பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வைகைச் செல்வன் | உன்னி மேனன் & நித்யஸ்ரீ | டி. இமான் | சேனா |
Theerathathu Kadhal Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : தீராதது காதல் தீராதது…
தீர்வாகுதே உந்தன் பார்வைகளே…
பெண் : சுகமானது காதல் இதமானது…
தாலாட்டுதே உந்தன் சுமைகளுமே…
ஆண் : உந்தன் அழகே என்னை தினம் தொழு வைத்தது…
உந்தன் நினைவே என்னை தினம் சிறை வைத்தது…
உந்தன் நெருக்கம் கொண்ட ஆடை மீது கோபம்…
பெண் : தீராதது காதல் தீராதது…
தீர்வாகுதே உந்தன் பார்வைகளே…
சுகமானது காதல் இதமானது…
தாலாட்டுதே உந்தன் சுமைகளுமே…
—BGM—
பெண் : தலையில் சீப்பை சொருகிக் கொண்டு தேடுவதை போல…
உன்னை அருகில் வைத்துக் கொண்டே தேடுகிறேன்…
எங்கே போனாய் இத்தனை நாளாய் கனவில் நீயும் இல்லை…
தினமும் தேடி இமைகள் மூடிக் கரைந்தேனே…
ஆண் : காதல் கதவை நீயும் கண்ணே மூடிக் சென்றால்…
காற்றாய் நானும் கொஞ்சம் ஜன்னல் வழியாய் வருவேன்…
அந்த மூடியக் கதவில் காற்றும் வருதே உணர்ச்சிகள் இவைதானே…
பெண் : தீராதது காதல் தீராதது…
தீர்வாகுதே உந்தன் பார்வைகளே…
—BGM—
பெண் : என்னைக் கடந்து செல்லும் போது எனக்குள் ஏதோ செய்தாய்…
என்னைக் கடத்தி ஏன்தான் நீயும் சென்றாயோ…
என்னைப் பற்றி நிதமும் ஏதோ நினைக்கத்தானே செய்தாய்…
பொய்யும் இல்லை விக்கல் வந்து சொல்கிறதே…
ஆண் : உன்னைத் தேடிச் செல்ல இரவே பகலானது…
கண்கள் ஏதோ சொல்ல கண்ணீர் தேனானது…
எந்தன் மனசுக்குள்ளே மறைந்திருந்தாயே அலைந்தது நான்தானே…
ஆண் : தீராதது காதல் தீராதது…
தீர்வாகுதே உந்தன் பார்வைகளே…
பெண் : சுகமானது காதல் இதமானது…
தாலாட்டுதே உந்தன் சுமைகளுமே…
ஆண் : உந்தன் அழகே என்னை தினம் தொழு வைத்தது…
உந்தன் நினைவே என்னை தினம் சிறை வைத்தது…
உந்தன் நெருக்கம் கொண்ட ஆடை மீது கோபம்…
ஆண் : தீராதது காதல் தீராதது…
தீர்வாகுதே உந்தன் பார்வைகளே…
—BGM—
Notes : Theerathathu Kadhal Song Lyrics in Tamil. This Song from Sena (2003). Song Lyrics penned by Vaigai Selvan. தீராதது காதல் பாடல் வரிகள்.