Category Archives: ஊரெல்லாம் உன் பாட்டு

ஊரெல்லாம் உன் பாட்டு – Oorellam Un Paattu (1991)

ஊரெல்லாம் உன் பாட்டுதான்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிகே.ஜே. யேசுதாஸ்இளையராஜாஊரெல்லாம் உன் பாட்டு

Oorellam Un Paatuthan Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஊரெல்லாம் உன் பாட்டுதான் உள்ளத்தை மீட்டுது…
நாளெல்லாம் உன் பார்வைதான் இன்பத்தைக் கூட்டுது…
நீயல்லால் தெய்வம் வேறெது…
நீயெனை சேரும் நாள் எது… ஓஹோ…

ஆண் : ஊரெல்லாம் உன் பாட்டுதான் உள்ளத்தை மீட்டுது…
நாளெல்லாம் உன் பார்வைதான் இன்பத்தைக் கூட்டுது…

BGM

ஆண் : உன் பெயர் உச்சரிக்கும்…
உள்ளம் நித்தமும் தத்தளிக்கும்…
இங்கு நீ இல்லாது வாழ்வில் ஏது…
வேணிற்க் காலம்தான்…

ஆண் : என் மனம் உன் வசமே…
கண்ணில் என்றும் உன் சொப்பனமே…
விழி காணும் காட்சி யாவும்…
உந்தன் வண்ணக் கோலம்தான்…

ஆண் : ஆலம் விழுதுகள் போலே…
ஆடும் நினைவுகள் கோடி…
ஆடும் நினைவுகள் நாளும்…
பாடும் உனதருள் தேடி…

ஆண் : இந்தப் பிறப்பிலும் எந்தப் பிறப்பிலும்…
எந்தன் உயிர் உனைச் சேரும்…

ஆண் : ஊரெல்லாம் உன் பாட்டுதான் உள்ளத்தை மீட்டுது…
நாளெல்லாம் உன் பார்வைதான் இன்பத்தைக் கூட்டுது…

BGM

ஆண் : சென்றது கண்ணுறக்கம்…
நெஞ்சில் நின்றது உன் மயக்கம்…
இங்கு ஓய்வதேது தேய்வதேது உந்தன் ஞாபகம்…

ஆண் : உன்னிடம் சொல்வதற்கு…
எண்ணம் ஒன்றல்ல நூறிருக்கு…
அதை நீயும் கேட்க நானும் சொல்ல ஏது வாசகம்…

ஆண் : பாதச் சுவடுகள் போகும்…
பாதை அறிந்திங்கு நானும்…
கூட வருகின்ற போதும்…
கூட மறுப்பதோ நீயும்…

ஆண் : உள்ளக் கதவினை மெல்லத் திறந்திங்கு…
நெஞ்சில் இடம் தர வேண்டும்…

ஆண் : ஊரெல்லாம் உன் பாட்டுதான் உள்ளத்தை மீட்டுது…
நாளெல்லாம் உன் பார்வைதான் இன்பத்தைக் கூட்டுது…
நீயல்லால் தெய்வம் வேறெது…
நீயெனை சேரும் நாள் எது… ஓஹோ…

ஆண் : ஊரெல்லாம் உன் பாட்டுதான் உள்ளத்தை மீட்டுது…
நாளெல்லாம் உன் பார்வைதான் இன்பத்தைக் கூட்டுது…


Notes : Oorellam Un Paatuthan Song Lyrics in Tamil. This Song from Oorellam Un Paattu (1991). Song Lyrics penned by Vaali. ஊரெல்லாம் உன் பாட்டுதான் பாடல் வரிகள்.