நாணல் பூவாய்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
எஸ். ஞானகரவேல்ஜனனி எஸ்.வி & கிருஷ்ண குமார்கிருஷ்ண குமார்கிருமி

Naanal Poovaai Song Lyrics in Tamil


பெண் : நாணல் பூவாய் நானும் வளைந்தடா…
மூங்கில் தேகம் மூச்சில் இசைந்தடா…
மூன்றாம் பாலில் மூழ்கி விளையாட…
யாக்கை யுத்தம் மீண்டும் அரங்கேற…

ஆண் : வெல்வேனே உலகை நொடியிலே…
வீழ்ந்தேனே பூவின் மடியிலே…

BGM

ஆண் : வெல்வேனே உலகை நொடியிலே…
வீழ்ந்தேனே பூவின் மடியிலே…

BGM

ஆண் : முத்தம் கேட்டு இதழ்கள் படியேற…
சத்தம் போட்டு இதயம் தடுமாற…

பெண் : வாடை காற்றில் தேகம் குளிராக…
வா வா என்னை போர்த்து அனலாக…

ஆண் : தேனும் நீயும் ஒன்றுதான்…
தேனில் மூழ்கும் வண்டு நான்…

பெண் : தீயும் நீயும் ஒன்றுதான்…
தீயில் ஒளிரும் தீபம் நான்…

ஆண் : தேவை தீருமா… தேடல் தொடருமா…

ஆண் : வெல்வேனே உலகை நொடியிலே…
வீழ்ந்தேனே பூவின் மடியிலே…

BGM

ஆண் : வெல்வேனே உலகை நொடியிலே…
வீழ்ந்தேனே பூவின் மடியிலே…


Notes : Naanal Poovaai Song Lyrics in Tamil. This Song from Kirumi (2015). Song Lyrics penned by S.Gnanakaravel. நாணல் பூவாய் பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top