கரிசல் காட்டுபெண்ணே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
எஸ். ஏ. ராஜ்குமார்கே.எஸ்.சித்ரா & மாணிக்க விநாயகம்எஸ். ஏ. ராஜ்குமார்ராஜா

Karisal Kaattu Penne Song Lyrics in Tamil


ஆண் : ஊசியிலை காட்டுகுள்ள…
ஒத்தயில போற புள்ள…
மாமன் நியாபகத்தில்…
யாரை தேடியிங்கு…
பாட்டு நீ படிச்ச…

BGM

பெண் : கரிசல் காட்டு பெண்ணே…
என் அவனை கண்டாயா…
கவிதை பேசும் கண்ணே…
என் அவனை கண்டாயா…

பெண் : என் இரு விழி நடுவினில்…
இருப்பவன் எவனோ…
அவனை கண்டாயா…

பெண் : என் இருதய நரம்பினை…
அறுத்தவன் எவனோ…
அவனை கண்டாயா…

பெண் : கொஞ்சம் கனவு கொடுத்தவன்…
என் தூக்கம் திருடி சென்றான்…
என்னை தன்னில் இணைத்தவன்…
இன்று ஏனோ தனியே சென்றான்…

குழு : உன் இரு விழி நடுவினில்…
இருப்பவன் எவனோ…
அவனை கண்டாயா…

குழு : உன் இருதய நரம்பினை…
அறுத்தவன் எவனோ…
அவனை கண்டாயா…

பெண் : கரிசல் காட்டு பெண்ணே…
என் அவனை கண்டாயா…
கவிதை பேசும் கண்ணே…
என் அவனை கண்டாயா…

BGM

பெண் : ஓ ஓ… ஒரு முறை பார்த்தால்…
உயிர் வரை வேர்த்தேன்…
அசைவத்தில் ஆசை அதிகம்…
என்னை தின்றானே…

BGM

பெண் : ஓ ஓ… அவன் மட்டும் இங்கே…
ஒரு நொடி வந்தால்…
அரை டஜன் பிள்ளை பெற்று…
கையில் தருவேனே…

பெண் : அவன் மல்லிகை உதடுகள் பிடிக்கும்…
அவன் மார்பின் முடிகள் பிடிக்கும்…
ஐயோ சந்தன நிறமோ பிடிக்கும்…
கொஞ்சம் சாய்கின்ற நடையும் பிடிக்கும்…

பெண் : என் அவனுக்கு மட்டும்…
யானை பலத்தில் ஏழு மடங்காச்சே…
அவன் ஒரு விரல் தீண்டி…
நொறுங்கிடவே நான் உயிரை வளர்த்தேனே…

பெண் : கரிசல் காட்டு பெண்ணே…
என் அவனை கண்டாயா…
கவிதை பேசும் கண்ணே…
என் அவனை கண்டாயா…

குழு : தாமரை பெண்ணே…
தாமரை பெண்ணே…

குழு : ஓஓஹோ ஓஓஹோ ஓஓ…

குழு : தாமரை பெண்ணே…
தாமரை பெண்ணே…

குழு : ஓஓஹோ ஓஓஹோ ஓஓ…

குழு : தாமரை பெண்ணே…
தாமரை பெண்ணே…
காதலன் வருவான் காத்திரு…

குழு : உன் கைவளை ஒளி…
அவன் காதினில் கேட்கும்…
வைகறை பெண்ணே காத்திரு…

BGM

பெண் : ஓஓ… வருஷங்கள் எல்லாம்…
நிமிஷங்கள் ஆக…
அவன் வருவான் என்று காத்திருந்தேன்…

பெண் : ஓஓ… அவன் குரல் கேட்கும்…
திசைகளில் எல்லாம்…
புது புது கோலம் போட்டு வைத்தேன்…

பெண் : என் தாவணி வயதுகள் போச்சே…
ஒரு ஆயிரம் வளர்பிறை ஆச்சே…
அந்த ராட்சசன் ஏன் வர வில்லை…
இன்னும் பூகுடை சாய்ந்திட இல்லை…

பெண் : என் இருபது போகும்…
எழுவதும் ஆகும்…
அவனை விடமாட்டேன்…

பெண் : என் மடியினில் ஒரு நாள்…
தலை வைத்து தூங்கும்…
அழகை நான் பார்ப்பேன்…

பெண் : கரிசல் காட்டு பெண்ணே…
என் அவனை கண்டாயா…
கவிதை பேசும் கண்ணே…
என் அவனை கண்டாயா…

குழு : உன் இரு விழி நடுவினில்…
இருப்பவன் எவனோ…
அவனை கண்டாயா…

குழு : உன் இருதய நரம்பினை…
அறுத்தவன் எவனோ…
அவனை கண்டாயா…

பெண் : கொஞ்சம் கனவு கொடுத்தவன்…
என் தூக்கம் திருடி சென்றான்…
என்னை தன்னில் இணைத்தவன்…
இன்று ஏனோ தனியே சென்றான்…

குழு : உன் இரு விழி நடுவினில்…
இருப்பவன் எவனோ…
அவனை கண்டாயா…

குழு : உன் இருதய நரம்பினை…
அறுத்தவன் எவனோ…
அவனை கண்டாயா…

குழு : ஆஆஆ ஆஆஆ ஆஆஆ…
ஹாஹா ஹாஹா ஹா…
ஆஆஆ ஆஆஆ ஆஆஆ…
ஹாஹா ஹாஹா ஹா…


Notes : Karisal Kaattu Penne Song Lyrics in Tamil. This Song from Raja (2002). Song Lyrics penned by . கரிசல் காட்டு பெண்ணே பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top