பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வாலி | கே.ஜே. யேசுதாஸ், கே.எஸ். சித்ரா & பி. சுசீலா | இளையராஜா | கற்பூர முல்லை |
Poongaviyam Pesum Song Lyrics in Tamil
ஆண் : பூங்காவியம் பேசும் ஓவியம்…
ஆண் : பூங்காவியம் பேசும் ஓவியம்…
ஆணி பொன் தேரோ ஆரீரோ ஆரோ…
வெள்ளி பன்னீரோ ஆரீரோ ஆரோ…
ஆண் : பூங்காவியம் பேசும் ஓவியம்…
—BGM—
ஆண் : பாட்டுத்தான் தாலாட்டுதான்…
கேட்க கூடும் என நாளும்…
வாடினால் போராடினால்…
வண்ண கோகை நெடுங்காலம்…
ஆண் : தாய் முகம் தரிசனம் தரும் நாளிது…
சேய்மனம் உறவெனும் கடல் நீந்துது…
ஆண் : பாசம் மீறும் போது பேசும் வார்த்தை ஏது…
பாசம் மீறும் போது பேசும் வார்த்தை ஏது…
ஆண் : ஓஓஓ… மயக்கத்தில் மனம் சேர்ந்தது…
ஆண் : பூங்காவியம் பேசும் ஓவியம்…
ஆணி பொன் தேரோ ஆரீரோ ஆரோ…
வெள்ளி பன்னீரோ ஆரீரோ ஆரோ
—BGM—
பெண் : யார் மகள் இப்பூ மகள்…
ஏது இனி இந்த கேள்வி…
கூட்டிலே தாய் வீட்டிலே…
வாழும் இனி இந்த குருவி…
பெண் : பாடலாம் தினம் தினம் புது கீர்த்தனம்…
நாளெல்லாம் தளிர்விடும் இந்த பூவனம்…
பெண் : வானம் பூமி வாழ்த்தும்…
வாடை காற்றும் போற்றும்…
வானம் பூமி வாழ்த்தும்…
வாடை காற்றும் போற்றும்…
ஓஓஓ… புதுக்கதை அரங்கேறிடும்…
ஆண் : பூங்காவியம் பேசும் ஓவியம்…
பூங்காவியம் பேசும் ஓவியம்…
ஆணி பொன் தேரோ ஆரீரோ ஆரோ…
வெள்ளி பன்னீரோ ஆரீரோ ஆரோ…
ஆண் : பூங்காவியம் பேசும் ஓவியம்…
Notes : Poongaviyam Pesum Song Lyrics in Tamil. This Song from Karpoora Mullai (1991). Song Lyrics penned by Vaali. பூங்காவியம் பேசும் பாடல் வரிகள்.