பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
உதித் நாராயண் & சுஜாதா மோகன் | வித்யாசாகர் | காதல்னா சும்மா இல்ல |
Ennamo Seithai Nee Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : என்னமோ செய்தாய் நீ…
என்னதான் செய்தாய் நீ…
என்னமோ செய்தாய் நீ…
என்னதான் செய்தாய் நீ…
ஆண் : எதிரில் யாரை பார்க்கும் போதும்… ஹோ…
கண்கள் உன்னையதானே தேடும்…
கால்கள் தரையில் இருக்கும் போதும்… ம்ம்…
மனசு பறந்து பார்க்க தோன்றும்…
பெண் : என்னமோ செய்தாய் நீ…
என்னதான் செய்தாய் நீ…
பெண் : குடைகள் கையில் இருக்கும் போதும்… ம்ம்… ஓ…
மழையில் நனைந்து பார்க்க தோன்றும்…
கொஞ்சம் நெருங்கி பார்க்க தோன்றும்… ம்ம்…
கொஞ்சம் விலகி பார்க்கத் தோன்றும்…
—BGM—
ஆண் : உன்னை பார்க்கும் முன்னே…
உலகம் சிறியதடி…
உன்னை பார்த்த பின்னே…
உலகம் பெரியதடி…
ஆண் : ஜன்னல் திறந்து பார்க்க வைத்தாய்… ஹோ…
என்னை உணர்ந்து பார்க்க வைத்தாய்…
பெண் : ஹோ… ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ…
நீ பார்க்கும் பார்வை ஒருநாள்…
நான் பார்க்கும் பார்வையாகும்…
ஆண் : எப்படி எப்படி எப்படி எனக்குள் வந்தாய்…
எந்தன் நெஞ்சை கேட்டுப் பார்த்தேன்…
எத்தனை எத்தனை எத்தனை தடவைக் கேட்டும்…
பதில்கள் இல்லையே…
பெண் : நதியில் மிதிக்கும் விளக்கு எல்லாம்…
நதியின் ஆழம் தெரியவில்லை…
காதல் எந்த நிமிடம் பிறக்கும்…
கடவுள் மனதும் அறிவதில்லை…
ஆண் : என்னமோ செய்தாய் நீ…
என்னதான் செய்தாய் நீ…
—BGM—
பெண் : குழந்தை சிரிப்பினிலே உள்ளம் திருடுகிறாய்…
மெதுவாய் மயில் இறகாய் மனதை வருடுகிறாய்…
காலம் உறைந்து போக வைத்தாய்…
கனவில் கரைந்து போக வைத்தாய்…
ஆண் : ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ…
பூலோகம் முழுதும் பூ பூத்து…
பூக்கோலம் ஆனது உன்னாலே…
பெண் : எப்படி எப்படி எப்படி எனக்குள் வந்தாய்…
எந்தன் நெஞ்சை கேட்டுப் பார்த்தேன்…
எத்தனை எத்தனை எத்தனை எத்தனை தடவைக் கேட்டும்…
பதில்கள் இல்லையே…
ஆண் : கண்கள் கடிதம் போட்ட பின்னே… ஹோ…
கிளிகள் பறந்து வருவதில்லை…
பெண் : கண்கள் விரும்பி பார்த்த பின்னே… ஓ…
இதயம் முரண்டு பிடிப்பதில்லை…
பெண் : என்னமோ செய்தாய் நீ…
என்னதான் செய்தாய் நீ…
கொஞ்சம் நெருங்கி பார்க்க தோன்றும்… ம்ம்… ஓ…
ஆண் : கொஞ்சம் விரும்பி பார்க்கத் தோன்றும்…
பெண் : கால்கள் தரையில் இருக்கும் போதும்… ஓஓ…
ஆண் : மனசு பறந்து பார்க்கத் தோன்றும்…
Notes : Ennamo Seithai Nee Song Lyrics in Tamil. This Song from Kadhalna Summa Illai (2009). Song Lyrics penned by . என்னமோ செய்தாய் நீ பாடல் வரிகள்.