எங்கேயோ பார்த்த

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்உதித் நாராயண்யுவன் ஷங்கர் ராஜாயாரடி நீ மோகினி

Enkeyoo Partha Song Lyrics in Tamil


BGM

ஆண் : எங்கேயோ பார்த்த மயக்கம்…
எப்போதோ வாழ்ந்த நெருக்கம்…
தேவதை இந்த சாலை ஓரம்…
வருவது என்ன மாயம் மாயம்…
கண் திறந்து இவள் பார்க்கும் போது…
கடவுளை இன்று நம்பும் மனது…

ஆண் : இன்னும் கண்கள் திறக்காத சிற்பம்…
ஒரு கோடி பூ பூக்கும் வெக்கம்…
ஆண் மனதை அழிக்க வந்த சாபம்…
அறிவை மயக்கும் மாய தாகம்…
இவளைப் பார்த்த இன்பம் போதும்…
வாழ்ந்துப் பார்க்க நெஞ்சம் ஏங்கும்…

BGM

ஆண் : கனவுகளில் வாழ்ந்த நாளை…
கண் எதிரே பார்க்கிறேன்…
கதைகளிலே கேட்டப் பெண்ணா…
திரும்பித் திரும்பிப் பார்க்கிறேன்…

ஆண் : அங்கும் இங்கும் ஓடும் கால்கள்…
அசைய மறுத்து வேண்டுதே…
இந்த இடத்தில் இன்னும் நிற்க…
இதயம் கூட ஏங்குதே…

ஆண் : என்னானதோ ஏதானதோ…
கண்ணாடி போல் உடைந்திடும் மனது…
கவிதை ஒன்று பார்த்து போக…
கண்கள் கலங்கி நானும் ஏங்க…
மழையின் சாரல் என்னைத் தாக்க…
விடைகள் இல்லா கேள்வி கேட்க…

ஆண் : எங்கேயோ பார்த்த மயக்கம்…
எப்போதோ வாழ்ந்த நெருக்கம்…
தேவதை இந்த சாலை ஓரம்…
வருவது என்ன மாயம் மாயம்…
கண் திறந்து இவள் பார்க்கும் போது…
கடவுளை இன்று நம்பும் மனது…

BGM

ஆண் : ஆதி அந்தமும் மறந்து…
உன் அருகில் கரைந்து நான் போனேன்…
ஆண்கள் வெக்கபடும் தருணம்…
உன்னை பார்த்த பின்பு நான் கண்டு கொண்டேன்…

ஆண் : இடி விழுந்த வீட்டில் இன்று…
பூச்செடிகள் பூக்கிறதே…
இவள் தானே உந்தன் பாதி…
கடவுள் பதில் கேக்கிறதே…

ஆண் : வியந்து வியந்து…
உடைந்து உடைந்து…
சரிந்து சரிந்து…
மிரண்டு மிரண்டு…

ஆண் : இந்த நிமிடம் மீண்டும் பிறந்து…
உனக்குள் கலந்து…
தொலைந்து தொலைந்து…

BGM


Notes : Enkeyoo Partha Song Lyrics in Tamil. This Song from Yaaradi Nee Mohini (2008). Song Lyrics penned by Na. Muthu Kumar. எங்கேயோ பார்த்த பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading