என் ரகசிய கனவுகள்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைகார்த்திக் & ஸ்ரீவர்த்தினிவித்யாசாகர்அலை

En Ragasiya Kanavukal Song Lyrics in Tamil


BGM

பெண் : என் ரகசிய கனவுகள்…
ரசிக்கிற வகையினில் ரகளைகள் செய்பவனா…
என் அழகிய நினைவினில்…
அடிக்கடி நுழைந்தொரு அலும்புகள் செய்பவனா…

பெண் : மழை போலே வருவானா…
மடி மேலே விழுவானா…
மலர் போலே தொடுவானா தொடுவானா…

பெண் : இவன்தானா இவன்தானா…
இவனோடு இணைவேனா…
இவன்தானா இவன்தானா…
இவனோடு இணைவேனா…

பெண் : என் ரகசிய கனவுகள்…
ரசிக்கிற வகையினில் ரகளைகள் செய்பவனா…
என் அழகிய நினைவினில்…
அடிக்கடி நுழைந்தொரு அலும்புகள் செய்பவனா…

BGM

ஆண் : ஒருமுறை பார்க்கையில் பனியென உருகினேன்…
மறுமுறை பார்க்கையில் தீயிலே வேகிறேன்…

பெண் : கண்களால் நெஞ்சிலே காயங்கள் செய்கிறாய்…
மோகத்தின் பஞ்சினால் ஒத்தடம் வைக்கிறாய்…

ஆண் : இமைக்கும் பொழுதில் இதயம் தொலைத்தேன்…
பெண் : எனக்குள் விழுந்தேன் உனக்குள் எழுந்தேன்…

ஆண் : காதல் நீரிலே மூழ்கி போகிறேன்…
பெண் : கையை நீட்டவா கரையில் சேர்க்கவா…

பெண் : இவன்தானா இவன்தானா…
இவனோடு இணைவேனா…

ஆண் : என் ரகசிய கனவுகள்…
ரசிக்கிற வகையினில் ரகளைகள் செய்பவளா…

பெண் : என் ரகசிய கனவுகள்…
ரசிக்கிற வகையினில் ரகளைகள் செய்பவனா…
செய்பவனா செய்பவனா…

BGM

பெண் : தூரத்தில் நின்றெனை ரசிப்பது போதுமா…
தூரத்து வெண்ணிலா தாகங்கள் தீர்க்குமா…

ஆண் : வெட்கத்தை வீசியே வாவென சொல்கிறாய்…
பக்கத்தில் வந்ததும் பத்தியம் என்கிறாய்…

பெண் : அணைப்பாய் என நான் தவியாய் தவித்தேன்…
இருந்தும் வெளியே பொய்யாய் முறைத்தேன்…

ஆண் : கன்னக்குழிகள்தான் காதல் தேசமா…
ஈரமுத்தம்தான் இன்ப தீர்த்தமா…

ஆண் : இவள்தானா இவள்தானா…
இவளோடு இணைவேனா…

பெண் : என் ரகசிய கனவுகள்…
ரசிக்கிற வகையினில் ரகளைகள் செய்பவனா…

ஆண் : என் அழகிய நினைவினில்…
அடிக்கடி நுழைந்தொரு அலும்புகள் செய்பவளா…

ஆண் : மழை போலே வருவாளா மடி மேலே விழுவாளா…
பெண் : மலர் போலே தொடுவானா தொடுவானா…

பெண் : இவன்தானா…
ஆண் : இவள்தானா…
பெண் : இவனோடு இணைவேனா…


Notes : En Ragasiya Kanavukal Song Lyrics in Tamil. This Song from Alai (2003). Song Lyrics penned by Thamarai. என் ரகசிய கனவுகள் பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top