நெஞ்சில் மாமழை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைஹரிசரண் & ஸ்வேதா மோகன்பி. அஜனீஷ் லோக்நாத்நிமிர்

Nenjil Maamazhai Song Lyrics in Tamil


BGM

ஆண் : நெஞ்சில் மாமழை நெஞ்சில் மாமழை…
தந்து வானம் கூத்தாட…
கொஞ்சும் தாமரை கொஞ்சும் தாமரை…
வந்து எங்கும் பூத்தாட…

ஆண் : எத்தனை நாள் எத்தனை நாள் பார்ப்பது…
எட்டி நின்று எட்டி நின்று காய்வது…
கள்ள குரல் பாடல் உள்ளே ஓடுது…
கண் மூடி கண் மூடி காதோரம் பாடுது…

ஆண் : நெஞ்சில் மாமழை நெஞ்சில் மாமழை…
தந்து வானம் கூத்தாட…
கொஞ்சும் தாமரை கொஞ்சும் தாமரை…
வந்து எங்கும் பூத்தாட…

BGM

பெண் : வாரத்தில் எத்தனை நாள் பார்ப்பது…
அன்றாடம் வந்து பார்க்க ஏங்குது…
வாராமல் போகும் நாட்கள் வீணே என…
வம்பாக சண்டை போட வாய்க்குது…

ஆண் : சொல்லப் போனால் என் நாட்களை…
வண்ணம் பூசி தந்தவளும் நீதான்…
துள்ளல் இல்லா என் பார்வையில்…
தூண்டில் மீனாய் வந்தவளும் நீதான்…

ஆண் : எத்தனை நாள் எத்தனை நாள் பார்ப்பது…
எட்டி நின்று எட்டி நின்று காய்வது…
கள்ள குரல் பாடல் உள்ளே ஓடுது…
கண் மூடி கண் மூடி காதோரம் பாடுது…

ஆண் : நெஞ்சில் மாமழை நெஞ்சில் மாமழை…
தந்து வானம் கூத்தாட…

BGM

பெண் : பாசாங்கு செய்ததெல்லாம் போதுமே…
ராசாவை தேடி கண்கள் ஓடுமே…
ரோசாப்பூ மாலை ரெண்டு வேண்டுமே…
பேசாமல் மாற்றிக் கொள்ள தோன்றுமே…

ஆண் : பெண்கள் இல்லா என் வீட்டிலே…
பாதம் வைத்து நீயும் வர வேண்டும்…
தென்றல் இல்லா என் தோட்டத்தில்…
உன்னால்தானே காற்று வரும் மீண்டும்…

ஆண் : எத்தனை நாள் எத்தனை நாள் பார்ப்பது…
எட்டி நின்று எட்டி நின்று காய்வது…
கள்ள குரல் பாடல் உள்ளே ஓடுது…
கண் மூடி கண் மூடி காதோரம் பாடுது…

ஆண் : நெஞ்சில் மாமழை நெஞ்சில் மாமழை…
தந்து வானம் கூத்தாட…
கொஞ்சும் தாமரை கொஞ்சும் தாமரை…
வந்து எங்கும் பூத்தாட…

ஆண் : எத்தனை நாள் எத்தனை நாள் பார்ப்பது…
எட்டி நின்று எட்டி நின்று காய்வது…
கள்ள குரல் பாடல் உள்ளே ஓடுது…
கண் மூடி கண் மூடி காதோரம் பாடுது…

BGM


Notes : Nenjil Maamazhai Song Lyrics in Tamil. This Song from Nimir (2018). Song Lyrics penned by Thamarai. நெஞ்சில் மாமழை பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top