பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
பஞ்சு அருணாச்சலம் | எஸ்.பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகி | இளையராஜா | மாப்பிள்ளை |
Ennathaan Sugamo Song Lyrics in Tamil
பெண் : என்னதான் சுகமோ நெஞ்சிலே…
இதுதான் வளரும் அன்பிலே…
ஆண் : ராகங்கள் நீ பாடி வா…
பண்பாடும் மோகங்கள் நீ காணவா…
எந்நாளும் காதல் உறவே…
ஆண் : என்னதான் சுகமோ நெஞ்சிலே…
இதுதான் வளரும் அன்பிலே…
—BGM—
பெண் : பூவோடு வண்டு…
புது மோகம் கொண்டு…
சொல்கின்ற வண்ணங்கள் நீ சொல்லத்தான்…
ஆண் : நான் சொல்லும்போது…
இரு கண்கள் மூடி…
எழுதாத எண்ணங்கள் நீ சொல்லத்தான்…
பெண் : இன்பம் வாழும்…
உந்தன் நெஞ்சம்…
ஆண் : தீபம் ஏற்றும்…
காதல் ராணி…
பெண் : சிந்தாத முத்துக்களை…
நான் சேர்க்கும் நேரம் இது…
காதல் உறவே…
பெண் : என்னதான் சுகமோ நெஞ்சிலே…
இதுதான் வளரும் அன்பிலே…
—BGM—
ஆண் : தீராத மோகம்…
நான் கொண்ட நேரம்…
தேனாக நீ வந்து சீராட்டதான்…
பெண் : காணாத வாழ்வு…
நீ தந்த வேலை…
பூமாலை நீ சூடி பாராட்டத்தான்…
ஆண் : நீ என் ராணி…
நாந்தான் தேனீ…
பெண் : நீ என் ராஜா…
நான் என் ரோஜா…
ஆண் : தெய்வீக பந்தத்திலே…
நான் கண்ட சொர்க்கம் இது…
காதல் உறவே…
ஆண் : என்னதான் சுகமோ நெஞ்சிலே…
இதுதான் வளரும் அன்பிலே…
பெண் : ராகங்கள் நீ பாடி வா…
பண்பாடும் மோகங்கள் நீ காணவா…
எந்நாளும் காதல் உறவே…
பெண் : என்னதான் சுகமோ நெஞ்சிலே…
ஆண் : இதுதான் வளரும் அன்பிலே…
Notes : Ennathaan Sugamo Song Lyrics in Tamil. This Song from Mappillai (1989). Song Lyrics penned by Panchu Arunachalam. என்னதான் சுகமோ பாடல் வரிகள்.