பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வாலி | எஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகி | கே.பாக்யராஜ் | ஆராரோ ஆரிரரோ |
En Kannukoru Nilava Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : என் கண்ணுக்கொரு நிலவா…
உன்னை படைச்சான்…
ஒன் நெஞ்சுக்கொரு உறவா…
என்னை படைச்சான்…
பெண் : ஒன் கண்ணுக்கொரு நிலவா…
என்னை படைச்சான்…
என் நெஞ்சுக்கொரு உறவா…
ஒன்னை படைச்சான்…
ஆண் : ஒரு தாயாட்டம் உன்னை நான் தாலாட்டுவேன்…
தினம் ஆராரோ ஆரிரோ நான் பாடுவேன்…
இப்பவும் எப்பவும் சீராட்டுவேன்…
பெண் : ஒன் கண்ணுக்கொரு நிலவா…
என்னை படைச்சான்…
என் நெஞ்சுக்கொரு உறவா…
ஒன்னை படைச்சான்…
—BGM—
ஆண் : உச்சி வெயில் வேளை நீ நடக்க…
பிச்சிப் பூவ நானும் பாய் விரிக்க…
பெண் : உச்சி முதல் பாதம் நான் சிலிர்க்க…
உள்ளத்திலே ஆசை ஊற்றெடுக்க…
ஆண் : முக்குளிக்க நானும் ஏங்குறேன்…
முத்தெடுக்க நேரம் பார்க்குறேன்…
பெண் : கொஞ்சம் பொறு இரவாகட்டும்…
வெக்கமது விலகி ஓடட்டும்…
ஆண் : எப்பம்மா எப்பம்மா காத்திருக்கேன்…
பெண் : மொட்டுத்தான் விட்டுதான் பூத்திருக்கேன்…
ஆண் : என் கண்ணுக்கொரு நிலவா…
உன்னை படைச்சான்…
பெண் : என் நெஞ்சுக்கொரு உறவா…
ஒன்னை படைச்சான்…
ஆண் : ஹை… தன்னன்னா தானானே தந்ததனனா…
தானானேனே தந்தானா…
குழு : ஹையே ஹையே ஹையே…
ஆண் : ஹை தன்னன்னா தானானே தந்ததனனா…
தானானேனே தந்தானா…
குழு : ஹையே ஹையே ஹையே…
ஆண் : தன்ன நானே தன்னானே…
குழு : ஹையே ஹையே ஹையே…
ஆண் : தன்ன நானே தன்னானே…
குழு : ஹையே ஹையே ஹையே…
பெண் : பள்ளியறை பாட்டை நீ படிக்க…
பக்க மேளம் போல நான் இருக்க…
பெண் : தட்டுறப்ப தாளம் திறந்திருக்க…
தட்ட தட்ட மோகம் வளர்ந்திருக்க…
பெண் : கொஞ்சுறப்போ தேகம் நோகுமா…
கொஞ்சம் கொஞ்சம் காயம் ஆகுமா…
ஆண் : காயத்துக்கு களிம்பு பூசவா…
ஆறும்வரை விசிறி வீசவா…
பெண் : அம்மம்மா அம்மம்மா ரொம்ப வேகம்…
ஆண் : என்னம்மா பண்ண நான் இன்ப தாகம்…
பெண் : ஒன் கண்ணுக்கொரு நிலவா…
என்னை படைச்சான்…
ஆண் : உன் நெஞ்சுக்கொரு உறவா…
என்னை படைச்சான்…
பெண் : ஒரு தாயாட்டம் உன்னை நான் தாலாட்டுவேன்…
தினம் ஆராரோ ஆரிரோ நான் பாடுவேன்…
இப்பவும் எப்பவும் சீராட்டுவேன்…
ஆண் : என் கண்ணுக்கொரு நிலவா…
உன்னை படைச்சான்…
பெண் : என் நெஞ்சுக்கொரு உறவா…
ஒன்னை படைச்சான்…
Notes : En Kannukoru Nilava Song Lyrics in Tamil. This Song from Aararo Aariraro (1989). Song Lyrics penned by Vaali. என் கண்ணுக்கொரு நிலவா பாடல் வரிகள்.