பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
தாமரை | கார்த்திக் & ஸ்ரீவர்த்தினி | வித்யாசாகர் | அலை |
En Ragasiya Kanavukal Song Lyrics in Tamil
—BGM—
பெண் : என் ரகசிய கனவுகள்…
ரசிக்கிற வகையினில் ரகளைகள் செய்பவனா…
என் அழகிய நினைவினில்…
அடிக்கடி நுழைந்தொரு அலும்புகள் செய்பவனா…
பெண் : மழை போலே வருவானா…
மடி மேலே விழுவானா…
மலர் போலே தொடுவானா தொடுவானா…
பெண் : இவன்தானா இவன்தானா…
இவனோடு இணைவேனா…
இவன்தானா இவன்தானா…
இவனோடு இணைவேனா…
பெண் : என் ரகசிய கனவுகள்…
ரசிக்கிற வகையினில் ரகளைகள் செய்பவனா…
என் அழகிய நினைவினில்…
அடிக்கடி நுழைந்தொரு அலும்புகள் செய்பவனா…
—BGM—
ஆண் : ஒருமுறை பார்க்கையில் பனியென உருகினேன்…
மறுமுறை பார்க்கையில் தீயிலே வேகிறேன்…
பெண் : கண்களால் நெஞ்சிலே காயங்கள் செய்கிறாய்…
மோகத்தின் பஞ்சினால் ஒத்தடம் வைக்கிறாய்…
ஆண் : இமைக்கும் பொழுதில் இதயம் தொலைத்தேன்…
பெண் : எனக்குள் விழுந்தேன் உனக்குள் எழுந்தேன்…
ஆண் : காதல் நீரிலே மூழ்கி போகிறேன்…
பெண் : கையை நீட்டவா கரையில் சேர்க்கவா…
பெண் : இவன்தானா இவன்தானா…
இவனோடு இணைவேனா…
ஆண் : என் ரகசிய கனவுகள்…
ரசிக்கிற வகையினில் ரகளைகள் செய்பவளா…
பெண் : என் ரகசிய கனவுகள்…
ரசிக்கிற வகையினில் ரகளைகள் செய்பவனா…
செய்பவனா செய்பவனா…
—BGM—
பெண் : தூரத்தில் நின்றெனை ரசிப்பது போதுமா…
தூரத்து வெண்ணிலா தாகங்கள் தீர்க்குமா…
ஆண் : வெட்கத்தை வீசியே வாவென சொல்கிறாய்…
பக்கத்தில் வந்ததும் பத்தியம் என்கிறாய்…
பெண் : அணைப்பாய் என நான் தவியாய் தவித்தேன்…
இருந்தும் வெளியே பொய்யாய் முறைத்தேன்…
ஆண் : கன்னக்குழிகள்தான் காதல் தேசமா…
ஈரமுத்தம்தான் இன்ப தீர்த்தமா…
ஆண் : இவள்தானா இவள்தானா…
இவளோடு இணைவேனா…
பெண் : என் ரகசிய கனவுகள்…
ரசிக்கிற வகையினில் ரகளைகள் செய்பவனா…
ஆண் : என் அழகிய நினைவினில்…
அடிக்கடி நுழைந்தொரு அலும்புகள் செய்பவளா…
ஆண் : மழை போலே வருவாளா மடி மேலே விழுவாளா…
பெண் : மலர் போலே தொடுவானா தொடுவானா…
பெண் : இவன்தானா…
ஆண் : இவள்தானா…
பெண் : இவனோடு இணைவேனா…
Notes : En Ragasiya Kanavukal Song Lyrics in Tamil. This Song from Alai (2003). Song Lyrics penned by Thamarai. என் ரகசிய கனவுகள் பாடல் வரிகள்.