பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
நா. முத்துக்குமார் | பென்னி டயல் & ஹம்சிகா ஐயர் | ஜி. வி. பிரகாஷ் குமார் | அங்காடித் தெரு |
Kadhaigalai Pesum Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : கதைகளை பேசும் விழி அருகே…
எதை நான் பேச என்னுயிரே…
காதல் சுடுதே காய்ச்சல் வருதே…
ஆண் : கதைகளை பேசும் விழி அருகே…
எதை நான் பேச என்னுயிரே…
காதல் சுடுதே காய்ச்சல் வருதே…
ஆண் : ஓ என்னை கேளாமல் எதுவும் சொல்லாமல்…
கால்கள் எங்கேயோ மிதக்கிறதே…
பெண் : ஓ இருளும் இல்லாமல் ஒளியும் இல்லாமல்…
வானம் வண்ணத்தில் குளிக்கிறதே…
ஆண் : கதைகளை பேசும் விழி அருகே…
எதை நான் பேச என்னுயிரே…
காதல் சுடுதே காய்ச்சல் வருதே…
—BGM—
பெண் : கோயிலின் உள்ளே நுழைந்திடும் போது…
வருகிற வாசனை நீயல்லவா…
ஆண் : உன்னுடன் வாழும் ஒவ்வொரு நொடியும்…
சர்க்கரை தடவிய நொடியல்லவா…
பெண் : கல்லும் மண்ணும் ஓ வீடுகளில்லை…
ஆண் : ஓ அன்பின் வீடே ஓ அழிவது இல்லை…
பெண் : வெறும் கரையில் படுத்துக்கொண்டு…
விண்மீன் பார்ப்பது யோகமடா…
ஆண் : உன் மடியில் இருந்தால் வாழ்க்கையில் எதுவும்…
தேவை இல்லையடி…
—BGM—
ஆண் : ஓ கதைகளை பேசும் விழி அருகே…
எதை நான் பேச என்னுயிரே…
காதல் சுடுதே காய்ச்சல் வருதே…
—BGM—
பெண் : உனக்குள் தொடங்கி உனக்குள்தானே…
எந்தன் உலகம் முடிகிறதே…
ஆண் : உன் முகம் பார்த்து ரசித்திடத்தானே…
எந்தன் நாட்கள் விடிகிறதே…
பெண் : ஓ இரவின் மடியில் ஓ குழந்தைகள் ஆவோம்…
ஆண் : ஓ இருட்டின் நதியில் ஓ இறங்கி போவோம்…
பெண் : நேற்றென்னும் சோகம்…
நெருப்பாய் வந்து தீ மூட்டும்…
ஆண் : இன்றென்னும் மழையில்…
அத்தனை நெருப்பும் பூக்கள் நீட்டுமே…
—BGM—
ஆண் : ஓ கதைகளை பேசும் விழி அருகே…
எதை நான் பேச என்னுயிரே…
காதல் சுடுதே காய்ச்சல் வருதே…
ஆண் : ஓ என்னை கேளாமல் எதுவும் சொல்லாமல்…
கால்கள் எங்கேயோ மிதக்கிறதே…
பெண் : ஓ இருளும் இல்லாமல் ஒளியும் இல்லாமல்…
வானம் வண்ணத்தில் குளிக்கிறதே…
Notes : Kadhaigalai Pesum Song Lyrics in Tamil. This Song from Angadi Theru (2010). Song Lyrics penned by Na. Muthukumar. கதைகளை பேசும் பாடல் வரிகள்.