Category Archives: எங்கள் குரல்

எங்கள் குரல் – Engal Kural (1985)

முதல் இரவு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
டி. ராஜேந்தர்எஸ்.பி. பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகிடி. ராஜேந்தர்எங்கள் குரல்

Muthal Iravu Song Lyrics in Tamil


BGM

பெண் : முதல் இரவு… முழு நிலவு…
பாலும் கொண்டு… பழமும் கொண்டு…

பெண் : புது கவிதை வளம் கொழிக்கும்…
மேனி என்னும் புத்தகத்த சேல மறைக்குதாம்…
அதன் உள்ளிருக்கும் தத்துவத்தை…
காளையவன் படிப்பதற்கே மணம் முடித்ததாம்…
திருமணம் முடித்ததாம்…
இரு மனம் தவித்ததாம்…

பெண் : முதல் இரவு… முழு நிலவு…

BGM

பெண் : பாவை அவள் மேனியெங்கும்…
பத்து விரல் யாத்திரையாம்…
யாத்திரையின் தொல்லையிலே…
போனதெல்லாம் நித்திரையாம்…

பெண் : காலிலிட்ட கொலுசு கூட…
உரசையிலே ஆணையிடும்…
காலிலிட்ட கொலுசு கூட…
உரசையிலே ஆணையிடும்…

பெண் : குத்தி வந்த மூக்குத்தியை திருடி வச்ச…
நட்சத்திரம் என்று சொல்லுவான்…
கட்டி வந்த பட்டுச் சேல கட்டும்போது…
உறுத்துமென்று தனனனன்னா…

பெண் : முதல் இரவு… முழு நிலவு…

BGM

பெண் : மயக்கத்த வரவழைக்கும்…
மாயவரம் மல்லிகைப்பூ…
ஆரம்பத்தில் பளபளக்கும்…
அரவணைப்பில் பொலிவிழக்கும்…

பெண் : உதிர்வது பூச்சரமாம்…
உடைவது வளையல்களாம்…
உதிர்வது பூச்சரமாம்…
உடைவது வளையல்களாம்…

பெண் : அலங்கரித்த கட்டிலுக்கு…
கொஞ்சல்களை கேட்டதிலே கிளுகிளுப்பாம்…
அவள் மதிக்கும் ஆடைகளை…
அவமதிப்பில் வெரட்டுவது ஆடவர் குணமாம்…

பெண் : முதல் இரவு… முழு நிலவு…
பாலும் கொண்டு… பழமும் கொண்டு…

பெண் : புது கவிதை வளம் கொழிக்கும்…
மேனி என்னும் புத்தகத்த சேல மறைக்குதாம்…
அதன் உள்ளிருக்கும் தத்துவத்தை…
காளையவன் படிப்பதற்கே மணம் முடித்ததாம்…

பெண் : திருமணம் முடித்ததாம்…
இரு மனம் தவித்ததாம்…
திருமணம் முடித்ததாம்…
இரு மனம் தவித்ததாம்…


Notes : Muthal Iravu Song Lyrics in Tamil. This Song from Engal Kural (1985). Song Lyrics penned by T. Rajendar. முதல் இரவு பாடல் வரிகள்.