பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வாலி | எஸ்.பி. பாலசுப்ரமணியம் | இளையராஜா | மறுபடியும் |
Ellorum Sollum Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : எல்லோரும் சொல்லும் பாட்டு…
சொல்வேனே உன்னை பார்த்து…
ஆண் : மேடையே வையகம் ஒரு மேடையே…
வேஷமே அங்கெல்லாம் வெறும் வேஷமே…
மொத்தத்தில் வந்து கூடும் பின் ஓடும்…
நாம் கூத்தாடும் கூட்டமே…
ஆண் : எல்லோரும் சொல்லும் பாட்டு…
சொல்வேனே உன்னை பார்த்து…
—BGM—
ஆண் : நாயகன் மேலிரிந்து நூலினை ஆட்டுகின்றான்…
நாமெலாம் பொம்மை என்று நாடகம் காட்டுகின்றான்…
காவியம் போலொரு காதலை தீட்டுவான்…
காரணம் ஏதும் இன்றி காட்சியை மாற்றுவான்…
ஆண் : ரயில் சிநேகமாய்…
புயல் அடித்த மேகமாய்…
கலைந்து வந்து கூடும் பின் ஓடும்…
நாம் கூத்தாடும் கூட்டமே…
ஆண் : எல்லோரும் சொல்லும் பாட்டு…
சொல்வேனே உன்னை பார்த்து…
—BGM—
ஆண் : கோவலன் பாதை தன்னில் மாதவி வந்ததுண்டு…
மாதவி இல்லை என்றால் கண்ணகி எது இன்று…
ஆண் : மானிடன் ஜாதகம் இறைவனின் கையிலே…
மயக்கங்கள் நேர்வதில்லை தெளிந்தவர் நெஞ்சிலே…
ஆண் : எது கூடுமோ எது விலகி ஓடுமோ…
மொத்தத்தில் வந்து கூடும் பின் ஓடும்…
நாம் கூத்தாடும் கூட்டமே…
ஆண் : மேடையே வையகம் ஒரு மேடையே…
வேஷமே அங்கெல்லாம் வெறும் வேஷமே…
மொத்தத்தில் வந்து கூடும் பின் ஓடும்…
நாம் கூத்தாடும் கூட்டமே…
—BGM—
Notes : Ellorum Sollum Song Lyrics in Tamil. This Song from Marupadiyum (1993). Song Lyrics penned by Vaali. எல்லோரும் சொல்லும் பாடல் வரிகள்.