பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வாலி | டி.எம்.சௌந்தரராஜன் | எஸ்.எம்.சுப்பையா நாயுடு | சக்கரம் |
Kasethan Kadavulappa Song Lyrics in Tamil
ஆண் : காசேதான் கடவுளப்பா…
அந்த கடவுளுக்கும் இது தெரியுமப்பா…
அந்த கடவுளுக்கும் இது தெரியுமப்பா…
—BGM—
ஆண் : காசேதான் கடவுளப்பா…
கடவுளுக்கும் இது தெரியுமப்பா…
காசேதான் கடவுளப்பா…
அந்த கடவுளுக்கும் இது தெரியுமப்பா…
ஆண் : கைக்கு கை மாறும் பணமே…
உன்னை கைப்பற்ற நினைக்குது மனமே…
கைக்கு கை மாறும் பணமே…
உன்னை கைப்பற்ற நினைக்குது மனமே…
ஆண் : நீ தேடும்போது வருவதுண்டோ…
விட்டுபோகும்போது சொல்வதுண்டோ…
நீ தேடும்போது வருவதுண்டோ…
விட்டுபோகும்போது சொல்வதுண்டோ…
ஆண் : காசேதான் கடவுளப்பா…
அந்த கடவுளுக்கும் இது தெரியுமப்பா…
—BGM—
ஆண் : தாயை தவிர தந்தையை தவிர…
காசால் எதையும் வாங்கிடலாம்…
தாயை தவிர தந்தையை தவிர…
காசால் எதையும் வாங்கிடலாம்…
ஆண் : தலையா பூவா போட்டுப் பாா்த்து…
தலை வணங்காமல் வாழ்ந்திடலாம்…
—BGM—
ஆண் : கல்லறை கூட சில்லறை இருந்தால்…
வாய் திறந்தே மொழி பேசுமடா…
கல்லறை கூட சில்லறை இருந்தால்…
வாய் திறந்தே மொழி பேசுமடா…
ஆண் : இல்லாதவா் சொல் சபை ஏறாமல்…
ஏழனமாக போகுமடா…
ஆண் : காசேதான் கடவுளப்பா…
அந்த கடவுளுக்கும் இது தெரியுமப்பா…
—BGM—
ஆண் : அளவுக்கு மேலே பணம் வைத்திருந்தால்…
அவனும் திருடனும் ஒன்றாகும்…
அளவுக்கு மேலே பணம் வைத்திருந்தால்…
அவனும் திருடனும் ஒன்றாகும்…
ஆண் : வரவுக்கு மேலே செலவுகள் செய்தால்…
அவனும் குருடனும் ஒன்றாகும்…
ஆண் : களவுக்கு போகும் பொருளை எடுத்து…
வறுமைக்கு தந்தால் தருமமடா…
களவுக்கு போகும் பொருளை எடுத்து…
வறுமைக்கு தந்தால் தருமமடா…
ஆண் : பூட்டுக்கு மேலே பூட்டை போட்டு…
பூட்டி வைத்தால் அது கருமமடா…
ஆண் : காசேதான் கடவுளப்பா…
அந்த கடவுளுக்கும் இது தெரியுமப்பா…
—BGM—
ஆண் : கொடுத்தவன் முழிப்பான்…
எடுத்தவன் முடிப்பான்…
அடுத்தவன் பார்த்தால் சிரிப்பானே…
—BGM—
ஆண் : கொடுத்தவன் முழிப்பான்…
எடுத்தவன் முடிப்பான்…
அடுத்தவன் பார்த்தால் சிரிப்பானே…
ஆண் : சிரித்தவன் அழுவதும்…
அழுதவன் சிரிப்பதும்…
பணத்தால் வந்த நிலைதானே…
—BGM—
ஆண் : சிரித்தவன் அழுவதும்…
அழுதவன் சிரிப்பதும்…
பணத்தால் வந்த நிலைதானே…
ஆண் : கையிலும் பையிலும் ஓட்டமிருந்தால்…
கூட்டமிருக்கும் உன்னோடு…
தலைகளையாட்டும் பொம்மைகள் எல்லாம்…
தாளங்கள் போடும் பின்னோடு…
—BGM—
ஆண் : காசேதான் கடவுளப்பா…
அந்த கடவுளுக்கும் இது தெரியுமப்பா…
கைக்கு கை மாறும் பணமே…
உன்னை கைப்பற்ற நினைக்குது மனமே…
ஆண் : நீ தேடும்போது வருவதுண்டோ…
விட்டு போகும்போது சொல்வதுண்டோ…
நீ தேடும்போது வருவதுண்டோ…
விட்டு போகும்போது சொல்வதுண்டோ…
—BGM—
Notes : Kasethan Kadavulappa Song Lyrics in Tamil. This Song from Chakkaram (1968). Song Lyrics penned by Vaali. காசேதான் கடவுளப்பா பாடல் வரிகள்.