Category Archives: மானஸ்தன்

raasa-raasa-song-lyrics-in-tamil-maanasthan

ராசா ராசா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நந்தலாலாகே.எஸ்.சித்ரா & ஹரிஹரன்எஸ். ஏ. ராஜ்குமார்மானஸ்தன்

Raasa Raasa Song Lyrics in Tamil


BGM

பெண் : ராசா ராசா உன்ன…
வச்சிருக்கேன் நெஞ்சிலே…
ரோசா பூவைபோல…

ஆண் : அடி கண்ணே கண்ணே…
உன்னை கண்ணுக்குள்ள வச்சேனே…
கண்ணுமணியப்போல…

பெண் : நெல்லி கொத்தி வைக்கும்…
எங்க பத்தாயத்துல…
ஆசை கொட்டி வச்சேன்…
தினம் உன் நெனப்புல…

ஆண் : நீயும் இல்லாம நானும் இல்லை…

பெண் : ராசா ராசா உன்ன…
வச்சிருக்கேன் நெஞ்சிலே…
ரோசா பூவைபோல…

ஆண் : அடி கண்ணே கண்ணே…
உன்னை கண்ணுக்குள்ள வச்சேனே…
கண்ணுமணியப்போல…

BGM

ஆண் : ராசாத்தி நீயும்தான்…
பூகோலம் போடத்தான்…
புள்ளிமான் புள்ளியெல்லாம்…
வாங்கி வருவேன்…

BGM

பெண் : சாமிய சந்திச்சா…
என் ஆயுள் காலத்தை…
உன்னோட சேர்க்கும் வரம்…
வாங்கி வருவேன்…

ஆண் : தோளுலே ஊஞ்சல் கட்டி…
தோகமயிலே தாலாட்டுவேன்…

பெண் : வீசும் காத்தை சல்லடையால…
சரிச்சு தூசி எடுப்பேன்…
உனக்கும் மூச்சு குடுப்பேன்…

பெண் : ராசா ராசா உன்ன…
வச்சிருக்கேன் நெஞ்சிலே…
ரோசா பூவைபோல…

ஆண் : அடி கண்ணே கண்ணே…
உன்னை கண்ணுக்குள்ள வச்சேனே…
கண்ணுமணியப்போல…

BGM

ஆண் : முள்ளைப்பூ காம்புதான்…
உன் கையை குத்தாதா…
ஊருக்குள் காம்பில்லாத பூவும் பூக்காதா…

BGM

பெண் : செம்மண்ணின் புழுதி…
உன் கண்ணில் விழுமே…
புழுதி காத்தில்லாம பூமி சுத்தாதா…

ஆண் : மூக்குத்தி குத்தாதடி…
எனக்கு வலிக்கும் வேணாமடி…

பெண் : உனக்கு வலிச்சா மறுநொடி நானும்…
உசுர கையில் எடுப்பேன்…
உனக்கு நானும் குடுப்பேன்…

பெண் : ராசா ராசா உன்ன…
வச்சிருக்கேன் நெஞ்சிலே…
ரோசா பூவைபோல…

ஆண் : அடி கண்ணே கண்ணே…
உன்னை கண்ணுக்குள்ள வச்சேனே…
கண்ணுமணியப்போல…

பெண் : நெல்லி கொத்தி வைக்கும்…
எங்க பத்தாயத்துல…
ஆசை கொட்டி வச்சேன்…
தினம் உன் நெனப்புல…

ஆண் : நீயும் இல்லாம நானும் இல்லை…

பெண் : ராசா ராசா உன்ன…
வச்சிருக்கேன் நெஞ்சிலே…
ரோசா பூவைபோல…

ஆண் : அடி கண்ணே கண்ணே…
உன்னை கண்ணுக்குள்ள வச்சேனே…
கண்ணுமணியப்போல…


Notes : Raasa Raasa Song Lyrics in Tamil. This Song from Maanasthan (2004). Song Lyrics penned by Nandalala. ராசா ராசா பாடல் வரிகள்.