பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வாலி | பி. ஜெயச்சந்திரன் & பி. சுசீலா | இளையராஜா | நானே ராஜா நானே மந்திரி |
Mayanginen Solla Thayanginen Song Lyrics in Tamil
—BGM—
பெண் : மயங்கினேன் சொல்லத் தயங்கினேன்…
உன்னை விரும்பினேன் உயிரே…
தினம் தினம் உந்தன் தரிசனம்…
பெறத் தவிக்குதே மனமே…
இங்கு நீயில்லாது வாழும் வாழ்வுதான் ஏனோ…
ஆண் : மயங்கினேன் சொல்லத் தயங்கினேன்…
உன்னை விரும்பினேன் உயிரே…
தினம் தினம் உந்தன் தரிசனம்…
பெறத் தவிக்குதே மனமே…
இங்கு நீயில்லாது வாழும் வாழ்வுதான் ஏனோ…
ஆண் : மயங்கினேன் சொல்லத் தயங்கினேன்…
உன்னை விரும்பினேன் உயிரே…
தினம் தினம் உந்தன் தரிசனம்…
பெறத் தவிக்குதே…
—BGM—
ஆண் : உறக்கமில்லாமல் அன்பே நான்…
ஏங்கும் ஏக்கம் போதும்…
இரக்கமில்லாமல் என்னை நீ…
வாட்டலாமோ நாளும்…
ஆண் : வாடைக்காலமும் நீ வந்தால்…
வசந்தமாகலாம்…
கொதித்திருக்கும் கோடைக்காலமும்…
நீ வந்தால் குளிர்ச்சி காணலாம்…
பெண் : எந்நாளும் தனிமையே எனது நிலைமையா…
தந்த கவிதையா கதையா…
ஆண் : இரு கண்ணும் என் நெஞ்சும்…
பெண் : இரு கண்ணும் நெஞ்சும் நீரிலாடுமோ…
ஆண் : மயங்கினேன் சொல்லத் தயங்கினேன்…
உன்னை விரும்பினேன் உயிரே…
பெண் : தினம் தினம் உந்தன் தரிசனம்…
பெறத் தவிக்குதே மனமே…
ஆண் : இங்கு நீயில்லாது வாழும் வாழ்வுதான் ஏனோ…
ஆண் : மயங்கினேன் சொல்லத் தயங்கினேன்…
உன்னை விரும்பினேன் உயிரே…
தினம் தினம் உந்தன் தரிசனம்…
பெறத் தவிக்குதே…
—BGM—
ஆண் : ஒரு பொழுதேனும் உன்னோடு…
சேர்ந்து வாழணும்…
உயிர் பிரிந்தாலும் அன்பே உன்…
மார்பில் சாயணும்…
பெண் : மாலை மங்கலம்…
கொண்டாடும் வேளை வாய்க்குமோ…
ஆண் : மணவறையில் நீயும் நானும்தான்…
பூச்சூடும் நாளும் தோன்றுமோ…
பெண் : ஒன்றாகும் பொழுதுதான் இனிய பொழுதுதான்…
உந்தன் உறவுதான் உறவு…
ஆண் : அந்த நாளை எண்ணி நானும்…
பெண் : அந்த நாளை எண்ணி நானும் வாடினேனே…
பெண் : மயங்கினேன் சொல்லத் தயங்கினேன்…
உன்னை விரும்பினேன் உயிரே…
ஆண் : தினம் தினம் உந்தன் தரிசனம்…
பெறத் தவிக்குதே மனமே…
பெண் : இங்கு நீயில்லாது வாழும் வாழ்வுதான் ஏனோ…
ஆண் : மயங்கினேன் சொல்லத் தயங்கினேன்…
உன்னை விரும்பினேன் உயிரே…
தினம் தினம் உந்தன் தரிசனம்…
பெறத் தவிக்குதே…
Notes : Mayanginen Solla Thayanginen Song Lyrics in Tamil. This Song from Naane Raja Naane Mandhiri (1985). Song Lyrics penned by Vaali. மயங்கினேன் சொல்ல தயங்கினேன் பாடல் வரிகள்.