ஒரு வானவில்லின்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்உதித் நாராயண்யுவன் ஷங்கர் ராஜாகாதல் சொல்ல வந்தேன்

Oru Vaanavillin Pakkathile Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஒரு வானவில்லின் பக்கத்திலே…
வாழ்ந்து பாா்க்கிறேன் நானே…
என் வாசல் மட்டும் நனைக்கும்…
மழையை பார்க்கிறேனே…

ஆண் : என்னை சொட்ட சொட்ட நனைய வைத்தாய்…
நெஞ்சை கிட்ட தட்ட கரைய வைத்தாய்…
அவள் அழகென்னும் நதியில் விழுகிறேன் இல்லையா…
என்னை உருமாற்றினாய்…
காதல் கதை ஏற்றினாய்…

ஆண் : ஒரு வானவில்லின் பக்கத்திலே…
வாழ்ந்து பாா்க்கிறேன் நானே…
என் வாசல் மட்டும் நனைக்கும்…
மழையை பார்க்கிறேனே…

BGM

ஆண் : நேற்று வரையில் நான் காற்று வீசினால்…
நின்று ரசித்ததே இல்லை…
விரல்கள் கோர்க்கையில் விருப்பம் கொடுத்திடும்…
நெருப்பில் எரிந்ததே இல்லை…

ஆண் : தொட்டு பேசினால் என்னவோ ஆகிறேன்…
உன்னை விட்டு பிரிகையில் கொஞ்சமாய் சாகிறேன்…

ஆண் : மிதக்கிறேன் பறக்கிறேன் மேகத்தை பிடிக்கிறேன்…
அருகிலே சந்தியா யோகத்தில் குதிக்கிறேன்…
இது போதும் பெண்ணே இது போதும்…

ஆண் : ஒரு வானவில்லின் பக்கத்திலே…
வாழ்ந்து பாா்க்கிறேன் நானே…
என் வாசல் மட்டும் நனைக்கும்…
மழையை பார்க்கிறேனே…

BGM

ஆண் : இது போதும் பெண்ணே இது போதும்…
இது போதும் பெண்ணே இது போதும்…

BGM

ஆண் : எங்க நடக்கிறேன் எதற்கு சிரிக்கிறேன்…
வயதை மறக்கிறேன் நானே…
குடைகள் இருந்துமே மழையில் நனைவது…
காதல் வந்த பின்தானே…

ஆண் : தந்தை அருகிலே இதுவரை தூங்கினேன்…
தன்னந் தனிமையை இன்று நான் விரும்பினேன்…

ஆண் : இது என்ன இளமைகள் நடந்திடும் மோதலா…
இதயத்தில் கொதிக்கிற காய்ச்சலே காதலா…
இது போதும் பெண்ணே இது போதும்…

ஆண் : ஒரு வானவில்லின் பக்கத்திலே…
வாழ்ந்து பாா்க்கிறேன் நானே…
என் வாசல் மட்டும் நனைக்கும்…
மழையை பார்க்கிறேனே…

ஆண் : என்னை சொட்ட சொட்ட நனைய வைத்தாய்…
நெஞ்சை கிட்ட தட்ட கரைய வைத்தாய்…
அவள் அழகென்னும் நதியில் விழுகிறேன் இல்லையா…
என்னை உருமாற்றினாள்…
காதல் கதை ஏற்றினாள்…
என்னை உருமாற்றினாள்…
காதல் கதை ஏற்றினாள்…


Notes : Oru Vaanavillin Pakkathile Song Lyrics in Tamil. This Song from Kaadhal Solla Vandhen (2010). Song Lyrics penned by Na Muthukumar. ஒரு வானவில்லின் பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top