பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வாலி | எஸ்.பி. பாலசுப்ரமணியம், ஜிக்கி & வாணி ஜெயராம் | சங்கர் கணேஷ் | கண்ணில் தெரியும் கதைகள் |
Naan Unna Nenachchen Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : நான் ஒன்ன நெனச்சேன்…
நீ என்ன நெனச்சே…
தன்னாலே நெஞ்சு ஒண்ணாச்சு…
ஆண் : நம்ம யாரு பிரிச்சா…
ஒரு கோடு கிழிச்சா…
ஒன்னான சொந்தம் ரெண்டாச்சு…
ஆண் : ஒன்னாலத்தானே பல வண்ணம் உண்டாச்சு…
நீ இல்லாமத்தானே அது மாயம் என்றாச்சு…
அது மாயம் என்றாச்சு…
ஆண் : நான் ஒன்ன நெனச்சேன்…
நீ என்ன நெனச்சே…
தன்னாலே நெஞ்சு ஒண்ணாச்சு…
—BGM—
ஆண் : நீரு நெலம் வானம் எல்லாம் நீயாச்சு…
நிறம் கெட்டு இப்போ வெட்டவெளி ஆயாச்சு…
ஆண் : நித்தம் நித்தம் பூத்தாயே…
நான் பறிச்ச ரோசாவே…
இனிமே எப்ப வரும் பூவாசம்…
செல்லம்மா என்னம்மா சொல்லம்மா…
ஆண் : நான் ஒன்ன நெனச்சேன்…
நீ என்ன நெனச்சே…
தன்னாலே நெஞ்சு ஒண்ணாச்சு…
—BGM—
பெண் : அப்போ வந்து வாங்கித்தந்தே பூ சேல…
நீ எப்போ வந்து போடப்போறே பூமாலே…
பெண் : அம்மன் சிலை இங்கேதான்…
ஆடித் தேரு அங்கேதான்…
இருந்தா கோயில் குளம் ஏனைய்யா…
செல்லைய்யா என்னைய்யா சொல்லைய்யா…
பெண் : நான் ஒன்ன நெனச்சேன்…
நீ என்ன நெனச்சே…
தன்னாலே நெஞ்சு ஒண்ணாச்சு…
—BGM—
பெண் : மாடு மனை எல்லாம் உண்டு என்னோட…
என் நெஞ்ச மட்டும் போகவிட்டேன் உன்னோட…
பெண் : உன்னத்தொட்டு நான் வாரேன்…
என்னவிட்டு ஏன் போறே…
நிழல்போல் கூட வந்தா ஆகாதோ…
செல்லைய்யா என்னைய்யா சொல்லைய்யா…
பெண் : நான் ஒன்ன நெனச்சேன்…
நீ என்ன நெனச்சே…
தன்னாலே நெஞ்சு ஒண்ணாச்சு…
ஆண் : நான் ஒன்ன நெனச்சேன்…
பெண் : நீ என்ன நெனச்சே…
தன்னாலே நெஞ்சு ஒண்ணாச்சு…
ஆண் : நம்ம யாரு பிரிச்சா…
பெண் : ஒரு கோடு கிழிச்சா…
ஒண்ணான சொந்தம் ரெண்டாச்சு…
ஆண் : ஒன்னாலத்தானே பல வண்ணம் உண்டாச்சு…
பெண் : நீ இல்லாமத்தானே அது மாயம் என்றாச்சு…
ஆண் : அது மாயம் என்றாச்சு…
ஆண் : நான் ஒன்ன நெனச்சேன்…
நீ என்ன நெனச்சே…
தன்னாலே நெஞ்சு ஒண்ணாச்சு…
Notes : Naan Unna Nenachchen Song Lyrics in Tamil. This Song from Kannil Theriyum Kathaikal (1980). Song Lyrics penned by Vaali. நான் ஒன்ன நெனச்சேன் பாடல் வரிகள்.