பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
விவேகா | ஆலப் ராஜு & அனிதா | எப்.எஸ்.ஃபைசல் | சில்லுன்னு ஒரு சந்திப்பு |
Adi Aathi Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : ஏழுகடல் தாண்டி ஏழுமலை தாண்டி…
ஓடி வர சொல்லும் உன் பார்வை…
—BGM—
ஆண் : துரு துரு துருவென பாத்தாலே…
தூண்டில மனசுக்குள் போட்டாலே…
இதயத்தில் சுவர்களில் அழகாக…
அவளது ஓவியம் வரைந்தாலே…
—BGM—
ஆண் : ஏமாத்தி ஏமாத்தி…
இவளால விழி சாத்தி…
பாத்தாலே ராசாத்தி…
அடியாத்தி அடியாத்தி…
பெண் : ஒரு பார்வை நெய்யூத்தி…
உயிர் மேல விளக்கேத்தி…
போரானே எனமாத்தி…
அடியாத்தி அடியாத்தி…
ஆண் : பாதம் நடந்து வந்த பாதை முழுவதிலும்…
வாசம் அடிப்பதென்ன வானவில்லே…
பெண் : ஆசைகள் தான் கூத்தாடுது…
நெஞ்சமெல்லாம் பூத்தாடுது…
ஆண் : ஏமாத்தி ஏமாத்தி…
இவளால விழி சாத்தி…
பாத்தாலே ராசாத்தி…
அடியாத்தி அடியாத்தி…
—BGM—
ஆண் : கதவிடுக்குள விரலாக அவள் விழியால…
உயிர் நசுங்கியதே…
பெண் : பகல் இரவென தெரியாமல்…
இது புரியாமல் தினம் நகர்கிறதே…
ஆண் : நொடி முள்ளைப் போல் இமை துடிக்கிறதே…
நொடிக்கொரு முறை உன்னை கேட்கிறதே…
பெண் : படித்துறை பாசியில் நடப்பது போல்…
கால்களும் காற்றினில் வழுக்கிடுதே…
ஆண் : ஓ… ஏழேழு ஜென்மங்கள் பேராசை வேண்டாமே…
உயிர் தேடும் பெண்ணின் மடியில்…
ஒரு நொடி வாழ்ந்தால் அது போதும்…
பெண் : சொல்லாமலே நெஞ்சாடுதே…
உன் மோகனம் கண் தேடுதே…
ஆண் : ஏமாத்தி ஏமாத்தி…
இவளால விழி சாத்தி…
பாத்தாலே ராசாத்தி…
அடியாத்தி அடியாத்தி…
—BGM—
ஆண் : ஓ… இவ மனசுல எனக்காக உள்ள இடம் பார்க்க…
மனம் அலைபாயும்…
பெண் : தினம் பலமுறை குளிச்சாலும்…
உடல் நெருப்பாக இங்கு அனல் காயும்…
ஆண் : ஒரு விதை விழுந்து வனமாகும்…
அதிசயம் நேரில் பார்த்தேனே…
பெண் : ஒரு துளி விழுந்து கடல் ஆகும்…
உற்சவம் நானும் கண்டேனே…
ஆண் : ஏ… வரவேற்பு வளையம் போல்…
புருவங்கள் அழைக்கிறதே…
வரவேற்று எந்தன் நெஞ்சை…
வதைகள் தினமும் செய்கிறதே…
பெண் : கண்ணால் ஒரு காய்ச்சல் வரும்…
முச்சந்தியில் மோட்சம் வரும்…
ஆண் : ஏமாத்தி ஏமாத்தி…
இவளால விழி சாத்தி…
பாத்தாலே ராசாத்தி…
அடியாத்தி அடியாத்தி…
பெண் : ஒரு பார்வை நெய்யூத்தி…
உயிர் மேல விளக்கேத்தி…
போரானே எனமாத்தி…
அடியாத்தி அடியாத்தி…
—BGM—
Notes : Adi Aathi Song Lyrics in Tamil. This Song from Sillunu Oru Sandhippu (2013). Song Lyrics penned by Viveka. அடியாத்தி பாடல் வரிகள்.