Category Archives: சொல்ல துடிக்குது மனசு

சொல்ல துடிக்குது மனசு

எனது விழி வழி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிபி. ஜெயச்சந்திரன் & எஸ். ஜானகிஇளையராஜாசொல்ல துடிக்குது மனசு

Enathu Vizhi Song Lyrics in Tamil


BGM

பெண் : எனது விழி வழி மேலே… ஹோ…
கனவு பல விழி மேலே… ஹோ…
எனது விழி வழி மேலே… ஹோ…
கனவு பல விழி மேலே… ஹோ…

பெண் : வருவாயா நீ வருவாயா…
வருவாயா வருவாயா என நானே எதிர் பார்த்தேன்…

பெண் : அதை சொல்ல துடிக்குது மனசு…
சுகம் அள்ள தவிக்கிற வயசு…
அதை சொல்ல துடிக்குது மனசு…
சுகம் அள்ள தவிக்கிற வயசு…

ஆண் : எனது விழி வழி மேலே… ஹோ…
கனவு பல விழி மேலே… ஹோ…
எனது விழி வழி மேலே… ஹோ…
கனவு பல விழி மேலே… ஹோ…

BGM

ஆண் : பள்ளிக்கூட பாடம் ஏதும் எனக்கில்லை ஞாபகம்…
கண்ணில் நூறு பாடம் கேட்டும் மறக்காத ஞாபகம்…

பெண் : தடுமாற்றம் எதற்கு படித்தாலே உனக்கு…
ஆண் : ல ல லா ல ல ல லா… ல ல லா ல ல ல லா…

பெண் : காதல் சிறகை காற்றில் விரித்து…
ஆண் : நினைத்தாலே இனிக்கும் கனவின்று பலிக்கும்…

பெண் : உறங்காமல் உனைத்தானே…
நினைத்தே தனியா தவித்தேனே…

ஆண் : எனது விழி வழி மேலே… ஹோ…
கனவு பல விழி மேலே… ஹோ…

பெண் : எனது விழி வழி மேலே… ஹோ…
கனவு பல விழி மேலே… ஹோ…

BGM

பெண் : பிள்ளை போல தோளில் போட்டு…
தாலாட்டு பாடுவேன்…
முல்லை பூவில் மேடை போட்டு…
உன்னோடு ஆடுவேன்…

ஆண் : இமைக்காமல் ரசித்தேன்…
ருசி பாத்து பசித்தேன்…
பெண் : ல ல லா ல ல ல லா… ல ல லா ல ல ல லா…

ஆண் : ஏது உறக்கம்… ஓஹோ…
பெண் : வேண்டாம் கிறக்கம்… ஓஹோ…

ஆண் : வட்டி போட்டு மொத்தமா…
கட்ட வேண்டும் முத்தமா…

பெண் : உனைத்தானே உனைத்தானே…
தனியா தவித்தே துடிக்காதே… ஹோய்…

ஆண் : எனது விழி வழி மேலே… ஹோ…
கனவு பல விழி மேலே… ஹோ…

பெண் : எனது விழி வழி மேலே… ஹோ…
கனவு பல விழி மேலே… ஹோ…

பெண் : வருவாயா வருவாயா…
என தானே எதிர்பார்த்தேன்…

குழு : அதை சொல்ல துடிக்குது மனசு…
சுகம் அள்ள தவிக்கிற வயசு…
அதை சொல்ல துடிக்குது மனசு…
சுகம் அள்ள தவிக்கிற வயசு…

குழு : லலலா லலலா லா லலா… ஹோ…
லலலா லலலா லா லலா… ஹோ…
லலலா லலலா லா லலா… ஹோ…
லலலா லலலா லா லலா…


Notes : Enathu Vizhi Song Lyrics in Tamil. This Song from Solla Thudikuthu Manasu (1988). Song Lyrics penned by Vaali. எனது விழி வழி பாடல் வரிகள்.


poove-sempoove-song-lyrics

பூவே செம்பூவே (ஆண்)

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிகே.ஜே. யேசுதாஸ்இளையராஜாசொல்ல துடிக்குது மனசு

Poove Sempoove (Male) Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : பூவே செம்பூவே உன் வாசம் வரும்…
வாசல் என் வாசல் உன் பூங்காவனம்…
வாய் பேசிடும் புல்லாங்குழல்…
நீதான் ஒரு பூவின் மடல்…

ஆண் : பூவே செம்பூவே உன் வாசம் வரும்…
பூவே செம்பூவே…

—BGM—

ஆண் : நிழல் போல நானும்… ஆஆஆ… ஆஹா…
நிழல் போல நானும்…
நடை போட நீயும்…
தொடர்கின்ற சொந்தம்…
நெடுங்கால பந்தம்…

ஆண் : கடல் வானம் கூட…
நிறம் மாறக் கூடும்…
மனம் கொண்ட பாசம் தடம் மாறிடாது…

ஆண் : நான் வாழும் வாழ்வே…
உனக்காக தானே…
நாள் தோறும் நெஞ்சில்…
நான் ஏந்தும் தேனே…
எந்நாளும் சங்கீதம் சந்தோஷமே…
வாய் பேசிடும் புல்லாங்குழல்…
நீதான் ஒரு பூவின் மடல்…

ஆண் : பூவே செம்பூவே உன் வாசம் வரும்…
வாசல் என் வாசல் உன் பூங்காவனம்…
வாய் பேசிடும் புல்லாங்குழல்…
நீதான் ஒரு பூவின் மடல்…

ஆண் : பூவே செம்பூவே உன் வாசம் வரும்…
பூவே செம்பூவே…

—BGM—

ஆண் : உனைப்போல நானும்…
ஒரு பிள்ளை தானே…
பலர் வந்து கொஞ்சும் கிளிப் பிள்ளை தானே…

ஆண் : உனைப்போல நானும்…
மலர் சூடும் பெண்மை…
விதி என்னும் நூலில் விளையாடும் பொம்மை…

ஆண் : நான் செய்த பாவம் என்னோடு போகும்…
நீ வாழ்ந்து நான்தான் பார்த்தாலே போதும்…
இந்நாளும் எந்நாளும் உல்லாசமே…
வாய் பேசிடும் புல்லாங்குழல்…
நீதான் ஒரு பூவின் மடல்…

ஆண் : பூவே செம்பூவே உன் வாசம் வரும்…
வாசல் என் வாசல் உன் பூங்காவனம்…
வாய் பேசிடும் புல்லாங்குழல்…
நீதான் ஒரு பூவின் மடல்…

ஆண் : பூவே செம்பூவே உன் வாசம் வரும்…
பூவே செம்பூவே…

—BGM—


Notes : Poove Sempoove (Male) Song Lyrics in Tamil. This Song from Solla Thudikuthu Manasu (1988). Song Lyrics penned by Vaali. பூவே செம்பூவே (ஆண்) பாடல் வரிகள்.