குறு குறு பாடல் வரிகள்.