பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
சிதம்பரநாதன் | பிஜு நாராயணன் & பவதாரிணி | இளையராஜா | திருநெல்வேலி |
Ola Kudisayile Song Lyrics in Tamil
—BGM—
பெண் : நானா நானனா நானாணன் நானா…
நானா நானனா நானாணன் நானனா நானாணன் நானா…
பெண் : ஓலக் குடிசையிலே நான் இருந்தாலும்…
வானத்ததான் எம் மனசு வட்டம் இடுது…
—BGM—
ஆண் : நான் வாழும் கூட்டுக்குள்ளே தனிச்சிருந்தாலும்…
விண்மீன்கள் கூட்டத்தோட மனசு சுத்துது…
ஆண் : இல்லை என்றால் துன்பம் இல்லை…
செல்வம் என்றால் இன்பம் இல்லை…
என்றும் உள்ள செல்வம் மனசுதானே…
ஆண் : ஓலக் குடிசையிலே நான் இருந்தாலும்…
வானத்ததான் எம் மனசு வட்டம் இடுது…
—BGM—
ஆண் : பூங்குருவி தாலாட்டும் புல்வெளி சிரிக்கும்…
பொன் வெயில் மஞ்சளை தூவிப் பார்க்குமே…
தேனருவி நீரோட்டம் மான் போல் குதிக்கும்…
நீரலை பாடிடும் ஜதிகள் கேட்குமே…
ஆண் : மழை மேகத்து முத்தம் பயிர்கள் ஆடும் ஆட்டம்…
காற்றின் கைகள் பட்டால் அங்கே ஆனந்தம்…
வானம்பாடிகள் கூட்டம் நடுவில் வண்ணத் தோட்டம்…
காணக் காண நெஞ்சில் என்றும் ஆனந்தம்…
ஆண் : சித்திரம் போல் மண்ணில் அழகு
எத்தனை எத்தனை மானே…
அத்தனையும் பார்த்தால் இங்கு வேறென்ன வேண்டும்…
ஆண் : ஓலக் குடிசையிலே நான் இருந்தாலும்…
வானத்ததான் எம் மனசு வட்டம் இடுது…
—BGM—
ஆண் : தங்க வீணை ஆனாலும் தானாய்ப் பாடாது…
மீட்டவும் கேட்கவும் ஒருவன் வேண்டுமே…
ராகம் நூறு இருந்தாலும் தானாய் கேட்காது…
ராகங்கள் தெரிந்தவன் ஒருவன் வேண்டுமே…
ஆண் : இசையாலே மயங்காத மனம்தான் உலகில் ஏது…
இருண்ட மனதின் உள்ளே இசையும் நுழையாது…
என் பாடல் செல்லாத இடம்தான் உலகில் ஏது…
அதை தொடர்ந்து நீயும் செல்ல முடியாது…
ஆண் : அந்தி வானில் தென்றல் போல திங்கள் போல ஆடு…
உள்ளம் சொல்லும் உண்மை கீதம் என்றென்றும் பாடு…
ஆண் : ஓலக் குடிசையிலே நான் இருந்தாலும்…
வானத்ததான் எம் மனசு வட்டம் இடுது…
நான் வாழும் கூட்டுக்குள்ளே தனிச்சிருந்தாலும்…
விண்மீன்கள் கூட்டத்தோட மனசு சுத்துது…
ஆண் : இல்லை என்றால் துன்பம் இல்லை…
செல்வம் என்றால் இன்பம் இல்லை…
என்றும் உள்ள செல்வம் மனசுதானே…
ஆண் : ஓலக் குடிசையிலே நான் இருந்தாலும்…
வானத்ததான் எம் மனசு வட்டம் இடுது…
Notes : Ola Kudisayile Song Lyrics in Tamil. This Song from Thirunelveli (2000). Song Lyrics penned by Chidambaranathan. ஓலக் குடிசையிலே பாடல் வரிகள்.