பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
காமகொடியன் | கே.ஜே.யேசுதாஸ் & கே.எஸ்.சித்ரா | இளையராஜா | நினைக்க தெரிந்த மனமே |
Engengu Nee Song Lyrics in Tamil
—BGM—
பெண் : எங்கெங்கு நீ சென்ற போதும்…
என் நெஞ்சமே உன்னைத் தேடும்…
ஆண் : ஆனந்த கீதம் ஆரம்பமாகும்…
காலங்கள் யாவும் நம்மோடு பாடும்…
பெண் : பூங்காற்று தாலாட்டும் அன்பே அன்பே…
ஆண் : எங்கெங்கு நீ சென்ற போதும்…
என் நெஞ்சமே உன்னைத் தேடும்…
—BGM—
ஆண் : கண்களின் பார்வை அம்புகள் போலே…
நெஞ்சினிலே பாய்வதும் ஏன்…
அம்புகள் மீண்டும் பாய்ந்திடும் போது…
காயங்களும் ஆறியதேன்…
பெண் : ஆறிடும் நெஞ்சம் தேறிடும் நேரம்…
பிரிந்தது ஏனோ உன் உறவு…
நெருங்கிடும் போதும் நீங்கிடும் போதும்…
மயங்குவதேனோ என் மனது…
ஆண் : இருநெஞ்சின் துன்பம் இது காதல்தான்…
அது போல இன்பம் எது கண்மணி…
பூங்காற்று தாலாட்டும் அன்பே அன்பே…
பெண் : எங்கெங்கு நீ சென்ற போதும்…
என் நெஞ்சமே உன்னைத் தேடும்…
ஆண் : ஆனந்த கீதம் ஆரம்பமாகும்…
காலங்கள் யாவும் நம்மோடு பாடும்…
பெண் : பூங்காற்று தாலாட்டும் அன்பே அன்பே…
ஆண் : எங்கெங்கு நீ சென்ற போதும்…
என் நெஞ்சமே உன்னை தேடும்…
—BGM—
பெண் : மாலை நன் நேரம் மாறிட வேண்டாம்…
மாங்குயிலே மாங்குயிலே…
காலங்கள் கூட மாறிட வேண்டாம்…
கண்மணியே கண்மணியே…
ஆண் : சூரியன் மேற்கினில் சென்றிடட்டும்…
சந்திரன் அங்கே வந்திடட்டும்…
மேகங்கள் வானத்தில் நிலை பெறட்டும்…
கடலினில் கூட அலை நிற்கட்டும்…
பெண் : உன்னோடு சேரும் ஒரு நேரமே…
என்றென்றும் இங்கே நிலையாகட்டும்…
பூங்காற்று தாலாட்டும் அன்பே அன்பே…
பெண் : எங்கெங்கு நீ சென்ற போதும்…
என் நெஞ்சமே உன்னை தேடும்…
ஆண் : ஆனந்த கீதம் ஆரம்பமாகும்…
காலங்கள் யாவும் நம்மோடு பாடும்…
பெண் : பூங்காற்று தாலாட்டும் அன்பே அன்பே…
ஆண் : எங்கெங்கு நீ சென்ற போதும்…
என் நெஞ்சமே உன்னை தேடும்…
ஆண் & பெண் : லாலா லா லா லா லாலா…
லாலா லா லா லா லாலா…
Notes : Engengu Nee Song Lyrics in Tamil. This Song from Ninaikka Therintha Maname (1987). Song Lyrics penned by Kamakodiyan. எங்கெங்கு நீ பாடல் வரிகள்.