பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
முத்துலிங்கம் | எஸ்.பி. சைலஜா & மலேசியா வாசுதேவன் | கங்கை அமரன் | எங்க ஊர் ராசாத்தி |
Ponmana Thedi Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : பொன் மானைத்தேடி நானும் பூவோடு வந்தேன்…
—BGM—
ஆண் : பொன் மானைத்தேடி நானும் பூவோடு வந்தேன்…
நான் வந்த நேரம் அந்த மான் அங்கு இல்லை…
அந்த மான் போன மாயமென்ன என் ராசாத்தி…
ஆண் : அடி நீ சொன்ன பேச்சு…
நீர் மேல போட்ட மாக்கோலம் ஆச்சுதடி…
அடி நான் சொன்ன பாட்டு…
ஆத்தோரம் வீசும் காத்தோடு போச்சுதடி…
—BGM—
பெண் : மானோ தவிச்சு வாடுது…
மனசு நெனச்சு வாடுது…
எனக்கும் ஆச இருக்குது…
ஆனா நெலம தடுக்குது…
பெண் : உன்ன மறக்க முடியுமா…
உயிரை வெறுக்க முடியுமா…
ராசாவே காற்றில் ஆடும் தீபம் போல…
துடிக்கும் மனச அறிவாயோ…
ஆண் : பொன் மானைத்தேடி நானும் பூவோடு வந்தேன்…
நான் வந்த நேரம் அந்த மான் அங்கு இல்லை…
—BGM—
ஆண் : எனக்கும் உன்ன புரியுது…
உள்ளம் நல்லாத் தெரியுது…
அன்பு நம்ம சேர்த்தது…
ஆச நம்ம பிரிச்சது…
ஆண் : உன்ன மறக்க முடியல…
உயிரை வெறுக்க முடியல…
ராசாத்தி நீயும் நானும் ஒண்ணா சேரும்…
காலம் இனிமேல் வாராதோ…
பெண் : இன்னொரு ஜென்மம் இருந்தா அப்போது பொறப்போம்…
ஒண்ணோடு ஒண்ணா கலந்து அப்போது இருப்போம்…
அது கூடாமப் போச்சுதுன்னா என் ராசாவே…
பெண் : நான் வெண் மேகமாக விடிவெள்ளியாக…
வானத்தில் பிறந்திருப்பேன்…
என்னை அடையாளம் கண்டு நீ தேடி வந்தா…
அப்போது நான் சிரிப்பேன்…
ஆண் : பொன் மானைத்தேடி நானும் பூவோடு வந்தேன்…
நான் வந்த நேரம் அந்த மான் அங்கு இல்லை…
Notes : Ponmana Thedi Song Lyrics in Tamil. This Song from Enga Ooru Rasathi (1980). Song Lyrics penned by Muthulingam. பொன் மானைத்தேடி பாடல் வரிகள்.