பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வாலி | பி.பி.ஸ்ரீனிவாஸ் & பி. சுசீலா | எம்.எஸ்.விஸ்வநாதன் | மோட்டார் சுந்தரம் பிள்ளை |
Kathiruntha Kangale Song Lyrics in Tamil
—BGM—
பெண் : காத்திருந்த கண்களே…
கதையளந்த நெஞ்சமே…
ஆசை என்னும் வெள்ளமே…
பொங்கி பெருகும் உள்ளமே…
பெண் : காத்திருந்த கண்களே…
கதையளந்த நெஞ்சமே…
ஆசை என்னும் வெள்ளமே…
பொங்கி பெருகும் உள்ளமே…
ஆண் : கண்ணிரண்டில் வெண்ணிலா…
கதைகள் சொல்லும் பெண்ணிலா…
கண்ணிரண்டில் வெண்ணிலா…
கதைகள் சொல்லும் பெண்ணிலா…
நானிருந்தும் நீயிலா வாழ்வில் ஏது தேனிலா…
ஆண் : கண்ணிரண்டில் வெண்ணிலா…
கதைகள் சொல்லும் பெண்ணிலா…
நானிருந்தும் நீயிலா வாழ்வில் ஏது தேனிலா…
—BGM—
பெண் : மைவிழி வாசல் திறந்ததிலே…
ஒரு மன்னவன் நுழைந்ததென்ன…
அவன் வருவதினாலே இந்த இதழ்களின் மேலே…
புன்னகை விளைந்ததென்ன…
—BGM—
பெண் : மைவிழி வாசல் திறந்ததிலே…
ஒரு மன்னவன் நுழைந்ததென்ன…
அவன் வருவதினாலே இந்த இதழ்களின் மேலே…
புன்னகை விளைந்ததென்ன…
ஆண் : பொழுதொரு கனவை விழிகளிலே…
கொண்டு வருகின்ற வயதல்லவோ…
பொழுதொரு கனவை விழிகளிலே…
கொண்டு வருகின்ற வயதல்லவோ…
ஆண் : ஒரு தலைவனை அழைத்து தனி இடம் பார்த்து…
தருகின்ற மனதல்லவோ… தருகின்ற மனதல்லவோ…
பெண் : காத்திருந்த கண்களே…
கதையளந்த நெஞ்சமே…
ஆசை என்னும் வெள்ளமே…
பொங்கி பெருகும் உள்ளமே…
—BGM—
ஆண் : கைவிரலாலே தொடுவதிலே…
இந்த பூமுகம் சிவந்ததென்ன…
இரு கைகளினால் நீ முகம் மறைத்தால்…
இந்த வையகம் இருண்டதென்ன…
பெண் : செவ்விதழோரம் தேனெடுக்க இந்த நாடகம் நடிப்பதென்ன…
என்னை அருகினில் அழைத்து இரு கரம் அணைத்து…
மயக்கத்தை கொடுப்பதென்ன…
மயக்கத்தை கொடுப்பதென்ன…
பெண் : காத்திருந்த கண்களே…
கதையளந்த நெஞ்சமே…
ஆசை என்னும் வெள்ளமே…
பொங்கி பெருகும் உள்ளமே…
—BGM—
Notes : Kathiruntha Kangale Song Lyrics in Tamil. This Song from Motor Sundaram Pillai (1966). Song Lyrics penned by Vaali. காத்திருந்த கண்களே பாடல் வரிகள்.