பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வாலி | எஸ்.பி. பாலசுப்ரமணியம் & உமா ரமணன் | சங்கர் கணேஷ் | மனைவி ஒரு மந்திரி |
Nee Parkama Poriye Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : நீ பாக்காம போறியே இது நியாயமா…
உன் பாட்டாத்தான் பாடுறேன் நெடு நேரமா…
மாசம் தேதிதான் பாக்க வேணுமா நீ பேச…
மாலை நேரத்து ஈர காத்துல நான் கூச…
பெண் : நான் பாக்கம போவேனா ஒரு ஓரமா…
உன் பாட்டாத்தான் பாடுறேன் பல வாரமா…
பார்த்து பேசினால் வேர்த்து ஊத்துதே என் தேகம்…
கால சூரியன் போல காயுதே உன் தேகம்…
ஆண் : நீ பாக்காம போறியே இது நியாயமா…
பெண் : நான் பாக்கம போவேனா ஒரு ஓரமா…
—BGM—
பெண் : மஞ்சள் பூசுற போதும் மச்சான் ஞாபகம் ஓடும்…
நினைக்குற போதே சிலிர்க்கிறதென்ன…
ஆண் : உச்சந்தலையில சூடு தானா ஏறுது பாரு…
உணர்ச்சியை நீதான் உசுப்புவது என்ன…
பெண் : உள்ளக் கதவுகள மெல்ல திறக்கிறியே…
ஆண் : வெள்ளம் வருகையிலே மடையை அடைக்குறியே…
பெண் : நாலு பேர்கள் பார்க்கும் போது மானம் போகுமே…
ஆண் : நீ பாக்காம போறியே இது நியாயமா…
உன் பாட்டாத்தான் பாடுறேன் நெடு நேரமா…
பெண் : பார்த்து பேசினால் வேர்த்து ஊத்துதே என் தேகம்…
கால சூரியன் போல காயுதே உன் தேகம்…
ஆண் : நீ பாக்காம போறியே இது நியாயமா…
பெண் : நான் பாக்கம போவேனா ஒரு ஓரமா…
—BGM—
பெண் : பந்த கால்கள போட்டு பன்னீர் பூக்களை சூட்டு…
உதட்டுல தேனு கொடுக்கிறேன் நானு…
ஆண் : ஒத்தி போடுவதேம்மா ஒட்டி பேசிட வாமா…
பசிக்குற நேரம் படைச்சிட வேணும்…
பெண் : ஆக்க பொறுத்திருந்தும் ஆறப் பொறுக்கலையே…
ஆண் : இன்னும் காத்திருக்க என்னால் ஆகலையே…
பெண் : கேணி நீரை ஆற்று வெள்ளம் கொண்டு போகுமா…
பெண் : நான் பாக்கம போவேனா ஒரு ஓரமா…
உன் பாட்டாத்தான் பாடுறேன் பல வாரமா…
ஆண் : மாசம் தேதி தான் பாக்க வேணுமா நீ பேச…
மாலை நேரத்து ஈர காத்துல நான் கூச…
ஆண் : நீ பாக்காம போறியே இது நியாயமா…
பெண் : நான் பாக்கம போவேனா ஒரு ஓரமா…
Notes : Nee Parkama Poriye Song Lyrics in Tamil. This Song from Manaivi Oru Mandiri (1988). Song Lyrics penned by Vaali. நீ பாக்காம போறியே பாடல் வரிகள்.