Category Archives: ரேனிகுண்டா 

mazhai-peyyum-song-lyrics-in-tamil

மழை பெய்யும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிஹரிஷ் ராகவேந்திராகணேஷ் ராகவேந்திரன்ரேனிகுண்டா 

Mazhai Peyyum Song Lyrics in Tamil


BGM

ஆண் : மழை பெய்யும் போதும்…
நனையாத யோகம்…
இது என்ன மாயம்…
யார் செய்ததோ…

ஆண் : நடக்கின்ற போதும்…
நகராத தூரம்…
இது என்ன கோலம்…
யார் சொல்வதோ…

ஆண் : இது மின்னலா…
இல்லை தென்றலா…
அறியாமலே அலைபாயுதே…

ஆண் : இது வண்ணமா…
இல்லை வன்மமா…
விளங்காமலே விளையாடுதே…

ஆண் : மழை பெய்யும் போதும்…
நனையாத யோகம்…
இது என்ன மாயம்…
யார் செய்ததோ…

BGM

ஆண் : சில நேரம் மயிலிறகாய்…
வருடிவிடும் புனிதமிது…
சில நேரம் ரகசியமாய்…
திருடிவிடும் கொடுமை இது…

ஆண் : மூடாமல் கண்கள் ரெண்டும்…
தண்டோரா போடும்…
பேசாமல் மௌனம் வந்து…
ஆராரோ பாடும்…

ஆண் : பகலிலே தாயை போல…
தாலாட்டும் காதலே…
இரவிலே பேயை போல…
தலை காட்டும் காதலே…

ஆண் : மழை பெய்யும் போதும்…
நனையாத யோகம்…
இது என்ன மாயம்…
யார் செய்ததோ…

BGM

ஆண் : தொலையாமல் தொலைந்து விடும்…
நிலைமை இது முடிவதில்லை…
விலகாமல் தொடர்ந்து வரும்…
வெளிப்படையாய் தெரிவதில்லை…

ஆண் : கொல்லாமல் கொல்லும் இது…
உன் போல சைவம்…
சொல்லாமல் கொள்ளை இடும்…
பொல்லாத தெய்வம்…

ஆண் : குடையுதே எதோ ஒன்று…
அது தான் காதலே…
உடையுதே உயிரும் இன்று…
அதுதான் காதலே…

ஆண் : மழை பெய்யும் போதும்…
நனையாத யோகம்…
இது என்ன மாயம்…
யார் செய்ததோ…

ஆண் : நடக்கின்ற போதும்…
நகராத தூரம்…
இது என்ன கோலம்…
யார் சொல்வதோ…

ஆண் : இது மின்னலா…
இல்லை தென்றலா…
அறியாமலே அலைபாயுதே…

ஆண் : இது வண்ணமா…
இல்லை வன்மமா…
விளங்காமலே விளையாடுதே…

BGM


Notes : Mazhai Peyyum Song Lyrics in Tamil. This Song from Renigunta (2009). Song Lyrics penned by Yugabharathi. மழை பெய்யும் பாடல் வரிகள்.