எவனோ ஒருவன்

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துசுவர்ணலதாஏ.ஆர்.ரகுமான்அலைபாயுதே

Evano Oruvan Song Lyrics in Tamil


பெண் : எவனோ ஒருவன் வாசிக்கிறான்…
இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன்…
தவம் போல் இருந்து யோசிக்கிறேன்…
அதைத் தவணை முறையில் நேசிக்கிறேன்…

BGM

பெண் : எவனோ ஒருவன் வாசிக்கிறான்…
இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன்…

பெண் : எவனோ ஒருவன் வாசிக்கிறான்…
இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன்…
தவம் போல் இருந்து யோசிக்கிறேன்…
அதைத் தவணை முறையில் நேசிக்கிறேன்…

பெண் : கேட்டுக் கேட்டு நான் கிறங்குகிறேன்…
கேட்பது எவனோ அறியவில்லை…
காட்டு மூங்கிலின் காதுக்குள்ளே…
அவன் ஊதும் ரகசியம் புாியவில்லை…

பெண் : எவனோ ஒருவன் வாசிக்கிறான்…
இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன்…

BGM

பெண் : புல்லாங்குழலே பூங்குழலே…
நீயும் நானும் ஒரு ஜாதி…

BGM

பெண் : புல்லாங்குழலே பூங்குழலே…
நீயும் நானும் ஒரு ஜாதி…
உள்ளே உறங்கும் ஏக்கத்திலே…
உனக்கும் எனக்கும் சாிபாதி…

பெண் : கண்களை வருடும் தேனிசையில்…
என் காலம் கவலை மறந்திருப்பேன்…
இன்னிசை மட்டும் இல்லையென்றால்…
நான் என்றோ என்றோ இறந்திருப்பேன்…

பெண் : எவனோ ஒருவன் வாசிக்கிறான்…
இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன்…

BGM

பெண் : உறக்கம் இல்லா முன்னிரவில்…
என் உள்மனதில் ஒரு மாறுதலா…

BGM

பெண் : உறக்கம் இல்லா முன்னிரவில்…
என் உள்மனதில் ஒரு மாறுதலா…
இரக்கம் இல்லா இரவுகளில்…
இது எவனோ அனுப்பும் ஆறுதலா…

பெண் : எந்தன் சோகம் தீா்வதற்கு…
இதுபோல் மருந்து பிறிதில்லையே…
அந்தக் குழலை போல் அழுவதற்கு…
அத்தனை கண்கள் எனக்கில்லையே…

பெண் : எவனோ ஒருவன் வாசிக்கிறான்…
இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன்…
எவனோ ஒருவன் வாசிக்கிறான்…
இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன்…

BGM


Notes : Evano Oruvan Song Lyrics in Tamil. This Song from Alaipayuthey (2000). Song Lyrics penned by Vairamuthu. எவனோ ஒருவன் பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top