பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
மோகன் ராஜா | வந்தனா ஸ்ரீனிவாசன் & ஜெகதீஷ் | என்.ஆர். ரகுநந்தன் | கொடிவீரன் |
Ayyo Adi Aathe Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : அய்யோ அடி ஆத்தே…
என் கண்ணு காது மூக்கே…
கொண்டு போற நீதான்…
என் மனச… என் மனச…
பெண் : எட்டி நின்னு பாத்தேன்…
நீ ஏங்க வச்ச நேத்தே…
கொத்தி போற நீதான்…
என் வயச… என் வயச…
ஆண் : எட்டாம் நம்பர் போலதான்…
சுத்தி வந்து வளைச்சாலே…
பெண் : கட்டம் கட்டி என் நெனப்ப…
பத்த வச்சி போரானே…
ஆண் : அவ கெண்ட காலு சுண்ட வைக்கும்…
என் உசுரதான்…
அவ சண்டை போடும் கண்ணு ரெண்டும்…
என் உலகம்தான்…
ஆண் : அய்யோ அடி ஆத்தே…
என் கண்ணு காது மூக்கே…
கொண்டு போற நீதான்…
என் மனச… என் மனச…
—BGM—
ஆண் : அவ சிகப்பு செம்பருத்தி போல…
அவ சிரிப்பு செங்கரும்பு போல…
அவ பேச்சு செந்தமிழப் போல…
இனிக்கும்… இனிக்கும்…
பெண் : அவன் மொறப்பு சண்டியர போல…
அவன் வனப்பு மம்முதன போல…
அவன் நெனப்பு நெஞ்சுக்குள்ள தினமும்…
இழுக்கும்… இழுக்கும்…
ஆண் : குண்டூசி பார்வைக்காரி…
குண்டு வைக்கும் பேச்சுக்காரி…
குத்துகல்லா நிக்க வைக்கும்…
கும்மிருட்டு மச்சக்காரி…
ஆண் : அவ கெண்ட காலு சுண்ட வைக்கும்…
என் உசுரதான்…
அவ சண்டை போடும் கண்ணு ரெண்டும்…
என் உலகம்தான்…
ஆண் : அய்யோ அடி ஆத்தே…
என் கண்ணு காது மூக்கே…
கொண்டு போற நீதான்…
என் மனச என் மனச…
—BGM—
பெண் : அவன் கூட ஜென்மத்துக்கும் வாழுவேன்…
அவன் இருந்தா எப்படி நான் சாகுவேன்…
அவன் சிரிக்க என்ன வேணா பண்ணுவேன்…
நான்தான்… நான்தான்…
ஆண் : அவ கண்ணில் தூசிஒன்னு விழுந்தா…
அதனால அவ கண்ணு கசிஞ்சா…
காத்த நானும் கட்டி வச்சு மெதிப்பேன்…
நெசம் தான்… நெசம் தான்…
பெண் : எனகின்னு பொறந்தான் பாரு…
எனக்குள்ள புகுந்தான் பாரு…
நெனபெல்லாம் கலந்தான் பாரு…
அவன்தான் என் உசுருக்கு வேரு…
—BGM—
ஆண் : அவ கெண்ட காலு சுண்ட வைக்கும்
என் உசுரதான்…
அவ சண்டை போடும் கண்ணு ரெண்டும்…
என் உலகம்தான்…
ஆண் : அய்யோ அடி ஆத்தே…
என் கண்ணு காது மூக்கே…
கொண்டு போற நீதான்…
என் மனச… என் மனச…
பெண் : எட்டி நின்னு பாத்தேன்…
நீ ஏங்க வச்ச நேத்தே…
கொத்தி போற நீதான்…
என் வயச… என் வயச…
—BGM—
Notes : Ayyo Adi Aathe Song Lyrics in Tamil. This Song from Kodiveeran (2017). Song Lyrics penned by Mohanraja. அய்யோ அடி ஆத்தே பாடல் வரிகள்.