பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
பழனி பாரதி | கே.எஸ். சித்ரா | ஜி.வி.பிரகாஷ் குமார் | வெள்ளித்திரை |
Vizhiyilae Song Lyrics in Tamil
—BGM—
பெண் : விழியிலே என் விழியிலே கனவுகள் கலைந்ததே…
உயிரிலே நினைவுகள் தழும்புதே…
கண்களில் கண்ணீர் வந்து உன் பெயரையே எழுதுதே…
முத்தமிட்ட உதடுகள் உளறுதே…
பெண் : நான் என்னை காணாமல்…
தினம் உன்னை தேடினேன்…
என் கண்ணீர் துளியில் நமக்காக…
ஒரு மாலை சூடினேன்…
பெண் : விழியிலே என் விழியிலே கனவுகள் கலைந்ததே…
உயிரிலே நினைவுகள் தழும்புதே…
—BGM—
பெண் : இமைகளிலே கனவுகளை விதைத்தேனே…
ரகசியமாய் நீரூற்றி வளர்த்தேனே…
இன்று வெறும் காற்றிலே நான் விரல் நீட்டினேன்…
உன் கையோடு கை சேரத்தான்…
பெண் : உன் உறவும் இல்லை என் நிழலும் இல்லை…
இனி என் காதல் தொலை தூரம்தான்…
பெண் : நான் சாம்பல் ஆனாலும் என் காதல் வாழுமே…
அந்த சாம்பல் மீதும் உனக்காக சில பூக்கள் பூக்குமே…
பெண் : விழியிலே என் விழியிலே கனவுகள் கலைந்ததே…
உயிரிலே நினைவுகள் தழும்புதே…
—BGM—
பெண் : உள்ளிருக்கும் இதயத்துக்கு எனை புரியும்…
யாருக்குத்தான் நம் காதல் விடை தெரியும்…
பெண் : காதல் சிறகானது இன்று சருகானது…
என் உள் நெஞ்சம் உடைகின்றது…
பெண் : உன் பாதை எது என் பயணம் அது…
பனி திரை ஒன்று மறைக்கின்றது…
பெண் : ஏன் இந்த சாபங்கள் நான் பாவம் இல்லையா…
விதி கண்ணாமூச்சி விளையாட நான் காதல் பொம்மையா…
பெண் : விழியிலே என் விழியிலே கனவுகள் கலைந்ததே…
உயிரிலே நினைவுகள் தழும்புதே…
Notes : Vizhiyilae Song Lyrics in Tamil. This Song from Velli Thirai (2008). Song Lyrics penned by Pazhani Bharathi. விழியிலே என் விழியிலே பாடல் வரிகள்.