பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வாலி | எஸ். பி. பாலசுப்ரமணியம் & கே.எஸ். சித்ரா | தேவா | வான்மதி |
Vaigarayil Vanthathenna Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : வைகறையில் வந்ததென்ன வான்மதி…
கைவளையல் ஓசையிலும் தேன்மொழி…
வைகறையில் வந்ததென்ன வான்மதி…
கைவளையல் ஓசையிலும் தேன்மொழி…
பெண் : நித்தம் சாயங்கால நேரம்…
நெஞ்சில் சாய்ந்து பேச வேண்டும்…
நெஞ்சில் சாய்ந்து பேசும் நேரம்…
மழை சாரல் வீச வேண்டும்…
ஆண் : இதுபோல் தொடரும் இந்த காதல் கதை…
காலம் உள்ள காலம் வரை…
பெண் : வைகறையில் வந்ததென்ன வான்மதி…
கைவளையல் ஓசையிலும் தேன்மொழி…
—BGM—
ஆண் : இதுதான்…
குழு : பருவம் தினம் பயிலும்…
இதழ் உரசும் இந்த சரசம்…
பெண் : இதமாய்…
குழு : நழுவும் இந்த தருணம்…
வந்த விரகம் மெல்ல விலகும்…
ஆண் : முத்தங்கள் ஒவ்வொன்றும் முத்துப்போல் பதிக்க…
பெண் : கன்னங்கள் ஒவ்வொன்றும் தென்னங்கள் வடிக்க…
ஆண் : ஹோய்… பக்கம் வரும் போது…
அள்ளிக் கொடு பட்டுப் படித்தேனே…
பெண் : தொட்டுத் தழுவாது…
அந்தி பகல் பித்து பிடித்தேனே…
ஆண் : உன்னை நான் தொட…
என்னை நீ தொட எதிர்பார்த்திருந்தாயோ…
பெண் : வைகறையில் வந்ததென்ன வான்மதி…
கைவளையல் ஓசையிலும் தேன்மொழி…
—BGM—
ஆண் : பல நாள்…
குழு : இரவில் பனி நிலவில்…
இவள் இளைத்தாள் உந்தன் நினைவில்…
பெண் : அடடா…
குழு : இது போல் ஒரு சபலம்…
ஒரு சலனம் சில சமயம்…
ஆண் : ஒட்டிக்கொள் கட்டிக்கொள் உன்னில் நான் கலக்க…
பெண் : அம்மம்மா அச்சம்தான் என்னென்று விளக்க…
ஆண் : பள்ளியறைப் பாட்டின்…
பல்லவியை சொல்லித் தரலாமா…
பெண் : ஆ… சொல்லித்தரும் போது…
சின்ன இடை துன்ப படலாமா…
ஆண் : ஹ்ம்ம்… மிச்சம் மீதியும் மத்த சேதியும்…
முதல் ராத்திரிதானா…
பெண் : வைகறையில் வந்ததென்ன வான்மதி…
கைவளையல் ஓசையிலும் தேன்மொழி…
ஆண் : வைகறையில் வந்ததென்ன வான்மதி…
கைவளையல் ஓசையிலும் தேன்மொழி…
பெண் : நித்தம் சாயங்கால நேரம்…
நெஞ்சில் சாய்ந்து பேச வேண்டும்…
நெஞ்சில் சாய்ந்து பேசும் நேரம்…
மழை சாரல் வீச வேண்டும்…
ஆண் : இதுபோல் தொடரும் இந்த காதல் கதை…
காலம் உள்ள காலம் வரை…
பெண் : வைகறையில் வந்ததென்ன வான்மதி…
ஆண் : கைவளையல் ஓசையிலும் தேன்மொழி…
Notes : Vaigarayil Vanthathenna Song Lyrics in Tamil. This Song from Vaanmathi (1996). Song Lyrics penned by Vaali. வைகறையில் வந்ததென்ன பாடல் வரிகள்.