| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| எம்.ஜி. வல்லபன் | எஸ்.ஜானகி & இளையராஜா | இளையராஜா | தைப்பொங்கல் |
Kann Malargalin Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : கண் மலர்களில் அழைப்பிதழ்…
பொன் இதழ்களின் சிறப்பிதழ்…
கண் மலர்களில் அழைப்பிதழ்…
பொன் இதழ்களின் சிறப்பிதழ்…
ஆண் : இனி வரும் இரவுகள் இளமையின் கனவுகள்தான்…
காண்போமே சேர்ந்தே நாமே…
ஆண் : கண் மலர்களில் அழைப்பிதழ்…
பொன் இதழ்களின் சிறப்பிதழ்…
—BGM—
பெண் : நான் ஆளும் மனம் பூவோ…
மீன் நாளும் தமிழ்ப் பாவோ…
ஆண் : பூவாடும் விழிதானோ…
நீ பாட மொழி ஏனோ…
பெண் : என்ன இன்று…
ஆண் : ஆஹா…
பெண் : கண்ணில் என்னை வென்று…
ஆண் : ஆஹா…
பெண் : கண்ணன் எண்ணுவதோ…
ஆண் : எனக்கென ஒரு கணமோ…
விளக்கங்கள் தரும் மனமோ…
நமக்கென விழித்திடும் மலர்களோ மனங்களோ…
பெண் : கண் மலர்களில் அழைப்பிதழ்…
ஆண் : லல லலலா…
பெண் : பொன் இதழ்களின் சிறப்பிதழ்…
ஆண் : லல லலலா…
—BGM—
ஆண் : தாம்பூல நிறம்தானே…
மாம்பூவின் இளம் மேனி…
பெண் : ஆ… தாங்காது இனிமேலே…
தூங்காது மனம் நாளை…
ஆண் : கண்ணில் என்ன…
பெண் : லாலா…
ஆண் : மின்னல் கண்ட பின்னும்…
பெண் : லாலா…
ஆண் : இன்னும் மின்னுவதோ…
பெண் : உனக்கென்று ஒரு மனமோ…
நமக்கென்று திருமணமோ…
இணைக்கின்ற இயற்கையின் உறக்கமோ மயக்கமோ…
ஆண் : கண் மலர்களில் அழைப்பிதழ்…
பெண் : லல லலலா…
ஆண் : பொன் இதழ்களின் சிறப்பிதழ்…
பெண் : லல லலலா…
பெண் : இனி வரும் இரவுகள்…
இளமையின் கனவுகள்தான்…
ஆண் & பெண் : காண்போமே சேர்ந்தே நாமே…
பெண் : லல லலலா…
ஆண் : லல லலலா…
பெண் : லல லலலா…
ஆண் : லல லலலா…
Notes : Kann Malargalin Song Lyrics in Tamil. This Song from Thai Pongal (1980). Song Lyrics penned by M. G. Vallaban. கண் மலர்களில் பாடல் வரிகள்.
