Category Archives: மௌன கீதங்கள்

Mookuthi Poo Melae Song Lyrics in Tamil

மூக்குத்தி பூ மேலே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிகே.ஜே. யேசுதாஸ் & எஸ். ஜானகிகங்கை அமரன்மௌன கீதங்கள்

Mookuthi Poo Melae Song Lyrics in Tamil


BGM

ஆண் : மூக்குத்தி பூ மேலே காத்து…
உக்காந்து பேசுதம்மா…
பெண் : ஹ்ஹீம்ம்ம்…

ஆண் : அது உக்காந்து பேசையிலே…
தேனு உள்ளூர ஊறுதம்மா…
பெண் : ஆஹாஹா…

ஆண் : அது ஏந்தான் புரியலையே…
அதை நான்தான் அறியலையே…
ஒரு மோகம் ஒரு தாகம்…
இங்கு உன்னாலே இந்நேரம் உண்டானது…

பெண் : மூக்குத்தி பூ மேலே காத்து…
உக்காந்து பேசுதய்யா…
ஆண் : ஹா ஹான்…

பெண் : அது உக்காந்து பேசையிலே…
தேனு உள்ளூர ஊறுதய்யா…
ஆண் : ஓஹோ…

பெண் : அது ஏந்தான் புரியலையே…
அதை நான்தான் அறியலையே…
ஒரு மோகம் ஒரு தாகம்…
இங்கு உன்னாலே இந்நேரம் உண்டானது…

ஆண் : மூக்குத்தி பூ மேலே காத்து…
உக்காந்து பேசுதம்மா…

BGM

பெண் : மேற்க்காலே போகின்ற மேகங்களே…
மண்ணில் வாருங்களேன்…
மழை தாருங்களேன்…
உடல் சூடாச்சி பாருங்களேன்…

பெண் : மேற்க்காலே போகின்ற மேகங்களே…
மண்ணில் வாருங்களேன்…
மழை தாருங்களேன்…
உடல் சூடாச்சி பாருங்களேன்…

ஆண் : மழை மேகம் நானாகவா…
மலர் தேகம் நீராட்டவா…
மடி ஏந்தி தாலாட்டவா…
மனமாற சீராட்டவா…

ஆண் : வெறும் ஏக்கம் ஆகாதம்மா…
விட்டு போகாதம்மா…
நான் கொஞ்சாம தீராதம்மா… ஆமா…

பெண் : மூக்குத்தி பூ மேலே காத்து…
உக்காந்து பேசுதய்யா…

ஆண் : அது உக்காந்து பேசையிலே…
தேனு உள்ளூர ஊறுதம்மா…

BGM

ஆண் : கல்யாணம் கச்சேரி ஊர்கோலமும்…
ஒரு பூமாலையும் திரு பொன்னூஞ்சலும்…
அடி நான் காண நாளாகுமோ…

ஆண் : கல்யாணம் கச்சேரி ஊர்கோலமும்…
ஒரு பூமாலையும் திரு பொன்னூஞ்சலும்…
அடி நான் காண நாளாகுமோ…

பெண் : திருநாளும் தானே வரும்…
உனைத்தேடி தேனே வரும்…
வரும் போது வேலை வரும்…
அது வந்தா மாலை வரும்…

பெண் : அட நானும் உன் போலத்தான்…
அத கொண்டாடத்தான்…
எதிர்பார்த்தேனே அந்நாளைதான்… ஆமா…

ஆண் : மூக்குத்தி பூ மேலே காத்து…
உக்காந்து பேசுதம்மா…

பெண் : அது உக்காந்து பேசையிலே…
தேனு உள்ளூர ஊறுதய்யா…

ஆண் : அது ஏந்தான் புரியலையே…
பெண் : அதை நான்தான் அறியலையே…
ஆண் : ஒரு மோகம்…
பெண் : ஒரு தாகம்…
ஆண் : இங்கு உன்னாலே இந்நேரம் உண்டானது…

ஆண் & பெண் : தான்னான தனனனா தானா…
தானனான தனன னா…
தான்னான தனனனா தானா…
தானனான தனன னா…


Notes : Mookuthi Poo Melae Song Lyrics in Tamil. This Song from Mouna Geethangal (1981). Song Lyrics penned by Vaali. மூக்குத்தி பூ மேலே பாடல் வரிகள்.