பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
யுகபாரதி | ஹரிஷ் ராகவேந்திரா | கணேஷ் ராகவேந்திரன் | ரேனிகுண்டா |
Mazhai Peyyum Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : மழை பெய்யும் போதும்…
நனையாத யோகம்…
இது என்ன மாயம்…
யார் செய்ததோ…
ஆண் : நடக்கின்ற போதும்…
நகராத தூரம்…
இது என்ன கோலம்…
யார் சொல்வதோ…
ஆண் : இது மின்னலா…
இல்லை தென்றலா…
அறியாமலே அலைபாயுதே…
ஆண் : இது வண்ணமா…
இல்லை வன்மமா…
விளங்காமலே விளையாடுதே…
ஆண் : மழை பெய்யும் போதும்…
நனையாத யோகம்…
இது என்ன மாயம்…
யார் செய்ததோ…
—BGM—
ஆண் : சில நேரம் மயிலிறகாய்…
வருடிவிடும் புனிதமிது…
சில நேரம் ரகசியமாய்…
திருடிவிடும் கொடுமை இது…
ஆண் : மூடாமல் கண்கள் ரெண்டும்…
தண்டோரா போடும்…
பேசாமல் மௌனம் வந்து…
ஆராரோ பாடும்…
ஆண் : பகலிலே தாயை போல…
தாலாட்டும் காதலே…
இரவிலே பேயை போல…
தலை காட்டும் காதலே…
ஆண் : மழை பெய்யும் போதும்…
நனையாத யோகம்…
இது என்ன மாயம்…
யார் செய்ததோ…
—BGM—
ஆண் : தொலையாமல் தொலைந்து விடும்…
நிலைமை இது முடிவதில்லை…
விலகாமல் தொடர்ந்து வரும்…
வெளிப்படையாய் தெரிவதில்லை…
ஆண் : கொல்லாமல் கொல்லும் இது…
உன் போல சைவம்…
சொல்லாமல் கொள்ளை இடும்…
பொல்லாத தெய்வம்…
ஆண் : குடையுதே எதோ ஒன்று…
அது தான் காதலே…
உடையுதே உயிரும் இன்று…
அதுதான் காதலே…
ஆண் : மழை பெய்யும் போதும்…
நனையாத யோகம்…
இது என்ன மாயம்…
யார் செய்ததோ…
ஆண் : நடக்கின்ற போதும்…
நகராத தூரம்…
இது என்ன கோலம்…
யார் சொல்வதோ…
ஆண் : இது மின்னலா…
இல்லை தென்றலா…
அறியாமலே அலைபாயுதே…
ஆண் : இது வண்ணமா…
இல்லை வன்மமா…
விளங்காமலே விளையாடுதே…
—BGM—
Notes : Mazhai Peyyum Song Lyrics in Tamil. This Song from Renigunta (2009). Song Lyrics penned by Yugabharathi. மழை பெய்யும் பாடல் வரிகள்.