பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
கண்ணதாசன் | கே.பி. சுந்தரம்பாள் | கே.வி.மகாதேவன் | கந்தன் கருணை |
Ariyathu Ketkin Song Lyrics in Tamil
ஆண் : ஔவையே உலகில் அரியது என்ன…
பெண் : அரியது கேட்கின் வரிவடிவேலோய்…
அரிது அரிது மானிடராதல் அரிது…
மானிடராயினும் கூன் குருடு…
செவிடு பேடு நீங்கிப் பிறத்தல் அரிது…
பெண் : கூன் குருடு செவிடு பேடு…
நீங்கிப் பிறந்த காலையும்…
ஞானமும் கல்வியும் நயத்தலரிது…
பெண் : ஞானமும் கல்வியும் நயந்த காலையும்…
தானமும் தவமும்தான் செய்தல் அரிது…
தானமும் தவமும்தான் செய்வராயின்…
வானவர் நாடு வழி பிறந்திடுமே…
ஆண் : அரியது கேட்டமைக்கு அழகான தமிழில்…
விளக்கம் தந்த மூதாட்டியே கொடியது என்ன…
பெண் : கொடியது கேட்கின் வரிவடிவேலோய்…
கொடிது கொடிது வறுமை கொடிது…
அதனினும் கொடிது இளமையில் வறுமை…
பெண் : அதனினும் கொடிது ஆற்றொணாக் கொடு நோய்…
அதனினும் கொடிது அன்பில்லாப் பெண்டிர்…
அதனினும் கொடிது அவர் கையால் இன்புற உண்பதுதானே…
ஆண் : மிக்க மகிழ்ச்சி…
சொல்லால் தமிழால் வெல்லாத உலகையெல்லாம் வெல்லும்…
திறமை படைத்த ஔவையே பெரியது என்ன…
பெண் : பெரியது கேட்கின் நெறி தமிழ் வேலோய்…
பெரிது பெரிது புவனம் பெரிது…
புவனமும் நான் முகன் படைப்பு…
நான்முகன் கரியமால் முந்தியில் வந்தோன்…
பெண் : கரியமாலோ அலைகடல் துயின்றோன்…
அலைகடலோ குருமுனி யங்கையில் அடக்கம்…
குருமுனியோ கலசத்துப் பிறந்தோன்…
கலசமோ புவியிற் சிறுமண்…
புவியோ அரவினிக் ஒரு தலைப் பாரம்…
அரமோ உமையவள் சிறு விரல் மோதிரம்…
பெண் : உமையோ இறைவர் பாகத் தொடுக்கம்…
இறைவனோ தொண்டர் உள்ளத்தொடுக்கம்…
தொண்டர் தம் பெருமையை சொல்லவும் பெரிதே…
ஆண் : ஔவையே… வானவரும் உனது வாக்கிற்கு…
அடிமையாகி விடுவர் என்றால் அதில் வியப்பில்லை…
இனியது என்ன…
பெண் : இனியது கேட்கின் தனி நெடுவேலோய்…
இனிது இனிது ஏகாந்த்தம் இனிது…
அதனினும் இனிது ஆதியைத் தொழுதல்…
பெண் : அதனினும் இனிது அறிவினர் சேர்தல்…
அதனினும் இனிது அறிவுள்ளோரை…
கனவிலும் நனவிலும் காண்பதுதானே…
ஆண் : அரியது கொடியது பெரியது இனியது…
அனைத்திற்கும் முறையோடு விடை பகன்ற ஔவையே…
புதியது என்ன…
பெண் : என்றும் புதியது…
பாடல் என்றும் புதியது…
பொருள் நிறைந்த பாடல் என்றும் புதியது…
பெண் : முருகா உன்னைப் பாடும் பொருள் நிறைந்த…
பாடல் என்றும் புதியது…
முருகா உன்னைப் பாடும் பொருள் நிறைந்த…
பாடல் என்றும் புதியது…
பெண் : அருள் நிறைந்த புலவர் நெஞ்சில்…
அமுதம் என்னும் தமிழ் கொடுத்த…
பொருள் நிறைந்த பாடல் என்றும் புதியது…
பெண் : அருள் நிறைந்த புலவர் நெஞ்சில்…
அமுதம் என்னும் தமிழ் கொடுத்த…
பொருள் நிறைந்த பாடல் என்றும் புதியது…
பெண் : முருகன் என்ற பெயரில் வந்த…
அழகே என்றும் புதியது…
முருகன் என்ற பெயரில் வந்த…
அழகே என்றும் புதியது…
பெண் : முறுவல் காட்டும் குமரன் கொண்ட…
இளமை என்றும் புதியது…
முறுவல் காட்டும் குமரன் கொண்ட…
இளமை என்றும் புதியது…
பெண் : உன்னைப் பெற்ற அன்னையர்க்கு…
உனது லீலை புதியது…
உன்னைப் பெற்ற அன்னையர்க்கு…
உனது லீலை புதியது…
பெண் : உனது தந்தை இறைவனுக்கும்…
வேலும் மயிலும்…
உனது தந்தை இறைவனுக்கும்…
வேலும் மயிலும் புதியது…
பெண் : முருகா உன்னைப் பாடும் பொருள் நிறைந்த…
பாடல் என்றும் புதியது…
—BGM—
பெண் : திங்களுக்கும் ஞாயிறுக்கும் கந்தன் மேனி புதியது…
திங்களுக்கும் ஞாயிறுக்கும் கந்தன் மேனி புதியது…
சேர்ந்தவர்க்கு வழங்கும் கந்தன் கருணை புதியது…
சேர்ந்தவர்க்கு வழங்கும் கந்தன் கருணை புதியது…
பெண் : அறிவில் அரியது அருளில் பெரியது…
அறிவில் அரியது அருளில் பெரியது…
பெண் : அள்ளி அள்ளி உண்ண உண்ண…
உனது தமிழ் இனியது…
அள்ளி அள்ளி உண்ண உண்ண…
உனது தமிழ் இனியது…
பெண் : முதலில் முடிவது முடிவில் முதலது…
முதலில் முடிவது முடிவில் முதலது…
மூன்று காலம் உணர்ந்த பேர்க்கு ஆறுமுகம் புதியது…
—BGM—
Notes : Ariyathu Ketkin Song Lyrics in Tamil. This Song from Kandhan Karunai (1967). Song Lyrics penned by Kannadasan. அரியது கேட்கின் பாடல் வரிகள்.