| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| விவேகா | பிரசன்னா & பிரியங்கா என்.கே | ரவி விஜய் ஆனந்த் | மாய புத்தகம் |
Kannaal Kannaal Pesi Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : ஏய் கண்ணால் கண்ணால் பேசி…
நான் காணும் உலகம் தலைகீழாக…
என்னை சுற்றி ஆடுதே…
ஆண் : நெஞ்சில் நேசம் பூசி…
என் இதழ்கள் சிந்தும் நஞ்சும் கூட…
அமுதம் அமுதம் ஆகுதே…
ஆண் : கோடி தாமரைகள் மலர்ந்து…
என் மூச்சில் மணக்கின்றதே…
ஆடி காற்றினிலே சருகாய்…
என் தேகம் மாறியதே…
இது புதுவித மரகத மாயம்…
ஆண் : கண்ணால் கண்ணால் பேசி…
நான் காணும் உலகம் தலைகீழாக…
என்னை சுற்றி ஆடுதே…
ஆண் : நெஞ்சில் நேசம் பூசி…
என் இதழ்கள் சிந்தும் நஞ்சும் கூட…
அமுதம் அமுதம் ஆகுதே…
—BGM—
பெண் : ஏதோ கண்ணாடி மனதில் கல்லோடு நுழைய…
துண்டாகா உடைந்தேனே…
மலையில் உண்டாகும் அருவி என் முன்னே பாய…
கண்ணாலே குடித்தேனே…
பெண் : மனம் சாரல் வீசுகிறதே…
வண்ண சாயம் பூசுகிறதே…
வானம் கீறும் வானம் கீறும்…
மின்னல் ஆனேன் ஆனேன்…
—BGM—
பெண் : மாயம் மாயம் ஆனேன் நானே…
மாயம் மாயம் ஆனேன் நானே…
—BGM—
பெண் : தனியே மாய உலகில் தள்ளாடி ததும்பும்…
நெஞ்சோடு தவித்தேனே…
உயிரில் உறைந்து மறைந்த…
காதல் உணர்வை மலர கண்டேன்…
பெண் : இது மாய தேசம் அல்லவா…
நான் ஆளும் ராணி அல்லவா…
தேகம் மாறும் நாகம் ஆடும்…
தீயாய் தீண்டும் தீண்டும்…
ஆண் : கண்ணால் கண்ணால் பேசி…
நான் காணும் உலகம் தலைகீழாக…
என்னை சுற்றி ஆடுதே…
ஆண் : நெஞ்சில் நேசம் பூசி…
என் இதழ்கள் சிந்தும் நஞ்சும் கூட…
அமுதம் அமுதம் ஆகுதே…
ஆண் : கோடி தாமரைகள் மலர்ந்து…
என் மூச்சில் மணக்கின்றதே…
ஆடி காற்றினிலே சருகாய்…
என் தேகம் மாறியதே…
இது புதுவித மரகத மாயம்…
ஆண் : கண்ணால் கண்ணால் பேசி…
நான் காணும் உலகம் தலைகீழாக…
என்னை சுற்றி ஆடுதே…
ஆண் : நெஞ்சில் நேசம் பூசி…
என் இதழ்கள் சிந்தும் நஞ்சும் கூட…
அமுதம் அமுதம் ஆகுதே…
Notes : Kannaal Kannaal Pesi Song Lyrics in Tamil. This Song from Maya Puthagam (2024). Song Lyrics penned by Viveka. கண்ணால் கண்ணால் பாடல் வரிகள்.
