பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
கங்கை அமரன் | எஸ். ஜானகி | இளையராஜா | கல்லுக்குள் ஈரம் |
Ennaththil Yedho Song Lyrics in Tamil
—BGM—
பெண் : எண்ணத்தில் ஏதோ சில்லென்றது…
—BGM—
பெண் : எண்ணத்தில் ஏதோ சில்லென்றது…
ஏழை தேகம் ஏங்கும் மோகம் நில்லென்றது…
ஓஓ… சொல்லென்றது…
ஓஓ… எண்ணத்தில் ஏதோ சில்லென்றது…
—BGM—
பெண் : தென்றல் அது தரும் சந்தம்…
சேரும் அதிலொரு சொந்தம்…
தென்றல் அது தரும் சந்தம்…
சேரும் அதிலொரு சொந்தம்…
பெண் : துளிர் விடும் ஆசை ஆடியது…
தொடர்ந்தொரு ராகம் பாடியது…
உள்ளூற மெல்லாடும் உண்டான சந்தோஷம்…
காதல் ராகம் தொட்டு ஆடும் நேரம் காலம்… ம்ம்ம்…
பெண் : எண்ணத்தில் ஏதோ சில்லென்றது…
ஏழை தேகம் ஏங்கும் மோகம் நில்லென்றது…
ஓஓ… சொல்லென்றது…
ஓஓ… எண்ணத்தில் ஏதோ சில்லென்றது…
—BGM—
பெண் : மாலை தழுவிய வண்ணம்…
மனதைத் தழுவிய எண்ணம்…
மாலை தழுவிய வண்ணம்…
மனதைத் தழுவிய எண்ணம்…
பெண் : மறுபடி சேரும் காலம் எது…
மடியினில் ஆடும் நேரம் எது…
ஏறாத இன்பங்கள் காணாத சொந்தங்கள்…
மேலும் மேலும் என்னைச்சேரும் காலம் எங்கே…
பெண் : எண்ணத்தில் ஏதோ சில்லென்றது…
ஏழை தேகம் ஏங்கும் மோகம் நில்லென்றது…
ஓஓ… சொல்லென்றது…
ஓஓ… எண்ணத்தில் ஏதோ சில்லென்றது…
Notes : Ennaththil Yedho Song Lyrics in Tamil. This Song from Kallukkul Eeram (1980). Song Lyrics penned by Gangai Amaran. எண்ணத்தில் ஏதோ பாடல் வரிகள்.