Category Archives: தணியாத தாகம்

தணியாத தாகம் – Thaniyatha Thagam (1982)

பூவே நீ யார்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
உமா நாகபூஷணம்மலேசியா வாசுதேவன் & எஸ். ஜானகிஏ.ஏ.ராஜ்தணியாத தாகம்

Poove Nee Yaar Song Lyrics in Tamil


BGM

பெண் : பூவே நீ யார் சொல்லி யாருக்காக மலர்கின்றாய்…
நான் பருவத் தோட்டத்தில் ஒரு மலர்…
நான் பருவத் தோட்டத்தில் ஒரு மலர்…
உன்னோடு பாடிட வந்த புதுமலர் புதுமலர்…

ஆண் : பூவே நீ யார் சொல்லி யாருக்காக மலர்கின்றாய்…
இவள் பருவத் தோட்டத்தில் ஒரு மலர்…
இவள் பருவத் தோட்டத்தில் ஒரு மலர்…
உன்னோடு பாடிட வந்த புதுமலர் புதுமலர்…
பூவே…

BGM

பெண் : நீ கோவில் கொண்ட அந்த கண்ணனுக்கோ…
நான் என் நெஞ்சில் வாழும் இந்த மன்னனுக்கோ…
நீ கோவில் கொண்ட அந்த கண்ணனுக்கோ…
நான் என் நெஞ்சில் வாழும் இந்த மன்னனுக்கோ…

பெண் : என் தேவன் தேரேறி வருகின்றான்…
என் தேவன் தேரேறி வருகின்றான்…
புன்னகையில் உன்னை அள்ளி தருகின்றான்…

பெண் : பூவே நீ யார் சொல்லி யாருக்காக மலர்கின்றாய்…
நான் பருவத் தோட்டத்தில் ஒரு மலர்…
நான் பருவத் தோட்டத்தில் ஒரு மலர்…
உன்னோடு பாடிட வந்த புதுமலர் புதுமலர்…
பூவே…

BGM

ஆண் : கோவில் கலசம் போல் என் தேவி…
கூந்தலில் ஆடிடும் உன் மேனி…
கோவில் கலசம் போல் என் தேவி…
இவள் கூந்தலில் ஆடிடும் உன் மேனி…

ஆண் : பூவிலும் பூ அவள் பொன்மேனி…
பூவிலும் பூ அவள் பொன்மேனி…
இவள் புது உடல் தழுவிடும் என் மேனி…

ஆண் : பூவே நீ யார் சொல்லி யாருக்காக மலர்கின்றாய்…
இவள் பருவத் தோட்டத்தில் ஒரு மலர்…
இவள் பருவத் தோட்டத்தில் ஒரு மலர்…
உன்னோடு பாடிட வந்த புதுமலர் புதுமலர்…
பூவே…

BGM

பெண் : மார்கழி இளந்தென்றல் தாலாட்டு…
என் மைவிழி மயங்கிட சீராட்டு…

BGM

ஆண் : பூ போல் சிரிக்கிறாள் இளஞ்சிட்டு…
இவள் பொன்னுடல் சிலிர்க்கட்டும் என் கரம்பட்டு…

ஆண் : பூவே நீ யார் சொல்லி யாருக்காக மலர்கின்றாய்…
பெண் : நான் பருவத் தோட்டத்தில் ஒரு மலர்…
ஆண் : இவள் பருவத் தோட்டத்தில் ஒரு மலர்…
ஆண் & பெண் : உன்னோடு பாடிட வந்த புது மலர் புது மலர்…

பெண் : புது மலர்…
ஆண் : புது மலர்…

BGM


Notes : Poove Nee Yaar Song Lyrics in Tamil. This Song from Thaniyatha Thagam (1982). Song Lyrics penned by Uma Nagabushanam. பூவே நீ யார் பாடல் வரிகள்.