Category Archives: யோகி

Yaarodu Yaaro Song Lyrics in Tamil

யாரோடு யாரோ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
சினேகன்யுவன் ஷங்கர் ராஜா & உஸ்தாத் சுல்தான் கான்யுவன் ஷங்கர் ராஜாயோகி

Yaarodu Yaaro Song Lyrics in Tamil


BGM

ஆண் : யாரோடு யாரோ…
இந்த சொந்தம் என்ன பேரோ…
நேற்று வரை நீயும் நானும்…
யாரோ யாரோ தானோ…

ஆண் : ஓர் ஆளில்லா வானில்…
கருமேகங்களின் காதல்…
கேட்க இடி மின்னல் நெஞ்சை நனைக்குமோ…

ஆண் : வஞ்சம் கொண்ட நெஞ்சம்…
உருகுது கொஞ்சம்…
சிறுகதை தொடர்கதை ஆகுமோ…

ஆண் : இது என்ன மாயம்…
சூரியனில் ஈரம்…
வெண்ணிலவில் விடியலும் தொடங்குமோ…

ஆண் : நதி வந்து கடல்மீது சேரும்போது…
புயல் வந்து மலரோடு மோதும்போது…
மழை வந்து வெயிலோடு கூடும்போது…
யாரோடு யாருமிங்கே…

ஆண் : வஞ்சம் கொண்ட நெஞ்சம்…
உருகுது கொஞ்சம்…
சிறுகதை தொடர்கதை ஆகுமோ…

ஆண் : இது என்ன மாயம்…
சூரியனில் ஈரம்…
வெண்ணிலவில் விடியலும் தொடங்குமோ…

BGM

ஆண் : இதயங்கள் சேரும்…
நொடிக்காக யாரும்…
கடிகாரம் பார்ப்பது இல்லையே…

ஆண் : நீரோடு வேரும்…
வேரோடு பூவும்…
தொடர்கின்ற நேசங்கள் வாழ்க்கையே…

ஆண் : ஓர் உறவும் இல்லாமல் உணர்வும் சொல்லாமலே…
புது முகவரி தேடுதோ…
வாய்மொழியும் இல்லாமல் வழியும் சொல்லாமல்…
பாசக்கலவரம் சேர்க்குதோ…

ஆண் : ஒரு மின்மினியே மின்சாரத்தை தேடி வரும் போது…
என்ன நியாயம் கூறு விதிதானே…

BGM

ஆண் : பறவைக்கு காற்று பகையானால் கூட…
சிறகுக்கு சேதம் இல்லையே…
துளையிட்ட மூங்கில் தாங்கிய இரணங்கள்…
இசைக்கின்றபோதும் இன்பமே…

ஆண் : சிறு விதையும் இல்லாமல் கருவும் கொள்ளாமலே…
இங்கு ஜனனமும் ஆனதே…
ஒரு முடிவும் இல்லாமல் முதலும் இல்லாமல்…
காலம் புதிர்களைப் போடுதே…

ஆண் : அட அருகம்புல்லின் நுனியில் ஏறி…
நிற்கும் பனி போலே…
எத்தனை நாள் வாழ்க்கை தெரியாதே…

BGM

ஆண் : வஞ்சம் கொண்ட நெஞ்சம்…
உருகுது கொஞ்சம்…
சிறுகதை தொடர்கதை ஆகுமோ…


Notes : Yaarodu Yaaro Song Lyrics in Tamil. This Song from Yogi (2009). Song Lyrics penned by Snehan. யாரோடு யாரோ பாடல் வரிகள்.