கூட்டத்தில குனுஞ்சி நிக்கிற

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்மலேசியா வாசுதேவன், கே.எஸ்.சித்ரா & டி.எஸ்.ராகவேந்திராஇளையராஜாகும்பக்கரை தங்கய்யா

Kootathula Kuninchu Song Lyrics in Tamil


BGM

ஆண் : சந்தனம் மாரியே சாமி எங்கள் தேவியே…
மந்திரமாக் காத்து நிற்கும் காளியே… தாயே…
சந்தனம் மாரியே சாமி எங்கள் தேவியே…
மந்திரமாக் காத்து நிற்கும் காளியே… அம்மா…

ஆண் : வந்திருந்து தாருமம்மா…
வாழ்க்கை இதைப் பாருமம்மா…
கேட்டதெல்லாம் நீ தருவாயே…தேவி…

ஆண் : வந்திருந்து தாருமம்மா…
வாழ்க்கை இதைப் பாருமம்மா…
கேட்டதெல்லாம் நீ தருவாயே… தேவி… அம்மா…

BGM

ஆண் : கூட்டத்துல குனிஞ்சு நிக்கிற குருவம்மா…
வாட்டமுள்ள பருவம்மா…
ஏ… கூட்டத்துல குனிஞ்சு நிக்கிற குருவம்மா…
வாட்டமுள்ள பருவம்மா…

ஆண் : ரெட்டமாட்டு வண்டியில் ஊருவலமா வருவம்மா…
சுத்தி திரிவம்மா…
பாட்டுப் படிச்சு பாலும் பழமும் தருவம்மா…

ஆண் : ரெட்டமாட்டு வண்டியில் ஊருவலமா வருவம்மா…
சுத்தி திரிவம்மா…
பாட்டுப் படிச்சு பாலும் பழமும் தருவம்மா…

பெண் : இஷ்டப்பட்டு சுத்தி வருகிற ராசரே…
என்ன பேச்சு பேசுற…
ஹோ… இஷ்டப்பட்டு சுத்தி வருகிற ராசரே…
என்ன பேச்சு பேசுற…

பெண் : நீ எதுக்கு இப்படி அரைச்ச சந்தனம் பூசுற மகராசரே…
மறந்த கதைய எடுத்து எடுத்து வீசுற…
நீ எதுக்கு இப்படி அரைச்ச சந்தனம் பூசுற மகராசரே…
மறந்த கதைய எடுத்து எடுத்து வீசுற…

BGM

ஆண் : ஹே… மல்லியப்பூ மணக்குற எடம் மதுரைதான்…
மாமன் ஏறும் குதுரைதான்…
அடியே மல்லியப்பூ மணக்குற எடம் மதுரைதான்…
மாமன் ஏறும் குதுரைதான்…

ஆண் : நீ சொல்லிய சொல்லுல துள்ளி வடியுது…
மதுரந்தான் நல்ல அதரந்தான்…
சொக்கிக் கெடக்குறேன் சொல்லடி நீ நல்ல வெவரந்தான்…

ஆண் : நீ சொல்லிய சொல்லுல துள்ளி வடியுது…
மதுரந்தான் நல்ல அதரந்தான்…
சொக்கிக் கெடக்குறேன் சொல்லடி நீ நல்ல வெவரந்தான்…

பெண் : துள்ளி வந்து தூபம் போடும் காளையே…
வேறயில்ல வேலையே…
ஹோ… துள்ளி வந்து தூபம் போடும் காளையே…
வேறயில்ல வேலையே…

பெண் : ஒரு புள்ளியை வச்சதும் சொல்லியேக் கட்டுறேன்…
மாலையே பட்டுச் சேலையே…
மல்லிகப்பூ ஒன்னு வந்து விழுகுறேன் மேலயே…

பெண் : ஒரு புள்ளியை வச்சதும் சொல்லியேக் கட்டுறேன்…
மாலையே பட்டுச் சேலையே…
மல்லிகப்பூ ஒன்னு வந்து விழுகுறேன் மேலயே…

BGM

ஆண் : கஷ்டப்பட்ட மனசைத் தேத்தப் பொறந்தவ…
கன்னிப் பொண்ணு சிறந்தவ…

ஆண் : ஹே…கஷ்டப்பட்ட மனசைத் தேத்தப் பொறந்தவ…
கன்னிப் பொண்ணு சிறந்தவ…

ஆண் : இந்தக் காளை மனசை நெனச்சு…
ஒலகை மறந்தவ விட்டுப் பறந்தவ…
கனவு முழுக்க நெறைஞ்சு சொகத்தக் கறந்தவ…

ஆண் : இந்தக் காளை மனசை நெனச்சு…
ஒலகை மறந்தவ விட்டுப் பறந்தவ…
கனவு முழுக்க நெறைஞ்சு சொகத்தக் கறந்தவ…

பெண் : பாவலரு வரதராசன் பாட்டுத்தான்…
ஆட வேணும் கேட்டுத்தான்…

ஆண் & பெண் : பாவலரு வரதராசன் பாட்டுத்தான்…
ஆட வேணும் கேட்டுத்தான்…

பெண் : அந்தப் பாட்டைப் படிக்க…
நமக்குக் கெடைக்கும் ஓட்டுத்தான்…
அதைப் போட்டுத்தான்…
எணைஞ்சு இருக்க வேணும் நமது கூட்டுத்தான்…

ஆண் & பெண் : அந்தப் பாட்டைப் படிக்க…
நமக்குக் கெடைக்கும் ஓட்டுத்தான்…
அதைப் போட்டுத்தான்…
எணைஞ்சு இருக்க வேணும் நமது கூட்டுத்தான்…


Notes : Kootathula Kuninchu Song Lyrics in Tamil. This Song from Kumbakarai Thangaiah (1991). Song Lyrics penned by Gangai amaran. கூட்டத்தில குனுஞ்சி நிக்கிற பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top