பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
கலை குமார் | ஹரிஹரன் & எஸ். ஜானகி | தேவா | கண்ணோடு காண்பதெல்லாம் |
Iruvathu Vayathu Varai Song Lyrics in Tamil
—BGM—
பெண் : இருவது வயது வரை…
என் பெற்றோரின் வசம் இருந்தேன்…
இருபது நிமிடத்திலே…
நான் உன் வசம் ஆகிவிட்டேன்…
ஆண் : உன் கண்ணில் என்ன காந்தமோ…
நான் அறியேன் நான் அறியேன்…
காதல் செய்த மாயமோ…
நான் அறியேன் நான் அறியேன்…
என்னில் வந்த மாற்றம் என்னவோ…
பெண் : பார்வைகளும் மோதியதே…
கோடி மின்னல் தோன்றுதே…
ஆண் : இதயம் இடம் மாறியதே…
இரு உயிரும் சேர்ந்ததே…
ஆண் : இருவது வயது வரை…
என் பெற்றோரின் வசம் இருந்தேன்…
இருபது நிமிடத்திலே…
நான் உன் வசம் ஆகிவிட்டேன்…
—BGM—
பெண் : அன்னையின் அரவணைப்பை மறந்தேனே…
தந்தையின் அறிவுரையை மறந்தேனே…
கண்களை இமைப்பதற்கு மறந்தேன் மறந்தேன்…
வீட்டின் முகவரியும் மறந்தேனே…
ஆண் : நம் உள்ளம் ரெண்டும் பட்டமாகவே மாறலாம்…
அதை காதல் நூலில் கட்டி வானிலே பறக்கலாம்…
பெண் : நாம் தூங்கும் நேரம் காதல் நினைவு…
கிச்சு கிச்சு மூட்டும் போதும்…
வெட்கம் வந்து கொஞ்சம் சிரிப்போமே…
ஆண் : இருவது வயது வரை…
என் பெற்றோரின் வசம் இருந்தேன்…
இருபது நிமிடத்திலே…
நான் உன் வசம் ஆகிவிட்டேன்…
—BGM—
ஆண் : முத்தத்தை கவிதை என ரசிப்போமே…
கன்னத்தில் எழுதிவிட துடித்தோமே…
கடலில் கரை மணலில் சேர்ந்தே நடந்து…
பாத சுவடுகளை இணைப்போமே…
பெண் : நம் முத்த சத்தம் தாளமாகவே மாறலாம்…
நம் மூச்சில் காதல் ராகம் கேட்கவே ரசிக்கலாம்…
ஆண் : வரும் காலம் எல்லாம் காதல் என்றால்…
நம்மை பற்றி உலகம் சொல்ல…
அன்பே அன்பே நாமும் இணைப்போமே…
ஆண் : இருவது வயது வரை…
என் பெற்றோரின் வசம் இருந்தேன்…
இருபது நிமிடத்திலே…
நான் உன் வசம் ஆகிவிட்டேன்…
பெண் : உன் கண்ணில் என்ன காந்தமோ…
நான் அறியேன் நான் அறியேன்…
காதல் செய்த மாயமோ…
நான் அறியேன் நான் அறியேன்…
என்னில் வந்த மாற்றம் என்னவோ…
ஆண் : பார்வைகளும் மோதியதே…
கோடி மின்னல் தோன்றுதே…
பெண் : இதயம் இடம் மாறியதே…
இரு உயிரும் சேர்ந்ததே…
ஆண் : இருவது வயது வரை…
என் பெற்றோரின் வசம் இருந்தேன்…
இருபது நிமிடத்திலே…
நான் உன் வசம் ஆகிவிட்டேன்…
—BGM—
Notes : Iruvathu Vayathu Varai Song Lyrics in Tamil. This Song from Kannodu Kanbathellam (1999). Song Lyrics penned by Kalai Kumar. இருவது வயது வரை பாடல் வரிகள்.