எல்லோரும் சொல்லும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ்.பி. பாலசுப்ரமணியம்இளையராஜாமறுபடியும்

Ellorum Sollum Song Lyrics in Tamil


BGM

ஆண் : எல்லோரும் சொல்லும் பாட்டு…
சொல்வேனே உன்னை பார்த்து…

ஆண் : மேடையே வையகம் ஒரு மேடையே…
வேஷமே அங்கெல்லாம் வெறும் வேஷமே…
மொத்தத்தில் வந்து கூடும் பின் ஓடும்…
நாம் கூத்தாடும் கூட்டமே…

ஆண் : எல்லோரும் சொல்லும் பாட்டு…
சொல்வேனே உன்னை பார்த்து…

BGM

ஆண் : நாயகன் மேலிரிந்து நூலினை ஆட்டுகின்றான்…
நாமெலாம் பொம்மை என்று நாடகம் காட்டுகின்றான்…
காவியம் போலொரு காதலை தீட்டுவான்…
காரணம் ஏதும் இன்றி காட்சியை மாற்றுவான்…

ஆண் : ரயில் சிநேகமாய்…
புயல் அடித்த மேகமாய்…
கலைந்து வந்து கூடும் பின் ஓடும்…
நாம் கூத்தாடும் கூட்டமே…

ஆண் : எல்லோரும் சொல்லும் பாட்டு…
சொல்வேனே உன்னை பார்த்து…

BGM

ஆண் : கோவலன் பாதை தன்னில் மாதவி வந்ததுண்டு…
மாதவி இல்லை என்றால் கண்ணகி எது இன்று…

ஆண் : மானிடன் ஜாதகம் இறைவனின் கையிலே…
மயக்கங்கள் நேர்வதில்லை தெளிந்தவர் நெஞ்சிலே…

ஆண் : எது கூடுமோ எது விலகி ஓடுமோ…
மொத்தத்தில் வந்து கூடும் பின் ஓடும்…
நாம் கூத்தாடும் கூட்டமே…

ஆண் : மேடையே வையகம் ஒரு மேடையே…
வேஷமே அங்கெல்லாம் வெறும் வேஷமே…
மொத்தத்தில் வந்து கூடும் பின் ஓடும்…
நாம் கூத்தாடும் கூட்டமே…

BGM


Notes : Ellorum Sollum Song Lyrics in Tamil. This Song from Marupadiyum (1993). Song Lyrics penned by Vaali. எல்லோரும் சொல்லும் பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top