| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| காமகொடியன் | பி. ஜெயச்சந்திரன் & சுனந்தா | இளையராஜா | பொன் விலங்கு |
Oru Kola Kili Song Lyrics in Tamil
—BGM—
பெண் : ஒரு கோலக் கிளி சொன்னதே…
உண்மையா உண்மையா…
அது பேசும் பிள்ளை மொழியே…
நன்மையா நன்மையா…
ஆண் : ரோஜாவிலே முள்ளில்லாத பூவில்லையே…
ராசாத்தியே முல்லை பூவில் முள்ளில்லையே… ஏ…
அந்த காதலின் கோயிலில் கூட்டிலே வாழ்ந்திடும்…
பெண் : கோலக் கிளி சொன்னதே…
உண்மையா உண்மையா…
—BGM—
ஆண் : காட்டுப்பூவிலே கட்டாத மாலை கிட்டுமோ… ஓ…
ஏட்டில் தேடினால் என்னென்ன வார்த்தை கொட்டுமோ… ஓஓ…
பெண் : கோதையானவள் சொல்ல மொழியின்றி பேதையானதேன்…
கூட்டில் வாழ்ந்திடும் சின்னஞ்சிறு குயில் காட்டில் சேர்ந்ததேன்…
ஆண் : வளையோசை வழி சொன்னது…
விழி உந்தன் வழி வந்தது…
அந்த காதலின் கோயிலில் கூட்டிலே வாழ்ந்திடும்…
பெண் : கோலக் கிளி சொன்னதே…
உண்மையா உண்மையா…
ஆண் : அது பேசும் பிள்ளை மொழியே…
நன்மையா நன்மையா…
—BGM—
பெண் : கோயில் சன்னதி உள்ளே சென்றாலே கிங்கிணி மணியும்…
ஓசை தந்ததே ஓன்றாக வாழ சொன்னதே வழியும்…
ஆண் : காலம் இணைத்ததே…
பிரித்திட இங்கும் யாரும் இல்லையே… ஏ…
வாழ்க்கை கிடைத்ததே…
நம்பி விடு இனி எந்தன் சொல்லையே… ஏ…
பெண் : ஒரு மாலை எனக்கு கொடுக்க…
வருங்காலம் முழுதும் இனிக்க…
அந்த காதலின் கோயிலில் கூட்டிலே வாழ்ந்திடும்…
ஆண் : கோலக் கிளி சொன்னதே…
உண்மையா உண்மையா…
பெண் : அது பேசும் பிள்ளை மொழியே…
நன்மையா நன்மையா…
ஆண் : ரோஜாவிலே முள்ளில்லாத பூவில்லையே… ஏ…
ராசாத்தியே முல்லை பூவில் முள்ளில்லையே… ஏ…
பெண் : அந்த காதலின் கோயிலில் கூட்டிலே வாழ்ந்திடும்…
ஆண் : கோலக் கிளி சொன்னதே…
உண்மையா உண்மையா…
பெண் : அது பேசும் பிள்ளை மொழியே…
நன்மையா நன்மையா…
Notes : Oru Kola Kili Song Lyrics in Tamil. This Song from Pon Vilangu (1993). Song Lyrics penned by Kamakodiyan. ஒரு கோலக் கிளி பாடல் வரிகள்.
