Category Archives: ஆண்பாவம்

ஆண்பாவம் – Aan Paavam (1985)

என்ன பாடச் சொல்லாதே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். ஜானகிஇளையராஜாஆண்பாவம்

Enna Paada Sollaathey Song Lyrics in Tamil


பெண் : என்ன பாடச் சொல்லாதே…
நான் கண்டபடி பாடிப்புடுவேன்…

BGM

பெண் : என்ன பாடச் சொல்லாதே…
நான் கண்டபடி பாடிப்புடுவேன்…
என்ன பாடச் சொல்லாதே…
நான் கண்டபடி பாடிப்புடுவேன்…

பெண் : அதக் கேட்டா மடையனுக்கும் ஞானம் பொறந்திடும்…
மூடிக் கெடக்கும் பல கண்ணும் தெறந்திடும்…

பெண் : கேட்டா மடையனுக்கும்…
குழு : ஞானம் பொறந்திடும்…
பெண் : அட மூடிக் கெடக்கும் பல…
குழு : கண்ணும் தெறந்திடும்…

பெண் : என்ன பாடச் சொல்லாதே…
நான் கண்டபடி பாடிப்புடுவேன்…

BGM

பெண் : தேவாரமும் படிச்சோம்…
திருவாசகம் படிச்சோம்…
தெரியாம திருக்குறளும்தான் படிச்சோம்…

பெண் : ஆனான படிப்பை எல்லாம்…
அன்னாடம் படிச்சிபுட்டு…
புரியாம தெரியாமதான் முழிச்சோம்…

பெண் : அறிவான ஆத்திச்சூடி…
கொடுத்தாளே அவ்வைப்பாட்டி…
அதக்கூட பாடி என்ன கிழிச்சிப்புட்டோம்…

குழு : அறிவான ஆத்திச்சூடி…
கொடுத்தாளே அவ்வைப்பாட்டி…
அதக்கூட பாடி என்ன கிழிச்சிப்புட்டோம்…

பெண் : நாடும் என்னாச்சு…
நம்ம ஊரும் என்னாச்சு…
அட பேசிபேசித்தான் நல்ல பொழுதும் போயாச்சு…

பெண் : இந்த தேசம் ரொம்ப மோசம்…
இதப் பார்க்கும்போது இப்ப…

பெண் : என்னப் பாடச் சொல்லாதே…
நான் கண்டபடி பாடிப்புடுவேன்…
என்ன பாடச் சொல்லாதே…
நான் கண்டபடி பாடிப்புடுவேன்…

BGM

பெண் : காம்போதியும் தெரியும்…
கல்யாணியும் புரியும்…
பொதுவாக நெனச்சதும் நான் பாட்டெடுப்பேன்…

பெண் : ஆகாத பொழப்பை எல்லாம்…
அநியாய நடப்பை எல்லாம்…
அஞ்சாம என் பாட்டில் போட்டுடைப்பேன்…

பெண் : நாய் வால நிமிர்த்துறதும்…
காக்காய வெளுக்குறதும்…
அம்மாடி யாரால ஆகும் இப்போ…

குழு : நாய் வால நிமிர்த்துறதும்…
காக்காய வெளுக்குறதும்…
அம்மாடி யாரால ஆகும் இப்போ…

பெண் : பார்க்கப் போனாக்க…
நான் பொட்டப் புள்ளத்தான்…
அட போட்டிப் போட்டாக்க…
ரொம்ப கெட்டப் புள்ளத்தான்…

பெண் : ஒரு வேகம் ஒரு கோபம்…
ஒண்ணு சேரும்போது இப்ப…

பெண் : என்னப் பாடச் சொல்லாதே…
நான் கண்டபடி பாடிப்புடுவேன்…
என்ன பாடச் சொல்லாதே…
நான் கண்டபடி பாடிப்புடுவேன்…

பெண் : அதக் கேட்டா மடையனுக்கும்…
குழு : ஞானம் பொறந்திடும்…
பெண் : அட மூடிக் கெடக்கும் பல…
குழு : கண்ணும் தெறந்திடும்…

பெண் : என்னப் பாடச் சொல்லாதே…
நான் கண்டபடி பாடிப்புடுவேன்…


Notes : Enna Paada Sollaathey Song Lyrics in Tamil. This Song from Aan Paavam (1985). Song Lyrics penned by Vaali. என்ன பாடச் சொல்லாதே பாடல் வரிகள்.


காதல் கசக்குதயா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஇளையராஜாஇளையராஜாஆண்பாவம்

Kadhal Kasakkuthaiya Song Lyrics in Tamil


BGM

ஆண் : காதல் கசக்குதயா…
வர வர காதல் கசக்குதயா…
மனம்தான் லவ் லவ்வுன்னு அடிக்கும்…
லவ்வுன்னுதான் துடிக்கும்…
தோத்து போனா குடிக்கும்…
பைத்தியம் புடிக்கும்…

ஆண் : காதல் கசக்குதயா…
வர வர காதல் கசக்குதயா…

BGM

ஆண் : யாராரோ காதலிச்சு…
யாராரோ காதலிச்சு உருப்படல ஒண்ணும் சரிப்படல…
வாழ்கையிலே என்றும் சுகப்படல…
காதல்ல படம் எடுத்தா ஓடுமுங்க…
தியேட்டரிலே ஜனம் கூடுமுங்க…

ஆண் : தேவதாஸ் அவன் பார்வதி…
அம்பிகாபதி அமராவதி…
கதைய கேளு முடிவ பாரு…
கடைசியில் சேராம வாழாம செத்தாங்க…

ஆண் : எனக்கிந்த காதல் கசக்குதயா…
வர வர காதல் கசக்குதயா…
மனம்தான் லவ் லவ்வுன்னு அடிக்கும்…
லவ்வுன்னுதான் துடிக்கும்…
தோத்து போனா குடிக்கும்…
பைத்தியம் புடிக்கும்…

ஆண் : காதல் கசக்குதயா…

BGM

ஆண் : எத்தனை சினிமா எத்தனை டிராமா பாத்தாச்சு…
எத்தனை டூயட் எத்தனை டியூன் கேட்டாச்சு…
எத்தனை பாட்டு இத்தனை கேட்டு என்னாச்சு…
புத்தியும் கெட்டு சக்தியும் கெட்டு நின்னாச்சு…

ஆண் : கிட்டப்பா அந்த காலத்துல காயாத கானகத்தே…
பி யூ சின்னப்பா வந்த காலத்துல காதல் கனி ரசமே…
மன்மத லீலை எம் கே டி காலத்துல…

ஆண் : நடையா இது நடையா…
நம்ம நடிகர் திலகம் பாணியிலே…
ஹலோ ஹலோ சுகமா…
அட ஆமாம் நீங்க நலமா…
எங்கேயும்தான் கேட்டோம்…
அண்ணன் எம்ஜிஆர் பாட்டுக்கள…

ஆண் : இந்த கால இளைஞர் செய்யும் காதலுக்கு…
இளையராஜா எந்தன் பாட்டிருக்கு…
வீட்டுல அதை பாடுங்க…
பொண்டாட்டிய லவ் பண்ணுங்க…
நம்ம தகப்பன் பேச்ச தாயின் பேச்ச மதிக்கணும்…
நீயாக பெண் தேட கூடாது…

ஆண் : எனக்கிந்த காதல் கசக்குதயா…
வர வர காதல் கசக்குதயா…
மனம்தான் லவ் லவ்வுன்னு அடிக்கும்…
லவ்வுன்னுதான் துடிக்கும்…
தோத்து போனா குடிக்கும்…
பைத்தியம் புடிக்கும்…

ஆண் : காதல் மோதல் சாதல்…
காதல் காதல் கசக்குதயா…
கசக்குதயா கசக்குதயா…


Notes : Kadhal Kasakkuthaiya Song Lyrics in Tamil. This Song from Aan Paavam (1985). Song Lyrics penned by Vaali. காதல் கசக்குதயா பாடல் வரிகள்.


குயிலே குயிலே பூங்குயிலே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிமலேசியா வாசுதேவன் & கே.எஸ். சித்ராஇளையராஜாஆண்பாவம்

Kuyile Kuyile Poonguyile Song Lyrics in Tamil


BGM

ஆண் : குயிலே குயிலே பூங்குயிலே…
மயிலே மயிலே வா மயிலே…

ஆண் : குயிலே குயிலே பூங்குயிலே…
மயிலே மயிலே வா மயிலே…
ஒரு பூஞ்சோலையே உனக்காகதான்…
பூத்தாடுதே வா வா…

பெண் : குயிலே குயிலே பூங்குயிலே…
மயிலே மயிலே வா மயிலே…
ஒரு பூஞ்சோலையே உனக்காகதான்…
பூத்தாடுதே வா… ஆஅ…

ஆண் : குயிலே குயிலே பூங்குயிலே…
மயிலே மயிலே வா மயிலே…

BGM

ஆண் : தொட்டாலே நீ சிணுங்கும்…
அழகு ஒன்ன தொட்டாலே சிலிர்க்குதடி…

பெண் : பட்டாலே பத்திக்கொள்ளும்…
காதல் இது ஒட்டாதே தள்ளி நில்லு…

ஆண் : சிட்டுக்கொரு பட்டுத் துணி கட்டித் தரவா…
மொட்டுகென முத்துச் சரம் கொட்டித் தரவா…

பெண் : ஒட்டிக்கிற கட்டிகிற சிட்டுக் குருவி…
கட்டுக்கத விட்டு ஒரு பாட்டா படிக்கும்…

ஆண் : நெஜமா நெஜமா நான் தவிச்சேன்
ஒன்னையே நெனச்சி உயிர் வளர்த்தேன்…

பெண் : இது ஆணுக்கும் பெண்ணுக்கும்…
எந்நாளும் உள்ள கதை…

ஆண் : குயிலே குயிலே பூங்குயிலே…
மயிலே மயிலே வா மயிலே…

பெண் : ஒரு பூஞ்சோலையே உனக்காகதான்…
பூத்தாடுதே வா… ஆஅ…

ஆண் : குயிலே குயிலே பூங்குயிலே…
மயிலே மயிலே வா மயிலே…

BGM

பெண் : ராசாதி ராசனத்தான் கட்டிக்கொள்ள…
ராசாத்தி ஆசைப்பட்டா…

ஆண் : ராசாத்தி என்ன செய்வா…
அவளுக்குன்னு ராசாவா நான் பொறந்தா…

பெண் : அன்னைக்கொரு எழுத்த எனக்கெழுதிபுட்டான்…
இன்னைக்கு அத அழிச்சா அவன் எழுதப்போறான்…

ஆண் : பெண்ணே பழி அவன் மேலே சொல்லாதடி…
ஆண் பாவம் பொல்லாதது கொல்லாதடி…

பெண் : தவறோ சரியோ விதி இதுதான்…
சரி தான் சரிதான் வழக்கெதுக்கு…

ஆண் : இது ஆணுக்கும் பெண்ணுக்கும்…
எந்நாளும் உள்ள கதை…

பெண் : குயிலே குயிலே பூங்குயிலே…
மயிலே மயிலே வா மயிலே…

ஆண் : ஒரு பூஞ்சோலையே உனக்காகதான்…
பூத்தாடுதே வா வா…

பெண் : குயிலே குயிலே பூங்குயிலே…
மயிலே மயிலே வா மயிலே…


Notes : Kuyile Kuyile Poonguyile Song Lyrics in Tamil. This Song from Aan Paavam (1985). Song Lyrics penned by Vaali. குயிலே குயிலே பூங்குயிலே பாடல் வரிகள்.