Category Archives: அவதாரம்

அரிதாரத்த

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஇளையராஜா & எஸ்.ஜானகிஇளையராஜாஅவதாரம்

Arithaaratha Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஹ்ம்ம்… அரிதாரத்த பூசி கொள்ள ஆசை…
நான் அடவு கட்டி ஆட்டம் போட ஆசை…

ஆண் : என் பொன்னம்மா பொன்னம்மா…
பொன்னம்மா பொன்னமாவ்…
பெண் : என்ன குப்புசாமி னை னைனுட்டு…

ஆண் : என்ன பொன்னம்மா…
நீயாவது வாத்தியாரு கிட்ட சொல்லி…
என்னை சேர்த்துக்க சொல்ல கூடாதா…

பெண் : எதுல சேர்க்க சொல்ல…

ஆண் : என் பொன்னம்மா பொன்னம்மா…
கொஞ்சம் ரெக்கமெண்டு பண்ணம்மா…
நம்ம வாத்தியாரு என்ன சொல்லுவாரோ…
பெண் : கூத்துலையா…
ஆண் : இந்த ஏழை என்னை ஏத்துக்கொள்ளுவாரோ…

ஆண் : அரிதாரத்த பூசி கொள்ள ஆசை…
நான் அடவு கட்டி ஆட்டம் போட ஆசை…
அரிதாரத்த பூசி கொள்ள ஆசை…
நான் அடவு கட்டி ஆட்டம் போட ஆசை…

ஆண் : என் பொன்னம்மா பொன்னம்மா…
கொஞ்சம் ரெக்கமெண்டு பண்ணம்மா…
நம்ம வாத்தியாரு என்ன சொல்லுவாரோ…
இந்த ஏழை என்னை ஏத்துக்கொள்ளுவாரோ…
நம்ம வாத்தியாரு என்ன சொல்லுவாரோ…
இந்த ஏழை என்னை ஏத்துக்கொள்ளுவாரோ…

பெண் : அரிதாரத்தின் மேலே என்ன ஆசை…
நீயும் ஆசைபட்டா நானும் என்ன பேச…
ஆண் : ஹ்ம்ம்… ஹ்ம்ம்…

பெண் : அரிதாரத்தின் மேலே என்ன ஆசை…
நீயும் ஆசை பட்டா நானும் என்ன பேச…
ஆண் : ஹான்…

பெண் : ஹேய்… குப்பண்ணா குப்பண்ணா…
ஆண் : ஆமா…
பெண் : ரொம்ப தப்பண்ணா தப்பண்ணா…
ஆண் : சரியா போச்சு போ…

பெண் : இப்ப சிட்டு போல சுத்தும் சுகம் போதும்…
ஒரு கட்டுக்குள்ள சிக்கி கொள்ள வேணாம்…
இப்ப சிட்டு போல சுத்தும் சுகம் போதும்…
ஒரு கட்டுக்குள்ள சிக்கி கொள்ள வேணாம்…

ஆண் : போ பொன்னம்மா…
ஒரு நல்ல விஷயத்தை பத்தி பேசும்போது…
இப்படி சொல்லிக்கிட்டு…
த பாரு நீயே என்ன பத்தி…
வாத்தியார்கிட்ட சொல்லலைன்னா…
வேற யாரு சொல்லுவாங்க…

ஆண் : நீ இப்ப அப்படி தான் பேசுவ…
அப்புறம் நான் அரிதாரம் பூசிகிட்டு…
கெந்தல கட்டிக்கிட்டு அப்படி மேடையில ஏறினா…

ஆண் : ஹா… என் பாட்ட எடுத்து உட்டா… ஹாஆஆ…
ஊரு சனம் எல்லாம் மெய் மறக்கும்…
அது உசுரோட போய் கலக்கும்…

பெண் : பாட்டுன்னு நினைப்பதெல்லாம்…
இங்கு பாட்டாக இருப்பதில்லை…
ஆண் : அது என் பாட்டு இல்ல…
பெண் : அது லேசான விஷயம் இல்ல…
ஆண் : அது யாரு இல்லைனா…

ஆண் : அதுக்காகதான் இசை அவதாரமாய்…
நான் பொறந்தேன்னு பூலோகம் பாராட்டுமே…

பெண் : ராகூத்துல வரும் சாமி எல்லாம்…
நெச சாமின்னு பாக்காது ஊர் சனமே…

ஆண் : அட காசுக்கா பேருக்கா ஆச நான் பட்டது…
வேற எதும் சொல்ல வரல…

ஆண் : அரிதாரத்த பூசி கொள்ள ஆசை…
பெண் : நீயும் ஆசை பட்டா நானும் என்ன பேச…
ஆண் : அப்போ ரெக்கமெண்டு பண்ணு…

BGM

பெண் : கூத்தாடி பொழப்பு எல்லாம்…
அந்த காத்தாடி படும் பாடு…
அடி ஆத்தாடி வெட்க கேடு…

ஆண் : ஹம்ம்… எல்லார்க்கும் உள்ள சுகம்…
அதில் எனக்கும் ஓர் பங்கு உண்டு…
அது எப்போதும் இங்கு உண்டு…

பெண் : கூத்தாடிக்கு சுகம் தூக்கத்தில்தான்…
உன் வாழ்நாள தூக்கத்தில் ஏன் போக்குற…

ஆண் : நம்ம முன்னோர்களின் கலை முன்னால் வைத்தால்…
சுகம் உண்டென்று அறியாமல் நீ பேசுற…

பெண் : ஊரெல்லாம் வேஷமே போடுது ஆடுது…
நீயும் ஏன்யா வேஷம் போடணும்…

ஆண் : அரிதாரத்த பூசி கொள்ள ஆசை…
நான் அடவு கட்டி ஆட்டம் போட ஆசை…

பெண் : அரிதாரத்தின் மேலே என்ன ஆசை…
நீயும் ஆசை பட்டா நானும் என்ன பேச…

ஆண் : என் பொன்னம்மா பொன்னம்மா…
கொஞ்சம் ரெக்கமெண்டு பண்ணம்மா…

பெண் : இப்ப சிட்டு போல சுத்தும் சுகம் போதும்…
ஒரு கட்டுக்குள்ள சிக்கி கொள்ள வேணாம்…

ஆண் : அந்த சாமி நல்ல வரம் கொடுக்க போனா…
சின்ன பூசாரியே தட்டி விட வேணாம்…

ஆண் : அரிதாரத்த பூசி கொள்ள ஆசை…
பெண் : நீயும் ஆசை பட்டா நானும் என்ன பேச…

ஆண் : அப்படி ஒத்துக்க…


Notes : Arithaaratha Song Lyrics in Tamil. This Song from Avatharam (1995). Song Lyrics penned by Vaali. அரிதாரத்த பாடல் வரிகள்.


thendral-vanthu-theendum-pothu-song-lyrics

தென்றல் வந்து தீண்டும் போது

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஇளையராஜா & எஸ்.ஜானகிஇளையராஜாஅவதாரம்

Thendral Vanthu Theendum Pothu Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : தென்றல் வந்து தீண்டும்போது…
என்ன வண்ணமோ மனசுல…
திங்கள் வந்து காயும் போது…
என்ன வண்ணமோ நினைப்புல…

ஆண் : வந்து வந்து போகுதம்மா…
எண்ணமெல்லாம் வண்ணமம்மா…
எண்ணங்களுக்கேற்றபடி…
வண்ணமெல்லாம் மாறுமம்மா…
உண்மையம்மா உள்ளதை நானும் சொன்னேன்…
பொன்னம்மா சின்னக் கண்ணம்மா…

ஆண் : தென்றல் வந்து தீண்டும்போது…
என்ன வண்ணமோ மனசுல…
திங்கள் வந்து காயும் போது…
என்ன வண்ணமோ நினைப்புல…

—BGM—

பெண் : எவரும் சொல்லாமலே…
பூக்களும் வாசம் வீசுது…
உறவும் இல்லாமலே…
இருமனம் ஏதோ பேசுது…

ஆண் : எவரும் சொல்லாமலே…
குயிலெல்லாம் தேனா பாடுது…
எதுவும் இல்லாமலே…
மனசெல்லாம் இனிப்பா இனிக்குது…

பெண் : ஓடை நீரோடை…
இந்த உலகம் அது போல…

ஆண் : ஓடும் அது ஓடும்…
இந்தக் காலம் அது போல…

பெண் : நிலையா நில்லாது…
நினைவில் வரும் நிறங்களே…

ஆண் : தென்றல் வந்து தீண்டும்போது…
என்ன வண்ணமோ மனசுல…

—BGM—

ஆண் : ஈரம் விழுந்தாலே…
நிலத்திலே எல்லாம் துளிர்க்குது…
நேசம் பிறந்தாலே…
உடம்பெல்லாம் ஏதோ சிலிர்க்குது…

பெண் : ஆலம் விழுதாக…
ஆசைகள் ஊஞ்சல் ஆடுது…
அலையும் அலை போலே…
அழகெல்லாம் கோலம் போடுது…

ஆண் : குயிலே குயிலினமே…
அந்த இசையா கூவுதம்மா…

பெண் : கிளியே கிளியினமே…
அதைக் கதையாப் பேசுதம்மா…

ஆண் : கதையாய் விடுகதையாய்…
ஆவதில்லையே அன்புதான்…

பெண் : தென்றல் வந்து தீண்டும்போது…
என்ன வண்ணமோ மனசுல…

ஆண் : திங்கள் வந்து காயும்போது…
என்ன வண்ணமோ நினைப்புல…

பெண் : வந்து வந்து போகுதம்மா…
எண்ணமெல்லாம் வண்ணமம்மா…

ஆண் : எண்ணங்களுக்கேற்றபடி…
வண்ணமெல்லாம் மாறுமம்மா…

பெண் : உண்மையிலே உள்ளது என்ன என்ன…
வண்ணங்கள் என்ன என்ன…

ஆண் : தென்றல் வந்து தீண்டும்போது…
என்ன வண்ணமோ மனசுல…
திங்கள் வந்து காயும் போது…
என்ன வண்ணமோ நினைப்புல…


Notes : Thendral Vanthu Theendum Pothu Song Lyrics in Tamil. This Song from Avatharam (1995). Song Lyrics penned by Vaali. தென்றல் வந்து தீண்டும் போது பாடல் வரிகள்.