தூதுவளை இலை அரைச்சி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கஸ்தூரி ராஜாஎஸ். ஜானகி & மனோதேவாதாய் மனசு

Thoothuvalai Ilai Arachi Song Lyrics in Tamil


பெண் : தூதுவளை இலை அரைச்சி…
தொண்டையிலதான் நனைச்சி…
மாமன்கிட்ட பேச போறேன்…
மணிக்கணக்கா…

BGM

பெண் : தூதுவளை இலை அரைச்சி…
தொண்டையிலதான் நனைச்சி…
மாமன்கிட்ட பேச போறேன்…
மணிக்கணக்கா…

பெண் : தூண்டாமணி விளக்கை…
தூண்டிவிட்டு எரியவச்சி…
உன் முகத்தை பார்க்க போறேன்…
நாள் கணக்கா…

பெண் : அந்த இந்திரன் சந்திரனும்…
மாமன் வந்தா எந்திரிச்சே நிக்கணும்…
அந்த ரம்பையும் ஊர்வசியும்…
மாமனுக்கு தொண்டுகள் செஞ்சிடணும்…
நான் காத்தாகி ஊத்தாகி…
மாமன தழுவி கட்டிக்கணும்…

ஆண் : தூதுவளை இலை அரைச்சி…
தொண்டையிலதான் நனைச்சி…
நானும் கூட பேச போறேன்…
மணிக்கணக்கா…

ஆண் : தூண்டாமணி விளக்கை…
தூண்டிவிட்டு எரியவச்சி…
உன் முகத்தை பார்க்க போறேன்…
நாள் கணக்கா…

BGM

ஆண் : நாள் தோறும் காத்திருந்தேன்…
நானே தவமிருந்தேன்…
உனக்காகதான்…
கண்ணே உனக்காகதான்…

பெண்: நான் கூட மனசுக்குள்ள…
ஆசை வளத்துகிட்டேன்…
உன்னை பார்க்கத்தான்…
மாமா உன்னை பார்க்கத்தான்…

ஆண் : அட முத்துன கிறுக்கு மொத்தமும்…
தெளிய முறையிடலமோ…

பெண் : சுத்துற கண்ணுல சிக்குன…
என்னை சிறையிடலாமோ…

ஆண் : எத்தனை நாள்…
இப்படி நான் ஏங்கிறது…

பெண் : பொட்டு வைச்சு…
பூ முடிக்கும் நாளிருக்கு…

பெண் : தூதுவளை இலை அரைச்சி…
தொண்டையில தான் நனைச்சி…
மாமன் கிட்ட பேச போறேன்…
மணிக்கணக்கா…

ஆண் : தூண்டாமணி விளக்கை…
தூண்டிவிட்டு எரியவச்சி…
உன் முகத்தை பார்க்க போறேன்…
நாள் கணக்கா…

BGM

ஆண் : ஊர் தூங்கும் வேலையிலும்…
நான் தூங்க போனதில்லை…
உன்னாலதான்…
கண்ணே உன்னாலதான்…

பெண் : யார் பேச்சு கேட்டாலும்…
என் காதில் கேட்பதெல்லாம்…
உன் பேருதான்…
நித்தம் உன் பேருதான்…

ஆண் : இத்தனை நனப்பு என் மேலே…
இருந்தும் எட்டி போகலாமோ…

பெண் : கட்டுப்பாடு இருந்தும் கட்டிக்கும்…
முன்னே முட்டிகொள்ளலாமோ…

ஆண் : முத்தமிட்டால் மோசம் என்ன உண்டாகும்…

பெண் : சத்தமிட்டால் உன் நிலமை என்னாகும்…

பெண் : தூதுவளை இலை அரைச்சி…
தொண்டையிலதான் நனைச்சி…
மாமன் கிட்ட பேச போறேன்…
மணிக்கணக்கா…

ஆண் : தூண்டாமணி விளக்கை…
தூண்டிவிட்டு எரியவச்சி…
உன் முகத்தை பார்க்க போறேன்…
நாள் கணக்கா…

பெண் : அந்த இந்திரன் சந்திரனும்…
மாமன் வந்தா எந்திரிச்சே நிக்கணும்…

ஆண் : அந்த ரம்பையும் ஊர்வசியும்
மயிலுக்கு தொண்டுகள் செஞ்சிடணும்…

பெண் : நான் காத்தாகி ஊத்தாகி…
மாமனே தழுவி கட்டிக்கணும்…

ஆண் : தூதுவளை இலை அரைச்சி…
தொண்டையிலதான் நனைச்சி…
நானும் கூட பேச போறேன் மணிக்கணக்கா…

பெண் : தூண்டாமணி விளக்கை…
தூண்டிவிட்டு எரியவச்சி…
உன் முகத்தை பார்க்க போறேன்…
நாள் கணக்கா…


Notes : Thoothuvalai Ilai Arachi Song Lyrics in Tamil. This Song from Thai Manasu (1994). Song Lyrics penned by Kasthuri Raja. தூதுவளை இலை அரைச்சி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading