பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
பா. விஜய் | சுவர்ணலதா | தேவா | உள்ளத்தை கிள்ளாதே |
O Nenje O Nenje Song Lyrics in Tamil
பெண் : ஓ நெஞ்சே ஒ நெஞ்சே…
சோகம் எந்தன் முகவரியா…
—BGM—
பெண் : என் காதல் பாட்டுக்கு…
கண்ணீர்த் துளியே முதல் வரியா…
—BGM—
பெண் : ஓ நெஞ்சே ஒ நெஞ்சே…
சோகம் எந்தன் முகவரியா…
என் காதல் பாட்டுக்கு…
கண்ணீர்த் துளியே முதல் வரியா…
பெண் : இந்தக் காதல் மலர்க்காட்சி…
அதற்கில்லை மனசாட்சி…
நான் கண்ணாடி சிற்பம்தான்…
கல் வீசி போனாயே நீ…
பெண் : என் கண்கள் இமை தாங்கும்…
இனி உன்னால் இடி தாங்கும்…
பெண் : ஓ நெஞ்சே ஒ நெஞ்சே…
சோகம் எந்தன் முகவரியா…
என் காதல் பாட்டுக்கு…
கண்ணீர்த் துளியே முதல் வரியா…
—BGM—
பெண் : வலது கண்ணில் வந்து உன் நினைவு…
ஒரு முள்ளை வைக்கிறது…
இடது கண்ணில் வந்து உன் நினைவு…
சுடும் தீயை வைக்கிறது…
—BGM—
பெண் : ஒரு சமயம் நெஞ்சில் உன் கனவு…
சிறு பூவை வீசியது…
ஒரு சமயம் நெஞ்சில் உன் கனவு…
ஒரு புயலை வீசியது…
பெண் : உன் பேரை சொல்லாத நேரத்திலே…
என் நாக்கு எனைத் திட்டும் கோபத்திலே…
பெண் : உன்னை எண்ணி அழுதிட இங்கே…
இரண்டு விழி தாங்காது…
நகக் கண்கள் அதிலும் அழுதால்…
அதுகூட போதாது…
பெண் : நான் உன்னால் சிறகானேன்…
நீ இல்லை விறகானேன்…
என் ரத்தத்தில் ஒரு பாதி…
கண்ணீராய் வெளியேறுதே…
பெண் : ஒரு சொல்லில் உயிர் தந்தாய்…
மறு சொல்லில் அதை கேட்டாய்…
பெண் : ஓ நெஞ்சே ஒ நெஞ்சே…
சோகம் எந்தன் முகவரியா…
என் காதல் பாட்டுக்கு…
கண்ணீர்த் துளியே முதல் வரியா…
—BGM—
பெண் : மேகங்களை போல நான் இருந்தால்…
உன்னை மழையாய் சேர்ந்திருப்பேன்…
வெண்ணிலவை போல நான் இருந்தால்…
உன்னை இரவில் தூங்க வைப்பேன்…
—BGM—
பெண் : தென்றல் அதைப் போல நான் இருந்தால்…
உன் மூச்சில் குடியிருப்பேன்…
பூமியினைப் போல நான் இருந்தால்…
உன் பாதத்தை சுமந்திருப்பேன்…
பெண் : ஸ்தம்பித்து நிற்கின்ற கிரகம் எது…
நீயின்றி வாழ்கின்ற நான்தான் அது…
பெண் : உயிர் இருக்கும் போதே கேட்டேன்…
உன்னிடத்தில் விண்ணப்பம்…
உன் மடியில் உயிர் விடத்தானே…
மீண்டும் ஓர் சந்தர்ப்பம்…
பெண் : மரம் தேடும் பறவை நான்…
முகம் தேடும் உருவம் நான்…
அட இப்போதும் அப்போதும்…
என் மூச்சு தான் நிற்குமோ…
பெண் : இதயத்தில் சிறு துவாரம்…
நீ போனால் பெரிதாகும்…
பெண் : ஓ நெஞ்சே ஒ நெஞ்சே…
சோகம் எந்தன் முகவரியா…
என் காதல் பாட்டுக்கு…
கண்ணீர்த் துளியே முதல் வரியா…
பெண் : இந்தக் காதல் மலர்க்காட்சி…
அதற்கில்லை மனசாட்சி…
நான் கண்ணாடி சிற்பம்தான்…
கல் வீசி போனாயே நீ…
பெண் : என் கண்கள் இமை தாங்கும்…
இனி உன்னால் இடி தாங்கும்…
பெண் : ஓ நெஞ்சே ஒ நெஞ்சே…
சோகம் எந்தன் முகவரியா…
என் காதல் பாட்டுக்கு…
கண்ணீர்த் துளியே முதல் வரியா…
Notes : O Nenje O Nenje Song Lyrics in Tamil. This Song from Ullathai Killathe (1999). Song Lyrics penned by Pa. Vijay. ஓ நெஞ்சே ஒ நெஞ்சே பாடல் வரிகள்.