| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| காளிதாசன் | எஸ்.பி. பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி | தேவா | தெற்கு தெரு மச்சான் |
Ezhelu Jenma Bandham Song Lyrics in Tamil
—BGM—
பெண் : ஏழேழு ஜென்ம பந்தம் மனைவி என்பது…
இதில் நீ வேறு நான் வேறு யார் சொன்னது…
கல்யாணமே ஒரு தெய்வீகமே…
சம்சாரமே அதன் சந்தோசமே…
ஒரு வானும் நிலவும் பிரிந்து வாழுமா…
ஆண் : ஏழேழு ஜென்ம பந்தம் மனைவி என்பது…
இதில் நீ வேறு நான் வேறு யார் சொன்னது…
—BGM—
பெண் : வெத்திலையில் பாக்கு வச்சு…
பத்து பேரை சாட்சி வச்சு…
தித்திக்கிற ஆசைக்கெல்லாம் தேதி ஒன்னு உருவாச்சு…
ஆண் : அக்னி சாட்சி வச்சு…
கை விரலை சேத்து வச்சு…
இன்பம் துன்பம் இரண்டிலுமே இணைந்திருக்க முடிவாச்சு…
பெண் : பள்ளியறை பள்ளியிலே படிக்கும் இன்ப வேதம்…
ஆண் : பிள்ளை மணிச் செல்வங்களே அன்னை தந்த கீதம்…
பெண் : இது பழங்கால பாதை ஒரு சுக வாழ்வின் கீதை…
ஆண் : ஏழேழு ஜென்ம பந்தம் மனைவி என்பது…
இதில் நீ வேறு நான் வேறு யார் சொன்னது…
—BGM—
ஆண் : சந்தனத்து மழை அடிக்க…
சந்திரனும் கொடை புடிக்க…
செங்கமலச் சூரியன் போல் செல்ல மகன் பிறப்பானே…
பெண் : தங்கத்திலே தூளி கட்டி…
வைரத்திலே மாலை கட்டி…
தத்தி வரும் பாதத்துக்கு முத்து மணி தொடுப்பேனே…
ஆண் : துள்ளி வரும் பிள்ளை நிலா தூய கங்கை மீனு…
பெண் : செம்பவள வாய் திறந்தால் சிந்தி சிதறும் தேனு…
ஆண் : நம் பேர் சொல்ல தானே பிறக்கும் ஒரு மானே…
ஆண் : ஏழேழு ஜென்ம பந்தம் மனைவி என்பது…
இதில் நீ வேறு நான் வேறு யார் சொன்னது…
கல்யாணமே ஒரு தெய்வீகமே…
சம்சாரமே அதன் சந்தோசமே…
ஒரு வானும் நிலவும் பிரிந்து வாழுமா…
பெண் : ஏழேழு ஜென்ம பந்தம் மனைவி என்பது…
இதில் நீ வேறு நான் வேறு யார் சொன்னது…
Notes : Ezhelu Jenma Bandham Song Lyrics in Tamil. This Song from Therku Theru Machan (1992). Song Lyrics penned by Kalidasan. ஏழேழு ஜென்ம பந்தம் பாடல் வரிகள்.
